Sunday, February 20, 2011

நினைவுகளை சுமக்கும் கைதியாய் உன்னுடன் நான் !

நனைய மறந்த மழைத்துளி ..
கோர்க்க முடியாத பனித்துளி ..
சேர்க்க முடியாத மழலை சிரிப்பு .
பார்க்க முடியாத மொட்டவிழும் பொழுது..
கைக்குள் அகப்படாத தென்றல் காற்று ..
...எல்லாவற்றிற்கும் மேலாக
வெல்ல முடியாத உன் இதயம் ..
எப்போதும் வெற்றிடமாய் நான்..

கவிதைகள் கிறுக்கி கறை படிந்த பொழுதும் .
உன் பார்வை பட்ட மறுநோடி .
மீண்டும் வெற்றுக் காகிதமாய் என் இதயம் .!
மீண்டும் , மீண்டும் கிறுக்குக்கின்றேன் .
என்றாவது உன் இதயத்தில்
என் நினைவுகள் நிரப்பபபடலாம் என்ற
ஏதோ ஒரு நம்பிக்கையில் அதுவரை
நினைவுகளை சுமக்கும்
கைதியாய் உன்னுடன் நான் !