Wednesday, December 22, 2021

ருண பந்தம்

 


"  ருண பந்தம்"

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.

அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். சிலருக்கு நல்லது செய்கிறோம். பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம்.


இந்த கொடுக்கல் வாங்கலே "ருண பந்தம்" எனப்படுகிறது. சிலருடைய உறவுகள் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. சிலருடைய வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சிலர் கூடவே இருந்து தொல்லைப் படுத்துகிறார்கள். சிலரின் வருகை துக்கத்தை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இது ஏன் நிகழ்கிறது என்று தெரியாமலேயே தன் போக்கில் நம் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


கனவில் கூட காண முடியாத பல ஆச்சர்யங்கள் நமக்கு சில சமயங்களில் ஏற்படுகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்? ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள்? நாமே நம் தாய் தந்தையை, சகோதர சகோதரிகளை, நண்பர்களை, மனைவியை, கணவனை, பிள்ளைகளை, தேர்ந்தெடுப்பதில்லை. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யாரேனும் கூறலாம்.


ஆனாலும் அதுவும் தானே நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது. முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு நம் கையில் இல்லை. ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய்விடுவர். அது இறப்பால் மட்டும் அல்ல, பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும் நம் வாழ்வில் வேறு கோணத்தில் வேறு பார்வையில் தோன்றுவர். எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது. அது என்ன? சமன் செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் கர்ம கதிகளின் எச்சங்களே அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா? இதற்கெல்லாம் தெரிந்த ஒரேயொரு காரணம் நம்முடைய "கர்ம வினை" தான்.


இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம். அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம். அந்தக் கூட்டின் பெயரே "சஞ்சித கர்மா" எனப்படுகிறது. அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே 'பிராரப்தக் கர்மா' எனப்படுகிறது.


இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல் நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது. நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது. இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம் ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக் கொள்கிறோம். இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே. இது தவிர 'ஆகாம்ய கர்மா' என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது.


யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது. அவரவர்கள் செய்வினையின் பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும். துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்ம கதியே. இதைத் தான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று சொல்லப்படுகிறது.


நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு. அப்படி என்றால் ஆகாமி கர்மா நம்முடைய கையிலேயே இருக்கிறது. இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன் கையிலேயே உள்ளது.


நீங்கள் செய்யும் நற்செயல்களையும், வினைச் செயல்களையும் நீங்கள் மட்டுமே ஏதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப்போகிறீர்கள் என்பதை உணர்ந்தால், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? எப்படி நடந்து கொள்ளப் போகிறீர்கள்? எது போன்ற வாழ்க்கைத் தடத்தை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறீர்கள் என்பது உங்களுக்குப் புலப்படும்.


பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது.


ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான். அதேபோல பெரும் பணக்காரர்களையும் 'துக்கங்கள்' விடுவதில்லை. சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை உண்ண முடியாது.


பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தன கால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது. 'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்', 'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்' நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச் செய்வது மட்டுமே. பலனை ஆண்டவனிடம் விட்டு விடுவோம். நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே பலனாகப் பெறுகிறோம்.


எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை. நமக்கு நடக்கும் நடக்கப்போகும் நல்லதை யாராலும் கெடுக்க முடியாது. அதேபோல் தீமையையும் கெடுக்க முடியாது.

Wednesday, December 8, 2021

மனிதப் பிறப்பு

 திருமூலரின்  திருமந்திரத்தில் -

( ஆண்/பெண்  குழந்தை  பிறக்க )

குழந்தை  குறையில்லாது பிறக்க, "உடல் உறவு மூலம்  நல்ல குழந்தை

உண்டாக "திருமூலர் பெருமான்" கூறிய நமது  பாரம்பரிய அபூர்வ ரகசியங்களை  நம் சித்தர்களின் குரல் அன்பர்களுக்காக முழுமையாக எழுதுகிறேன்.!!!


அவசியம் ஒவ்வொரு மனிதரும் அறிய வேண்டிய அற்புத பதிவு

உறவின் போதே ஆண்/பெண்/அலி/திறமை/ஊனம் நிற்ணயிக்க படுகிறது)

மாண்பதுவாக வளர்கின்ற வன்னியும்

காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை

பூண்பது மாதா பிதா வழி போலவே

ஆம்பதி செய்தான் அச் சோதி தன் ஆண்மையே. 

                    - திருமந்திரம் = 477


(477) இறைவன் தாய் தந்தை வழி உடலைப் படைக்கின்றான்:


உயிர்க்கு ஆண், பெண், அலி என்ற வேறுபாடு இல்லை. பெருமையுடனே வளர்கின்ற ஒளியான உயிரை ஆண் என்றோ பெண் என்றோ அலி என்றோ காண்பது கற்பனையாகும். அப்படிப்பட்ட உயிருக்கு ஏற்ற உடலை தாய் தந்தையின் தன்மையைக் கொண்டு படைப்பது சிவபெருமானின் வல்லமையாம்.


ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும்

பூண்இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்

தாண்மிகும் ஆகில் தரணி முழுது ஆளும்

பாணவம் மிக்கிடின் பாய்ந்ததும் இல்லையே. 

                       - திருமந்திரம் = 478


(478) கருவில் ஆண் பெண் மாற்றம் அமையும் விதம்:


ஆண் பெண் கூடும் போது ஆண் பண்பு மிகுந்தால் அவ்வுயிர் ஆண் ஆகும். பெண் பண்பு மிகுந்தால் அவ்வுயிர் பெண்ணாகும். ஆண் பெண் பண்பு சமமானால் அவ்வுயிர் அலியாகும். ஆள் வினை முயற்சியில் கருத்து மிகுதியாய் இருந்தால் பிறக்கும் உயிர் சிறப்பாய்ப் பிறக்கும். அது உலகை ஆளும். கூட்டுறவின் போது தாழ்ச்சி மனப்பான்மை இருக்குமானால் சுக்கிலம் பாய்வது நின்று விடும்.


பாய்ந்தபின் அஞ்சுஓடில் ஆயுளும் நூறு ஆகும்

பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்

பாய்ந்திடும் வாயுப் பகுத்து அறிந்து இவ்வகை

பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே. 

              - திருமந்திரம் = 479


(479) யோகி சுக்கிலத்தைப் பாய்ச்சல்:


ஆணின் சுக்கிலம் ஆணிடமிருந்து பிரிந்து ஐந்து விரற்கிடை ஓடி விழுமாயின் பிறக்கும் உயிரின் வாழ்வு நூறு ஆண்டு. அந்தச் சுக்கிலம் நான்கு விரற்கிடை ஓடி விழுந்தால் அந்தஉயிரின் வாழ்வு எண்பதாண்டு. சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவை இப்படி நன்றாய் உணர்ந்து பாய்ந்திடச் செய்யும் ஆற்றல் யோகிக்கு உண்டு. யோகி வேண்டியபடி சுக்கிலத்தைச் செலுத்தி விரும்பியபடி குழந்தை பெற முடியும்.


பாய்கின்ற வாயுக் குறையின் குறள் ஆகும்

பாய்கின்ற வாயு விளைக்கின் மு


டம் ஆகும்

பாய்கின்ற வாயு நடுப்படின் கூன் ஆகும்

பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே. 

                  - திருமந்திரம் = 480


(480) சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவுக்கு ஏற்பக் குழந்தையின் அங்கம் அமைதல்:


சுக்கிலத்தைச் செலுத்தும் வாயு குறைந்திடின் குழந்தையானது குட்டையாய்ப் பிறக்கும். பாயும் வாயு மெலிந்திடின் முடமாகும். அவ்வாயு தடைப்பட்டால் குழந்தை கூனாய்ப் பிறக்கும். ஆனால், ஆராய்ந்து பார்த்தால், பெண்களுக்கு வாயு இல்லை.


