Friday, August 7, 2009


வணக்கம் ,

உதட்டளவில் தேன் , உள்ளம் முழுதும் ஆலகால விசம்.
இதுதான் மலேசிய அரசு இந்நாட்டு இந்தியர்களின் பால் நடந்து கொள்ளும் விதம்!

ஓரே மலேசிய இனம் என்று அறிவித்த நாவில் எச்சில் காயும் முன் நம் பிரதமர் அறிமுகப்படுத்திய http://www.1malaysia.com.my எனும் அகப் பக்கத்தில் இந்நாட்டு மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய இனமாகிய இந்தியர்கள் பேசும் தமிழ் மொழிக்கு இடமில்லை !!!

பல்லினங்கள் வாழும் இத்திருநாட்டில் , அந்தந்த இனங்களின் மொழி , கலை , கலச்சாரம் , பண்பாடு , என அனைத்து அம்சங்களையும் மதித்து அங்கீகரிப்பதன் மூலமே ஒன்றினைந்த ஒரே மலேசிய இனத்த்தை உருவாக்க முடியும் என்பதை இந்த அரசாங்கம் பலமுறை மிக மிக சவுரியமாக மறப்பதை போல் நடித்து உரிமைகளை மறுப்பதை மக்கள் இனியும் நம்பத் தயாரில்லை !!

மொழி ஒர் இனத்தின் ஆனிவேர் , முதுகெலும்பு , அடையாளம் , எதிர் கால சந்ததியினரின் தொப்புள் கொடி என்பதை நன்கு அறிந்திருந்தும் இந்த அரசாங்கம் ஏன் இந்நாட்டு குடிமக்களாகிய இந்திய வம்சாவளியினரை கங்கனம் கட்டி வஞ்சிக்கிறது???

தமிழை ம்றுத்ததின் மூலம் இந்த அரசு நமக்கு உணர்த்துவதுதான் என்ன ? தேசிய நீரோட்டத்திற்க்கு இந்தியர்கள் தேவை இல்லையா ? அல்லது ஒரே மலேசிய இனம் இந்தியர்களின் புதைகுழியின் மீது புலரப்போகிறதா ???

ஆங்கிலம் , மலாய் , சீனம் ஆகிய மொழிகளில் பிரசுரிக்கப்பட்ட பிரதமரின் அகப் பக்கத்தில் தமிழை மட்டும் குழித் தோண்டி புதைத்த காரணத்தை மலேசிய பிரதமர் இந்நாட்டு இந்தியர்களுக்கு விளக்கியே ஆக வேண்டும் !!

தெருவுக்கு ஓர் அரசு சாரா இந்தியர் இயக்கமும் , விகிதா சாரத்தை விஞ்சும் அரசியல் கட்சிகளும் இனம் புதைக்கப் படுவதை கைகட்டி வேடிக்கை பார்க்கும் அவலமும் இந்நாட்டில் அரங்கேற்றம் கண்டு கொண்டிருப்பது இந்த இனதிற்க்கு என்றும் நீங்கா சாபக்கேடோ !!!!


நன்றி ,

சம்புலிங்கம்
கோலாலம்பூர்
செய்தியோடை

No comments:

Post a Comment