மாதா உதரம் மலம் மிகின் மந்தன் ஆம்

மாதா உதரம் சலம் மிகின் மூங்கை ஆம்

மாதா உதரம் இரண்டு ஒக்கின் கண் இல்லை

மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.      

                - திருமந்திரம் = 481


(481)  கரு வளரும் காலத்தில் தாயின் வயிறு இருக்க வேண்டிய நிலைமை:


அன்னையின் வயிற்றில் கருவாக அமைந்த குழந்தைக்கு அந்த அன்னையின் வயிற்றில் மலம் மிகுமானால் அக்குழந்தை மந்த புத்தியுடையதாய் விளங்கும். அவள் வயிற்றில் நீர் மிகுமானால் அந்தக் குழந்தை ஊமையாய் விடும். மலமும் நீரும் மிகுந்து இருக்குமானால் அக்குழந்தை குருடாகிவிடும்.


குழவியும் ஆணாம் வலத்தது வாகில்

குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்

குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்

குழவி அலி ஆகும்கொண்ட கால் ஒக்கிலே. 

               - திருமந்திரம் = 482


(482) மூச்சுக் காற்றின் இயல்புக்கு ஏற்பக் குழந்தையின் பால் வேறுபாடு அமையும்:


இன்ப நுகர்ச்சியின் போது ஆண்மகனிடம் உயிர்ப்பான மூச்சு வலது பக்க நாசியில் (சூரிய கலையில்) இயங்கினால் ஆண் குழந்தையாகும்.

ஆண்மகனிடம் உயிர்ப்பான மூச்சு இடது பக்க நாசியில் (சந்திர கலையில்) இயங்கினால் பெண் குழந்தையாகும்.

ஆணின் மூச்சு வலது பக்க நாசியிலும், இடது பக்க நாசியிலும் இரண்டும் ஒத்து இயங்கினால் குழந்தை அலியாகும்.

சுக்கிலத்தைச் செலுத்தும் பிராண வாயுவுடன் அபானன் எனப்படும் மலக்காற்று எதிர்த்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும்.

கொண்டநல் வாயு 


இருவர்க்கும் ஒத்தெழில்

கொண்ட குழவியுங் கோமளம் ஆயிடும்

கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்

கொண்டதும் இல்லையாம் கோள்வளை யாட்கே. 

                - திருமந்திரம் = 483


(483) உயிர்ப்பின் இயக்கத்து ஏற்பக் கரு அமைதல்:


ஆண் பெண் இருவருக்கும் உயிர்ப்பு ஒத்து இருக்குமானால் கருவில் உள்ள குழந்தை அழகாக விளங்கும். புணரும் அக்காலத்தில் அந்த இருவருக்கும் உயிர்ப்புத் தடுமாறினால் பெண்ணுக்குக் கரு உண்டாக வாய்ப்பு இல்லையாகும்.


கோள்வளை உந்தியில் கொண்ட குழவியும்

தால்வளை உள்ளே தயங்கிய சோதியாம்

பால்வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உருப்

போல் வளர்ந்து உள்ளே பொருந்து உரு ஆமே. 

                  - திருமந்திரம் = 484


(484) பொற்சிலை எனப் பிறக்குமாறு:


பெண்ணின் வயிற்றில் அமைந்த குழந்தை அண்ணாக்கினுள்ளே விளங்கும் பேரொளி போன்றதாகும். அக் குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்து வளர்ந்து சூரியனின் பொன் வடிவைப் போன்று வளர்ந்து முழு வடிவத்தைப் பெறும்.


குழந்தை குறையில்லாது பிறக்க திருமூலர் சொல்லும் தகவல்!!!

------------------------------------------------------------------------------------------------------------------------------


"அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது, கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது" என்றார் தமிழ் மூதாட்டி அவ்வை. இத்தகைய எல்லா நலத்துடன் கூடிய குழந்தையை பெற்றெடுக்க சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் என்கிறார் திருமூலர். (மேற்படி தகவல்களைகூறிய சித்தர்களுள் மிகச்சிறந்தவரான திருமூலர் 5,900 ஆண்டுகள், அதாவது கி.மு.6 ஆயிரம் முதல் கி.மு.100 வரையில் வாழ்ந்ததாக கூறுகிறார்கள்)


ஒரு குழந்தை குறையுடன் பிறக்கிறது

என்றால் அதற்கு காரணம் ஆண்கள் தான் என்கிறார் திருமூலர். 


தாம்பத்திய உறவின் போது மன அமைதி, தெளிவு, விவேகம் இன்றி மிருகத்தனமாக ஆண்கள் நடந்து கொண்டால் குறைபாடுள்ள குழந்தை தான் பிறக்கும் என்று கூறும் அவர், கணவன் ஆனவன், தனது வாயு நிலையை அறிந்து, பொறுமை காத்து, மனைவியுடன் கூடிக் குலாவி கலவி செய்தால் இதனை தவிர்க்கலாம் என்றும் கூறுகிறார்.


கணவனும், மனைவியும் கூடும் முறையால், எப்படிப்பட்ட குழந்தை பிறக்கிறது என்பதற்கு திருமூலர் தரும் விளக்கம்......


மனைவியுடன் கணவன் உறவு கொள்ளும்போது அவனது சுவாசமானது

சீரான அளவோடு பாய வேண்டும். அவ்வாறு இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு உடல் குறை எதுவும் இருக்காது. 


உறவின் போது ஆணின் வலது நாசி வழியாக சுவாசம் சென்றால் ஆண் குழந்தை உருவாகும். சுவாசம் இடது பக்கம் சென்றால் அது பெண்

குழந்தை உருவாக காரணமாகும். இரு நாசியின் வழியாகவும் மூச்சு ஒரே மாதிரி வந்தால் பிறக்கும் குழந்தை ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல் திருநங்கையாக இருக்கும்.


ஆணின் சுவாசமானது அளவில் குறைந்து போனால் பிறக்கும் குழந்தை குள்ள வடிவமாக? இருக்கும். சுவாசம் இயல்பான நிலையில் இல்லாமல்

இளைத்து வெளிப்படுமானால் பிறக்கும்

குழந்தை முடமாகும். சுவாசத்தின் அளவு குறைந்தும், திடமின்றியும் வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு கூன் விழும்.


இப்படி, தனது திருமந்திரத்தில் விளக்கம் தரும் திருமூலர், "அந்த" உறவின்போது பெண்கள் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதையும் பட்டியலிடுகிறார்.


கூடலின்போது பெண்ணின் வயிற்றில் மலம் சரிவர கழியாமல் தங்கி மிச்சம் இருந்தால் பிறக்கும் குழந்தை மந்த குணம் கொண்டதாக இருக்கும். இதுபோல், பெண்ணின் உடலில் சிறுநீர்

தங்கியிருந்தால் பிறக்கும் குழந்தை

ஊமையாகவும், மலம், சிறுநீர் இரண்டும்

சரியான அளவில் தேங்கி இருக்குமானால் பிறக்கும் குழந்தை குருடாகும் என்கிறார்.


சரி... எந்த நிலையில் தான் நல்ல,

ஆரோக்கியமான குழந்தை பெற முடியும்

என்று கேட்கிறீர்களா? அதற்கு திருமூலரின் பதில்......


தாம்பத்திய உறவின்போது ஆண் & பெண் இருவரது மூச்சுக் காற்றும் ஒரே அளவாக இருக்க வேண்டும்.  அவ்வாறு மூச்சு வரும்போது வெளிப்படும் ஆணின் விந்து, பெண்ணின் சுரோணிதத்துடன் (கருமுட்டை) சேர்ந்து உண்டாகும் குழந்தையானது மிகுந்த அழகினை உடையதாக இருக்கும். ஆண் தக்க மூச்சுப்பயிற்சி பெற்றிருந்தால், அவன் எண்ணும் விருப்பப்படி மூச்சினை அடக்கி, கட்டுப்படுத்தி, தான் விரும்பும் வகையில் மூச்சினை வெளியிடும் ஆற்றலை பெற முடியும். அவ்வாறு இருக்கும் போது, குழந்தையின் தோற்றத்திலும் தான் விரும்பியதை ஒரு ஆண் சாதிக்க முடியும்.


இப்படி அறிவுரை வழங்கும் திருமூலர், அந்த நேரத்திற்கு எப்படி தயாராவது என்பது பற்றியும் கூறியுள்ளார்.


உறவு கொள்ளும் காலத்தை முன்னதாகவே திட்டமிட்டு, கணவன், மனைவி இருவரும் தங்களில் மலம், சிறுநீர் எதுவும் தங்காதபடி, அவற்றை வெளியேற்றி விட வேண்டும். ஒருமித்த எண்ணத்துடன், படபடப்பு எதுவும் இன்றி, உணவு உட்கொண்ட பின்னர், வயிற்றில் அந்த உணவு ஜீரணமாகும் வரை காத்திருக்க வேண்டும். தொடர்ந்து, காதல் இன்பம் பேசி, ஒருவரை ஒருவர் தழுவி, தீண்டி, புற உடல் இன்பங்களை துய்த்து, அதன் பின்னரே புணர்தல் வேண்டும். அப்போதும், மூச்சு படபடப்பாக வெளிப்படக் கூடாது. இருவரும் சீரான அளவில் மூச்சை

வெளியிட வேண்டும். இதில் வேகம் காட்டுவது வீண் கரு கலைதலுக்கு

ஏதுவாகும் என்கிறார் திருமூலர்.


உடலுறவில் கணவனும் மனைவியும்:

-------------------------------------------------------------------


மாதம் ஒன்றுக்கு எத்தனை முறை கணவனும் மனைவியும் ஒன்று சேரலாம்? தற்போது நமது இந்திய நாட்டில் பெரும்பாலும் பகல், இரவு, எந்த நேரத்திலும் தாம்பத்தியம் கொண்டுவிடுகிறார்கள். இதன் காரணமாக ஆண்கள், பெண்கள் தேகம் வெளுத்து,வாடி, வருந்தி வலுவற்று விடுகின்றனர். ஆகாரம், மைதுனம் ,நித்திரை, பயம் இந்த நான்கிலும் அதிக ஜாக்கிரதையாக இருபாலரும் இருத்தல் அவசியம்.


இதில் பாதிப்பு ஆண்களுக்கே அதிகம். பகற்பொழுதில் ஒருக்காலும் ஒன்று சேருவது கூடாது. இதனால் ஆண்களின் வீரியம் பங்கம் உண்டாகும் என்று இராமலிங்க ஸ்வாமிகள் சொல்லியுள்ளார். ஆகாரம், மைதுனம் ஆகிய இரண்டிலும் மிக்க ஜாக்கிரதையாக இருத்தல் அவசியமாகும். இல்லை எனில் தேகமானது அதி சீக்கிரத்தில் கூற்றுவனுக்கு இரையாகிவிடும் என்றும் இராமலிங்க ஸ்வாமிகள் கூறுகிறார். சுக்கிலமாகிய திரியை விசேஷமாக தூண்டி, அடிக்கடி சுக்கிலத்தை வீணே செலவு செய்தால், திரியானது அணைந்து போய், ஆயுளாகிய பிரகாசத்தை பாழ்படுத்திவிடும் .


960 நாழிகைக்கு ஒருமுறை தேக சம்பந்தம்?  செய்து சுக்கிலத்தை வெளிப்படுத்தி விடவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.60 நாழிகை என்பது ஒரு நாள் .960 நாழிகை என்பது 16 நாளாகும் இந்த கணக்குப்படி மாதம் இரண்டுமுறை மட்டுமே தனது நன் மனையாளை மருவுதல் வேண்டும். இதற்க்கு மேற்படின், பல பிணிகளுக்கு உள்ளாக நேரிடுமென்றும், ஆண்களுக்குரிய வீரியமும், விறைப்பும் குறைந்து தளர்ச்சி உண்டாகி உடல் ரோகம் உண்டாகுமென்கிறது சாஸ்திரம். பெண்களுக்கு அடிக்கடி சேருவதால் கருப்பையில் பிணி உண்டாகுமென்றும், ருதுவில் பிரச்னையும் எற்படுமென்கிறது சித்த சாஸ்திரம்..


சுத்த இரத்தம் 60 துளிகள் கொண்டது ஒரு துளி விந்துவாகும். ஆண்கள்

வீரியத்தை பலமுறை வெளியேற்றினால் அது எவ்வளவு இரத்தம் குறையுமென்று இதன் மூலம் அறியலாம். இவ்வாறு அபரிமிதமான இத்தம் குறையவே ஜீவாக்கினி குறைகிறது. ஜீவாக்கினி குறையவே தேக உறுப்புக்களின் சுபாவத் தொழில் கெட்டு, அதனால் தேகம்

தளர்ந்து, முகம் வெளுத்து, கண்ணின்தகுதி குறைந்து கண்பார்வை மங்கி, ஜீரண சக்தி குறைந்து, ஞாபக சக்தி குறைந்து,மொத்தத்தில் பலவீனமாகி, கைகால்கள் நடுக்கம், மூட்டு வீக்கம் உண்டாகி, நடைதளர்ந்து சோர்ந்து, பல தீராத வியாதிகளுக்கு மனிதன் தள்ளப்படுகிறான்....


எனவே தம்பதிகள் இந்த நடைமுறையை கையாண்டால் தேக சௌக்கியமுடன் நல்ல குழந்தைகளை பெற்று வாழ்வில்

நலமடைவார்களென்று சித்த நூல்கள் கூறுகிறது.


ஆரோக்கியமான குழந்தை பெற திருமூலர் சொன்ன அபூர்வ ரகசியம்:

----------------------------------------------------------------------------------------------------------------


மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 ஆகிய நாள்களில் உடலுறவு கொண்டால் மட்டுமே குழந்தை பிறக்கும். இவையே கருத்தரிப்பிற்கு உரிய நாள்கள். 


சிலருக்கு திருமணமாகி சில ஆண்டுகள்

ஆகியும் குழந்தை பிறப்பதில்லை.

குழந்தை பிறக்காததற்கு பல காரணங்கள் உண்டு. ஆண்களின் விந்தில், உயிரணு இல்லாமல் இருத்தல் அல்லது உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாய் இருத்தல். பெண்ணின் கருக்குழாயில் அடைப்பு அல்லது கருப்பை பாதிப்பு.


பொதுவாக, குழந்தை இல்லை யென்றதும் பெண்தான் காரணம் என்று ஆண் மறுமணம் செய்து கொள்கிறான். இது தப்பு மட்டுமல்ல குற்றமும் ஆகும்.

குழந்தை இன்மைக்கு பெண்ணைக் காட்டிலும் ஆணே பெரும்பாலும் காரணம். எனவே, இருவரும் சோதனை செய்து யாரிடம் குறை என்று கண்டு அதைச் சரி செய்ய வேண்டும். பெரும்பாலும் சரி செய்துவிட? முடியும். அந்த அளவிற்கு மருத்துவம் வளர்ந்துள்ளது. 


உடலுறவு மூலம் சிசு உண்டாக நல்ல

நேரங்கள்: 

                   கணவனும், மனைவியும் கூடிய நேரம் சந்திர கலையாக இருந்தால் அந்தக் கரு பெண் ஆகும்.சூரிய கலை நடக்கும் பொது உடல் உறவு கொண்டால் அந்த கரு ஆண் ஆகும்.


சுழிமுனை நடக்கும் போது உறவுக்கொண்டால் குழந்தை ஆகாது

அமாவாசையன்று கருவானால் கருப்பு

நிறமாகவும், ஆறு விரல் உள்ளதாகவும்

குழந்தை பிறக்கும். தொலை தூரம் சென்று வந்த பொழுது உறவுக்கொண்டு கருவானால் அந்தக் குழந்தை அறிவில்லாத குழந்தை ஆகும்.


அமாவாசை கழித்து பிரதமையில் கரு

உண்டானால் பொய் பேசும் குழந்தை பிறக்கும் அமாவாசைக்கு மூன்றாம் நாள் கருவானால் அந்த குழந்தை நீண்ட நாள் வாழாது.


முழு நிலவுவில் உடலுறவு கொண்டு

கருவானால் முடமாகவும், தண்டியாகவும்

குழந்தை பிறக்கும்.யானை வடிவில் இருக்கும். முழுநிலவு கழித்துப் பிரதமையில் கருவானால் சிறு வயதில் பல கண்டங்களைத் தாண்டி, நீண்ட ஆயுள் உடையதாகக் குழந்தை பிறக்கும்.


புணர்ச்சியின் போது பேசக்கூடாது. பேச்சுக்களைப் பேசினால் குழந்தை அலியாகப் பிறக்கும். பெண்ணை நிர்வாணமாக்கிப் புணர்ந்தால்

குழந்தை சோம்பேறியாகப் பிறக்கும். உடலுறவு கொள்ளும் பொழுது வேறு

பெண்ணை நினைத்து உடலுறவு கொண்டால் அதற்குப் பிறக்கும் குழந்தை ஆறு அல்லது நான்கு விரல் உடையாதகப் பிறக்கும்.


குழந்தை பெற உரிய நாட்களில் உடலுறவு கொள்ளாமையும் குழந்தையின்மைக்கு ஒரு காரணம். எனவே, அந்த நாள்களை அறிந்து உடலுறவு கொள்ள வேண்டும்.


மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 ஆகிய மூன்று நாள்கள் உடலுறவு கொண்டால் குழந்தை பிறக்கும். 


அதிலும் குறிப்பாக 14, 15 ஆகிய இரு நாள்களும் மிகச் சரியான நாள்கள். காரணம் 14, 15ஆம் நாள்களில்தான் பெண்ணின் சினையணு கருவுற தயார்நிலையில் இருக்கும். இந்த நாள்களுக்கு முன்னோ பின்னோ

உடலுறவு கொள்வதால் குழந்தை பிறக்காது. இந்த உண்மை தெரியாததால் குழந்தை பிறப்புத் தள்ளிப் போகிறது.


குழந்தை வேண்டாம் என்பவர்கள் மாத விலக்கு வந்தபின் 11, 12, 13, 14, 15 ஆகிய நாள்களில் உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.


14, 15ஆவது நாள்கள்தான் உரிய நாள்கள் என்றாலும், 11, 12, 13 நாள்களில் உடலுறவு கொள்ளும்போது வெளியேறிய விந்து பெண்ணுருப்பில் ஓரிரு நாள்கள் உயிர்வாழும். அதிலுள்ள உயிரணு மூலம் குழந்தை பெற வாய்ப்பு வரும். அதனால், 11, 12, 13 ஆகிய

நாள்களும் விலக்கப்பட வேண்டும். பருவமடைந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இதை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த விவரம் அறிந்திருந்தால்

தேவையில்லாமல் பெண் கருவுறவும்,

கருக்கலைப்புச் செய்து உடல் பாதிக்கவோ வேண்டிய நிலை வராது.

பன்னிரெண்டாவது நாள் கூடிக் கருவானால் பல கலைகளும், அறிவு நலன்களும் உள்ள குழந்தை பிறக்கும். பதின்மூன்றாவது நாள் கூடிக் கருவானால் அரசியல் ஞானம், வருங்காலத்தை உணரும் விவேகம் உள்ள குழந்தை பிறக்கும்.


பதிநான்காம் நாள் கூடிக் கருவானால் உலக இன்பங்களிலிலே திளைக்கின்ற யோகியாகக் குழந்தை பிறக்கும். பதினைந்தாவது நாள் கூடிக் கருவானால் ஓர் அரசனுக்கு ஒப்பான ஆற்றலும், நற்புகழும் உள்ள குழந்தை பிறக்கும். பதினாறாவது நாள் கூடிக் கருவானால் பெரிய ஞானியாகவும், யோகியாகவும், சித்தனாகவும் ஆகக்கூடிய குழந்தை பிறக்கும்.


அவசரமில்லாத தொடக்கமே ஆரோக்கியத்திற்கு வழி:

------------------------------------------------------------------------------

அவசரம் வேண்டாம் திருமணமான தினத்தன்று காலையில் முகூர்த்தம் முடிந்த உடனே இரவு நடக்கப்போகும் சாந்தி முகூர்த்தம் பற்றி பேசி புதுமணத் தம்பதிகளை திகிலில் ஆழ்த்துபவர்கள் தான் அதிகம் பேர் இருப்பார்கள். ஆனால் அவசரப்படாமல் ஆற அமர முதலிரவை வைத்துக்கொண்டால்தான் அது சுக இரவாக இருக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்....


 தம்பதியர் முதன் முதலில் சந்தித்துக்கொள்ளும் இரவில் அதாவது முதலிரவில் நிம்மதியாக இருவரும் தூங்குங்கள் என்பதுதான் உளவியலாளர்கள் மற்றும் மருத்துவர்களின் அறிவுரை. அடப்போங்க சார். யாருக்காவது முதலிரவில் தூக்கம் வருமா? என்று கேட்பது காதில் விழுகிறது. வேறு வழியில்லை கண்டிப்பாக அன்றைய தினம் தூங்கினால்தான் தொடரும் நாட்களில் சிக்கல் இல்லாமல் வாழ்க்கையை சந்திக்க முடியும் என்கின்றனர்.


 ஏனெனில் என்னதான் சுற்றம் சூழ தாலி கட்டி மனைவி ஆக வந்து விட்டாலும் சந்தித்த முதல் நாளன்றே தாம்பத்ய உறவை தொடங்குவது சரியில்லை என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்து. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள்முதல் சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரில் ஆண், பெண் இருவருக்குமே ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். திருமண தினத்தற்கு வீட்டிலும், சத்திரத்திலும் ஒரே கூட்டமும் கும்மாளமுமாய், இருந்திருக்கும். 


தண்ணீர் மற்றும் கழிவறை பிரச்சினையினால் அவசரக்குளியல் என இருவரின் உடல்களுமே சுத்தமாக இருக்காது.  இதனால் பரவும் நோய்களும் அதிகம், இதனால் தான் திருமண தினத்தன்றே தாம்பத்ய உறவை வைத்துக்கொள்வது ஆரோக்கியமானதல்ல என்கின்றனர் மருத்துவர்கள்.


ஹனிமூன் நோய்கள் முதல்நாளே உறவைத் துவங்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாம். பிறப்புறுப்பை பாதிக்கும் பல வியாதிகள் வர? வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் இந்த வியாதிகள் கட்டாயம் வருமாம்.


முதலிரவன்று இதமான வெந்நீரில் நன்றாக குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளை தவிருங்கள். அளவோடு மிதமான உணவாக உட்கொள்ளுங்கள். அன்றைய தினம் சம்பிரதாயத்திற்காக வைக்கும் பால், பழம், இனிப்புகளை சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. உடலும் மனமும் லேசாக இருந்தலே பாதி டென்சன் பறந்துவிடும்.


அன்பை பரிமாறும் வழி

முதல்நாளன்றே ஒருவருக்கொருவர் தம்மை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் எதையாவது செய்யப்போய் அதுவே சிக்கலாகிவிடும் ஜாக்கிரதை. இதனால் இருவருக்குமிடையே அதிருப்தி உருவாகலாம். எனவே முதலிரவன்று புதுமணத்தம்பதியர் இருவரும் மனம் விட்டுப்பேசிக்கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக்கொள்ளலாம். விருப்பு, வெறுப்பு, குடும்ப சூழ்நிலை, பற்றியெல்லாம் பேசலாம்.


சின்னத் தொடுகை. மெல்லியதாய் ஒரு ஸ்பரிசம், போதும் அதுவே ஆயிரம் மடங்கு அன்பை இருவருக்குமிடைய உணர்த்துவதற்கு. தயக்கமும், கூச்சமும் களைந்த பின்பே தாம்பத்ய உறவை தொடங்குவதே ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படை என்கின்றனர் மருத்துவத்துறையினர். இந்த கட்டுரை பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு மட்டுமல்ல. காதல் திருமணம் செய்பவர்களுக்கும் பொருந்தும்.

எனவே முதலிரவை, ஒரு நீ்ண்ட இனிய நாவலின் முன்னுரையாக கருதி நிதானமாக ஆரம்பியுங்கள். பிறகு பாருங்கள், வாழ்க்கை நாவலின் ஒவ்வொரு பக்கமும் படிக்கப் படிக்க இனிமையாக இருப்பதை உணர்வீர்கள்.



ஆழ்மனதைப் பற்றி ஓர் ஆய்வு.

 வெற்றி பெற முழுக்காரணம் ஆழ்மனம் தான்......


ஆழ்மனதைப் பற்றி ஓர் ஆய்வு. 


நமது ஆழ்மனம் நாம் விரும்பும் எதையும் நமக்கு கொடுக்கவல்லது! மனத்தில் இரண்டு நிலைகள் உண்டு.

(1) மேல் மனம் அல்லது வெளிமனம்.

(2) ஆழ்மனம்.


மனமென்பது ஆர்டிக் கடலில் மிதக்கும் பனிப் பாறைகளைப் போன்றது. கடலுக்கு மேல் கண்ணுக்குத் தெரிகின்ற 20% பனிப்பாறையைப் போன்றது மேல் மனம். கடலில் மூழ்கியிருக்கின்ற கண்ணுக்குத்த தெரியாத 80% பனிப்பாறையைப் போன்றது ஆழ்மனம்.


மேல்மனத்தை விடப் பல மடங்கு பெரியதும், ஆற்றல் மிக்கதும் ஆழ்மனம் ஆகும். மேல்மனம் என்பது விழிப்பு, உணர்வு நிலை எனப்படும். நினைவு நிலைக்கு இதுவே காரணமாகிறது. ஆனால் ஆழ்மனம் துயில் நிலைக்கும், துயிலுக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட மெய்மறதி நிலைக்கும் காரணமானது!


நாம் படிப்பதும், பேசுதலும், செயல்படுவதும் மேல் மனத்தின் மூலமாகத்தான், ஆனால் என்ன படிக்கிறோம், ஏன் – எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம், ஏன் – எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம் காரணம் அடிமனம் தான் (ஆழ்மனம்)


எனவே நமது குறிக்கோள்களை நமது அடிமனம் ஏற்றுக்கொள்ளுமாறு எண்ணங்களைச் செலுத்த வேண்டும். நாம் செய்ய வேண்டியது இதுதான்.

(1) நமது ஆழ்மனத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.

(2) உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்ன என்பதை ஆழ்மனதிற்கு தெரிவிக்க வேண்டும்.


உங்கள் குறிக்கோள்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட ஆழ்மனம், அந்த குறிக்கோள்களை விரைவில் அடைய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, உடனே உங்களைச் செயல்படுத்த தூண்டும்.


நமது குறிக்கோள்களை ஆழ்மனத்திற்கு எப்படி கொண்டு செல்வது:


(1) நமது எண்ணங்கள் எல்லாம் நமது குறிக்கோள்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும்.


(2) ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட வேளையில் (காலையில் 15 நிமிடங்கள்) குறிக்கோளை அடைவதற்கான மனப்பயிற்சியை செய்துவர வேண்டும்.


(3) நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், கண்ட குப்பை எண்ணங்களை எண்ணாமல், நமது குறிக்கோளைப் பற்றிய எண்ணங்களாகவே நினைக்க வேண்டும்.

                      உதாரணமாக வீடு வேண்டும் என்றால் அந்த வீட்டில் (கற்பனை வீட்டில்) எத்தனை அறைகள் இருக்க வேண்டும். அதனுடைய அளவுகள் எப்படி இருக்க வேண்டும், எந்த அளவில் கதவுகள், வர்ணங்கள் என்ன என்பதை பற்றிய கற்பனைகளையே உங்களது எண்ணம் முழுவதும் நிரம்பியிருக்க வேண்டும்.

       நமது முன்னால் குடியரசுத் தலைவர் திரு ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் கூட இதன் அடிப்படையில் தான் "கனவு காணுங்கள்" என்று சொன்னார்.


(4)  உங்கள் மனதில் குறிக்கோள் விதையை வலுவாக ஊன்றுங்கள். அதை உங்களது தீவிர எண்ணங்களால் உரமேற்றுங்கள். நிச்சயம் உங்களது குறிக்கோளை அடைந்துவிடுவீர்கள். விதைத்ததையே அறுவடை செய்து விடுவீர்கள் என்பது நிச்சயம்.


(5) உங்களது கற்பனையில் உங்களது குறிக்கோளை ஒரு படமாக மாற்றி அதை உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பார்க்க வேண்டும். என்ன நினைக்கிறீர்களோ அதை அப்படியே செய்து முடிப்பதாக நினைக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு புதிய வீடு கட்ட வேண்டும் எனில், கற்பனையில் வீடுகட்டி அதற்கு கிரகப்பிரவேசமும் செய்து முடித்ததாக எண்ண வேண்டும். உங்கள் கற்பனை எண்ணங்கள் மேலோங்கி, எண்ணங்கள் வலுப்பெற்று அது உண்மையாகவே நடக்க ஆரம்பித்துவிடும்.


(6)  குறிக்கோள்களை அடைவதற்கு, தற்காலத்தில் அனுபவிக்கக் கூடிய சிறுசிறு சுகங்களை தியாகம் செய்யவும் தயங்கக் கூடாது.


(7) உங்கள் ஆழ்மனத்தை, பிடிவாதத்துடன் நம்ப வைத்துவிடுங்கள். ஆழ்மனம் வெகு சீக்கிரம் உங்கள் குறிக்கோளில் கொண்டு சேர்த்துவிடும்.


(8) உங்களது குறிக்கோளை தெளிவாக ஒரு அட்டையில் எழுதி / உங்கள் கண்களில் அடிக்கடி படும்படியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் பார்க்கும் போதெல்லாம், எண்ணங்கள் உங்கள் குறிக்கோளின் மீது குவியட்டும்.

       எனவே நாம் நமது குறிக்கோளைத் தெளிவாக ஒரு காலவரையில் முடித்தே தீருவேன் என்று முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். பின்பு ஆழ்மனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். 


ஆழ்மன எண்ணங்களே ஒருவரின் நிஜங்கள்!!!


பழக்கங்கள் உருவாகி பலப்படும் இடம் ஆழ்மனம் தான். அது மட்டுமல்ல ஒரு மனிதனின் வெற்றி தோல்வியையும், அவன் பலங்கள் பலவீனங்களையும் தீர்மானிப்பது அவன் ஆழ்மன நிலையே தான். ஏன் ஒருவர் இன்று எப்படி இந்த உலகில் வாழ்கிறார் என்பதைத் தீர்மானிப்பதும் ஆழ்மனமே.


ஆழ்மனதில் எதை மனிதன் நம்புகிறானோ அதுவே அவனுக்கு உண்மையாகிறது . 

 

நாம் பல சமயங்களில் நம்மை அறியாமலேயே சுயமாக நம்மை நாமே ஹிப்னாடிசம் செய்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்து கொண்டு விடுகிறோம். அது போல சில சமயங்களில் நாம் மிகவும் நம்பும் அல்லது மதிக்கும் மனிதர்களை நம்மை ஹிப்னாடிசம் செய்து கருத்துகளை நம் மனதில் பதிக்க அனுமதித்து விடுகிறோம். அந்தக் கருத்துகள் உயர்ந்ததாகவும், பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் போது நாம் சாதனையாளர்கள் ஆகிறோம். மாறாக அவை தாழ்ந்ததாகவும், பலமிழந்தும் இருக்கிற போது தோல்வியாளர்களாகவும் மாறி விடுகிறோம்..


ஆழ்மனம் எதையும் மேல்மனம் தந்தபடியே எடுத்துக் கொள்கிறது. தினந்தோறும் நூற்றுக் கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக் கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது. 


ஓரிரு எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும் உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது. தொடர்ந்து அதே போல் எண்ணங்கள் ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை. 


எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும். அதற்கு எதிர்மாறாக தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி


மனோசக்தியே மந்திரசக்தி.

-------------------------------------------------


எப்படி நமது நாட்டில் பலர் ஏழைகளாக இருப்பதற்கும், சிலர் சுகமாக எல்லா வசதிகளுடன் வாழ்வதற்கும் காரணம், அவர்கள் படிப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான். அந்தப் படிப்பைப் பெற்றவர்கள்கூட படிப்பிலே எது முக்கியம் என்று தெரிந்து கொள்வதில்லை. அந்த முக்கியமான விஷயம்தான் தியானம். இன்று அமெரிக்காவில் பல பல்கலைக் கழகங்களில் இது சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஊருக்கு ஊர் தியானம் சொல்லிக் கொடுக்கும் சங்கங்கள் இருக்கின்றன.


ஒரு மனிதன் செல்வந்தனாக இருப்பதற்கும் மற்றொருவன் ஏழையாகவும் வாழ்வதற்கும்

காரணம், அவர்கள் மனதில் கொண்டிருக்கும் எண்ணங்கள், ஆசைகள்தான் என்று மனவியல்

அறிஞர்கள் கூறுகிறார்கள். அதேபோல அந்த ஆசைகளை எப்படி சீர்படுத்தி, வாய்க்கால் வெட்டி, பாத்தி கட்டி

செலுத்துகிறோம் என்பது அதைவிட முக்கியம். இதைத்தான் மனதை ஒருமுகப்படுத்துதல் என்பார்கள்.


பூதக் கண்ணாடியைப் பார்த்திருப்பீர்கள். கீழே ஒரு தாளை வைத்து பூதக் கண்ணாடியை சூரியனுக்கு எதிராகப் பிடித்தால், சூரியக் கதிர்கள் ஒருமுகப்பட்டு தாள் எரியத் தொடங்குகிறது. பூதக் கண்ணாடி சூரிய சக்தியை ஒருமுகப்படுத்துகிறது ஒருமுகப்படுத்தும்போது சக்தி

அதிகமாகிறது. வலிமை, எரிக்கும் சக்தி அதிகமாகிறது.


இப்படி நம் மனசக்தியை ஒருமுகப்படுத்தும் மார்க்கங்களைத்தான் "ஜெபம்" என்றும் "தியானம்" என்றும் சொல்கிறோம். உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை "ஜெபம்"  என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை "தியானம்" என்றும் சொல்கிறோம். யோகிகள் மனதை ஒருமுகப்படுத்த சில மந்திரங்களை

இரகசியமாகச் சொல்லிக் கொடுப்பார்கள்.


எந்த எண்ணமும் மனதிற்குள் இரகசியமாக வைக்க வைக்க, அதற்கு வலிமை அதிகமாகிறது. இதுதான்

இரகசியமாகச் சொல்வதன் காரணம்.


மந்திரம் என்று எதைச் சொல்கிறார்கள்?ஆழ்மனம் திரும்பத் திரும்பச் சொல்வதுதான் மந்திர சக்தியை ஏற்படுத்துகிறது. எதைத் திரும்பச் சொல்கிறோமோ அதன் பொருள் நம் ஆழ்மனதில் பதிந்து நமக்கு எப்போதும் மந்திர சக்தி உதவத் தயாராயிருக்கிறது.

"வழிகாட்டு" என்று முறையிட்டோமானால் நமக்கு வழிகாட்டும்.


திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் விஷயங்கள் ஆழ்மனதிற்குப் போகின்றன. ஆழ்மனதில் போடப்பட்ட விஷயங்களை ஆழ்மனம் நிறைவேற்றி வைக்கிறது. இதுதான் உண்மை.


முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரான்சு நாட்டு மருத்துவர், "நான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையிலும்? முன்னைவிட ஆரோக்கியமானவனாக இருக்கிறேன்" என்று நோயாளிகள் திரும்பத் திரும்பச் சொல்லச் செய்ததன் மூலம்

அவர்களது நோயைக் குணப்படுத்தினார். இது இன்னும் "நமக்கு நாம் சொல்லிக் கொள்ளுதல்" என்ற தத்துவத்தின் கீழ் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.


இப்படியாக மனதை ஒருமுகப்படுத்தும்

பழக்கந்தான், நாளைக்கு நாம் ஒரு வேலையைச் செய்யும்போது மனதை அந்த விஷயத்தில் ஒருமுகப்படுத்துவது எளிதாகிறது. இதனால் முயற்சிகள் வெற்றியடைகின்றன.


ஜெபம், தியானம் (திக்ரு)மூலம் மனதை ஒருமுகப்படுத்தும் திறனையும், நம் ஆசைகளை, இலட்சியங்களை, ஆழ்மனதிற்கு அனுப்பி வைக்கும் முறையையும் கற்றுக் கொள்கிறோம்.


சுயகட்டுப்பாட்டின் முக்கியமான பாடம் இதுதான். இதை விடாது நீங்கள் பயிற்சி செய்து  பார்த்தீர்களானால், அதி ஆச்சரியமான நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்வில் நேர்வதைப் பார்ப்பீர்கள்;

வெற்றி உங்கள் கைக்குள் வந்து சேரும்.


இதுவே இத்தனை நாள் அதிகம் பேருக்கு சொல்லிக் கொடுக்கப்படாத இரகசியமாக இருந்தது.


ஆழ்மனம் என்பது நம்மில் உள்ள மிகப்பெரிய சக்தி (காஸ்மிக் எனர்ஜி). ஆழ்மனம் எப்பொழுது திறக்கும் துக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாத நேரத்தில் திறக்கும். இதன் முலம் நமக்கு பிரபஞ்சசக்தி கிடைக்கும். இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான சக்திகள்

உள்ளன. அவற்றில், ஒன்று காஸ்மிக் energy. இதைப் பயன்படுத்தி நமது ஆசைகளை நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.இந்த காஸ்மிக் சக்தியைப் பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் நமது ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.


ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர நாம் தினமும் தியானம் செய்துவர வேண்டும். இதன் மூலம் மிக எளிய முறையில் லட்சியங்களை நிறைவேற்ற முடியும்.


லட்சியகள் மட்டும் அல்ல நாம் நோய்களையும் குணப்டுத்தமுடியும், மற்றவர்களின் ஆழ்மனதுடனும் உரையாடமுடியும்.


வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம்

-------------------------------------------------------------------


பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை.

ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப்பிறந்தோமா? என்று....


நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம்தான் மாற்றம். அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும்,

நம் அன்றாட செயல்களிலிருந்தும் ஆரம்பமாக வேண்டும்.


மாற்றங்களை விரும்பாத எவரும்

மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.


ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம்ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.


சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு

கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத்

தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத்

தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது.


ஆனால், "பூமி சுற்றுவதை உணர

முடிவதில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அது உண்மை. அதேபோல் நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது. இதை உணர முடிவதில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இதுவும் உண்மை." சூரியன் தன் ஈர்ப்புச்சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது?


சூரியனுக்கு அச்சக்தி கொடுத்த

பிரபஞ்சம்தான். நம் அனைவருக்கும்

சக்தியை அனுதினமும் கொடுத்துக்

கொண்டிருக்கிறது.


பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாகஅறிந்தவர்களில்லை. எனினும் சிறு துளிகள். நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும். பல கோடிக்கணக்காக அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் பிரபஞ்சம் எனப்படுகிறது. மனிதனின் கற்பனைக்கும் எட்டாத ஒன்றுதான் பிரபஞ்சம்.


கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஒரு சிறுபகுதிதான். நாம் உயிர் வாழும் பூமி.


இந்த பூமியை இயக்கிக்கொண்டிருப்பது பிரபஞ்ச சக்தி ஆகும். இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது. இருக்க நினைப்பவர்களுக்க வசிக்க இடம்

கொடுக்கிறது.


இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.


ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை. மனித மனம்தான் அறிவுமனம் ஆழ்மனம் என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.


"உருவமே இல்லாத ஆழ்மனம்தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது. அடையாளம் காண முடியாத ஆழ்மனம்தான் நம்மை இந்த

உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய.முடியாத ஆழ் மனம்தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது."  இதுவரை நாம்

வாழ்ந்த நாட்களுக்கும், இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும்.


இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும்.பிடிக்காதிருந்தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்!


ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது?


இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்லமுடியும். நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே. ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும்.


நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.


நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே

ஆகிறோம். காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம் ஆழ்மனம்.


நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வதுதான். அந்த எண்ணங்களுக்கு உருவம்  கொடுப்பதுதான்.


ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்துப்பார்க்கத் தெரியாது. எண்ணத்தை வலிமைப்படுத்துவதுதான் ஆழ்மனதை வசியப் படுத்த ஒரே வழி.


ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம்.....



Tuesday, December 7, 2021

ஜீவ யோகம்

 


....

வாழ்வில் சுவராஷ்யம் எது..?

....

அறுசுவையில் 

ஒரு சுவை கூடுவதும் சுவராஷ்யம்


கூடிய அச் சுவை 

சுமையாகி போவதும் சுவராஷ்யம்


அறுசுவையும் அளவாக இருப்பது 

ஒரு சுவராஷ்யம்


இன்பம் 

துன்பம் 

உழைப்பு

ஓய்வு

அதிக பேச்சு

மௌனம் 


இந்த ஆறும் அறுசுவையே


உழைத்து கலைத்தவனுக்கு

ஓய்வு ஒரு சுவராஷ்யம்


ஓய்விலே ஒயாமல் இருப்பவனுக்கு

உழைக்க வாய்ப்பு வருவதும் சுவராஷ்யம்


இன்பத்தை அனுபவிப்பவனுக்கு

ஒரு சுவராஷ்யம்..

அதன் விளைவாக வரும் 

துன்பமும் ஒரு சுவராஷ்யம்.


அளவுக்கு அதிகமாக பேசுபவனுக்கு

அதிலும் ஒரு சுவராஷ்யம்..


அந்த அதிக பேச்சுக்கு அடுத்து வரும் 

மௌனமும் ஒரு சுவாரஸ்யம் 

...


சுவராஷ்யத்தில் இருக்கும் சுவரஷ்யம்

எது என்றால் 


ஒருவன்  அவனுக்கு பிடித்த

ஒரு வகையான சுவாரஷ்யத்தை

தேடி ஓடுகிறான்


அப்படி ஓடியவனுக்கு

காலம் எதிர்மறையான ஒரு சுவாரஷ்யத்தை பரிசாக கொடுக்கும். 

....

*அன்பு* என்னும் சுவராஷயம் தேடி ஓடுபவனுக்கு

காலம் 

*பகை* என்னும் சுவராஷ்யத்தை

பரிசாக கொடுக்கும். 


*இன்பத்தை* தேடி ஓடுபவனுக்கு

காலம் 

*துன்பத்தை* பரிசாக கொடுக்கும்


வாயை மூடாமல் பேசுபவனுக்கு

காலம் 

மௌனத்தை பரிசாக கொடுக்கும்.


இதில்  செம சுவராஷ்யம் 

எது  என்றால் 

காலம் 

அவனை சமன் பண்ணவே

எதிர்மறையான சுவராஷ்யத்தை

கொடுக்கிறது .

காலத்தின் சமண் செய்யும்

ஒரு அன்பு முயற்சி இது

என்பதை கூட அறியாமல் 

மீண்டும் 

அவன் 

அவன் தேடிய 

அன்பு

இன்பம் 

அதிக பேச்சு 

ஆகிய சுவராஷ்யத்தை நோக்கியே

ஓடி கொண்டு இருப்பதுதான். 


அதன்

விளைவு 

காலம் 

அவனுக்கு 

*சமணன் முத்திரையை*

இறுதியாக அவனுக்கு

வரமாக கொடுத்து

அவனை சரி செய்ய போராடும். 


காலத்தின்

அந்த சமண முத்திரையின்

சுவராஷ்யம் 

*பைத்தியம்* ஆவதே.

....

*உடலும்* 

*காலமும்* 

ஒருவனுடன் தொடர்பிலே இருக்க 

முயல்கிறது 

அவன் உடலில் 

உயிர் இருக்கும் வரை 


*சுடாகி* போன உடலுக்கு 

தாகமாக *தண்ணீர்* கேட்பதும்.. 

*சக்தி* இழந்த செல்கள் 

பசியாக *உணவு* கேட்பதும்..

உழைதுத்து ஓடிய தேகத்திற்கு

தூக்கமாக ஓய்வை கேட்பதும்..

ஆரோக்யம்,நலிவுற்ற உடல் 

பசியாமையால்

உணவை வேண்டாம் என்பதும்..

ஒரு உடல் 

அவனோடு சுவர்ஷயமாக 

உறவாட முன் வருகிறது என்பதே.

...

காலமும் 

இன்பம் அளவுக்கு அதிகமாகும் போது

அதை சமண் செய்ய 

துன்பத்தை கொடுப்பதையும்..

அளவுக்கு அதிகமாக 

மன

உறவு வளரும் போது அதை சமண் செய்ய 

பகையை கொடுப்பதும்.


அதையும் மீறி 

ஒருவன் உடலோடு

காலத்தோடு, ஒத்துவரவில்லை

என்றால் 

காலம் 

தீரா 

பஞ்ச கர்ம நோயை பரிசாக கொடுத்து 

மரணம் மூலம் 

அவனை சமண் செய்வதும்

காலத்தின் சுவராஷ்யமே

....

பிறவியில் 

மிக பெரிய சுவராஷ்யம் எது..?


ஒருவனை 

அவனை 

சமண் செய்ய 

*காலமும் *

*உடலும்* முயற்சி செய்கிறது..

இதுவே 

*சிவ முயற்சி*

...

அந்த 

சிவ முயற்சியை உணர்ந்தவனை

உடலும். காலமும்  ஆசிர்வதிக்கும்.


*ஜீவ யோகம்* என்பது

எவன் ஒருவன் 

தன்னை சமண் செய்ய 

*காலத்திற்கும் *

*உடலுக்கும்* 

ஒரு வாய்ப்பே கொடுக்காமல்

*தன்னை தானே*

*அறுசுவையில்* இருந்தும் 

*அறு அவஷ்தையில்*  இருந்தும்

*சமண்* செய்கிறானோ

அவனை 

காலமும் 

உடலும் வணங்கும் .,

வரமாக 

காய கல்ப சரீரம் கொடுத்து

உலகில் 

சித்து சிவ ரகசியத்தை 

சிரசிலே மலர செய்து 

பேரின்பத்தை 

வரமும் கொடுக்கும். 

....

பேரிண்பம் எது...?

....

எந்த இன்பம் 

எந்தகைய அளவு தாண்டினாலும்

அதன் விளைவாக 

துன்பம் விளையாமல் 

இன்பம் மட்டுமே விளைகிறதோ

அந்த இன்பமே 

சிவ இன்பம் 

ஜீவ இன்பம் 

பேரிண்பம்.


சிவமுயற்சியை ஜீவம் தன்முயலாக கூட 

ஜீவமும் பேரிண்ப சிவமாகுமே

Saturday, September 10, 2016

இவன் என் பாட்டன் .இவம் வழி வந்தவன் நான்,நான் தமிழன்

கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது....... மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது........ முதல் சுதந்திர போராட்ட வீரன் புலித்தேவனை தெரியாது....... முதல் சுதந்திர போராட்ட வீரமங்கை வேலுநாச்சியாரை தெரியாது....... குல தெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மரு திருவரை தெரியாது ....... முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் குயிலியை தெரியாது........ டச்சு படையை வென்ற குமரி வர்மக்கலை ஆசான் அனந்தபத்மனாபனை தெரியாது........ ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது ....... ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாது..... ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சியை தெரியாது........ வெள்ளையனை எதிர்த்து வணிகம் செய்த ஒரே சுதந்திர போராட்ட தியாகி சிதம்பரனார் தெரியாது........ இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. இவர்களை போல இன்னும் பல லட்சக் கணக்கான பெயர்கள் உள்ளன. அவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரியபடாமல் வைத்து வரலாற்றை அழிப்பதே இன்றைய கட்சிகள் செய்த சாதனை.. உங்களை போலவே உங்கள் தலைமுறைகளுக்கும் நம் தமிழனின் வரலாற்றை சொல்லிக்கொடுக்க தயங்கி வரலாற்றை அழித்து விடுங்கள் இதுவே நீங்கள் செய்யும் சாதனையாக இருக்கட்டும்.. 20ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய எம் தமிழ் மொழியை இந்த 20 வருடங்களில் அழித்த பெருமை நம்மையே சேரும்...

Monday, June 6, 2016

அந்தமான் தமிழர்கள் ==================== பர்மாவில் அராகன் மலை. அங்கிருந்து தெற்கு நோக்கிச் சுமத்திரா தீவு வரை நீண்ட நெடிய மலைத் தொடர். அதன் தொடர்ச்சி கடலில் மூழ்கிப் போனது. எஞ்சிய சிகரங்களே இன்றைய அந்தமான் - நிக்கோபார் தீவுகள். சிறிதும் பெரிதுமாக 567 தீவுகள். அந்தமானின் தலைநகர் போர்ட் பிளையர் (Port Blair). கோலாலம்பூரில் இருந்து 1,365 கி.மீ. சென்னையில் இருந்து 1191 கி.மீ. தொலைவு. அந்தமான் தீவில் ஆப்பிரிக்கரைப் போன்ற கருப்பு நில பழங்குடிகள் வாழ்கின்றனர். 'நீக்ரிடோ' இனத்தவர். இவர்களின் ஊர்ப் பெயர்கள், பழக்க வழக்கங்கள், மொழியின் வேர்ச் சொற்கள் போன்றவை தமிழோடு இணைந்து போகின்றன. அந்தமான் என்ற பெயர் தமிழர் கொடுத்தது. மான்கள் நிறைந்து இருந்த காரணத்தால் அந்தப் பெயரில் அழைத்தனர். சோழர்களின் ஆட்சியில் தென்கிழக்காசியா முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதும் வரலாறு. நிக்கோபாருக்குத் தமிழர்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா. நக்கவரம். அந்தக் காலத்தில் அந்தத் தீவில் வாழ்ந்த மக்கள் நிர்வாணமாக இருந்ததால் அந்தப் பெயர் வைக்கப்பட்டது என்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அரசியல் கைதிகளுக்கு வாழ்நாள் தண்டணை வழங்கி இங்கு குடியேற்றினர். சிறைச்சாலைக் கட்டுவதற்குச் சென்னையில் இருந்து தமிழர்கள் குடியேறினர். அரசியல் கைதிகளைத் தவிர மற்ற குற்றவாளிகளும் குடியேறினர். கூலித் தொழிலாளர்களாகவும் தமிழர்கள் பெருமளவில் குடியேறினர். அரசியல் கைதிகளில் வங்ளாதேசிகளும், மாப்பிளா கலகத்தில் போராடிய 1400 மலையாள மக்களும் குடியேறினார்கள். 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி வங்ளாதேசிகள் முதலிடம். தமிழர்கள் இரண்டாம் இடம். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். தீவின் மொத்த மக்களில் இரண்டாம் இடத்தில் தமிழர்கள். இருந்தாலும் தமிழ்க் கல்வியைத் தருவதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வந்தது. தமிழர்களுக்குத் தமிழ்க் கல்வி கொடுக்காமல் இந்தி பேசும் இந்தியர்களாக மாற்ற வேண்டும் என்பதே அப்போதைய வியூகம். அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் ஆறாயிரம் தமிழ்க் குழந்தைகள் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு 33 பள்ளிகளில் கல்வி பயின்று வருகிறார்கள். அந்தமானில் உயர்க்கல்வி பயில தமிழகத்தையே எதிர்நோக்க வேண்டியுள்ளது. தமிழில் கல்லூரிக் கல்வியோ, பல்கலைக்கழக வசதியோ இல்லை. தமிழரின் எண்ணிக்கையைச் சிதறடிப்பதற்குப் பெரும் முயற்சி நடந்து வருகின்றன. கிழக்கு வங்கப் பிரிவினைக்குப் பின்னர் வங்ளாதேசிகள் கள்ளக் குடியேற்றம் நடந்து வருகிறது. பர்மா, இலங்கைத் தமிழர்களை அந்தமானில் குடியேற்றுங்கள் என்றால் வங்ளாதேசியர் மறுக்கின்றனர். தெற்கு அந்தமானில் தமிழர்களின் வீடுகளையும் விளை நிலங்களையும் வங்ளாதேசிகள் சூறையாடி வருகின்றனர். சூறாவளிப் புயல் மழையில் தமிழர்களின் குடியிருப்புக்கள் நாசம் செய்யப்பட்டன. தீவு ஆட்சியாளரிடம் வீடுகட்ட இடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்: "உங்களுக்கு வீடுகட்ட இடம் வேண்டுமானால் கருணாநிதியிடம், எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்" என்று அன்றைய தீவின் துணை ஆளுனரே பேசியதாகக் கூறப் படுகிறது. ஆளுனரின் நிலையே இதுவென்றால் மற்ற வங்ளாதேசியர் எப்படி இருப்பார்கள்? ஆனால் இங்கே மலேசியர்கள் வங்காளதேசிகளைச் சகோதரர்கள் மாதிரி பார்க்கிறார்கள். அங்கே அந்தமானில் தமிழர்களை வங்காளதேசிகள் துச்சமாக நினைக்கிறார்கள். தமிழ்ப் பெண்களின் கற்பைச் சூறையாடுகிறார்கள். வங்காளதேசிகளை இங்கே மனித நேயத்துடன் பார்க்கும் கலாசாரத்தை மாற்ற வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். மேலும்: http://ksmuthukrishnan.blogspot.my

Tuesday, November 8, 2011

நேற்றிரவு பெய்த மழை!

தூறும் மழைச்சாரலும்
உன் புன்னகையும்
ஒன்றெனவே தோன்றியது
நம்முடன் கைகோர்த்து நாட்கள் நடந்தபோது...

இன்று...

நாட்காட்டிக் காகிதங்கள்
என்னைக் கிழித்துத்
தன்னைத் தொலைக்கிறது...

இன்றும் உன்னை ஒப்பிடுகிறது மனது...

வெடித்துக்கிடக்கும் நிலத்தைப்பார்த்து
வெளிரிச்சிரிக்கும் மேகத்தோடு...!