Wednesday, December 30, 2009

Thousands of yesterday are gone
Millions of tomorrow will come but...
these is only one today...
so Dont miss the day to do ur best...

Have a plesant productive day

happy new year 2010..!

Monday, December 7, 2009

நீங்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறீர்கள்!!!

தமிழ் மண்ணுக்கு உயிர் தந்த வேங்கைகளே
நீங்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறீர்கள்
எதிரிகள் நீங்கள் புதைக்கப்பட்ட தலத்தை அழித்திருக்கலாம்
ஆனால் நீங்கள் எங்கள் மனங்களில் பதித்துவிட்ட தடத்தை அழிக்கமுடியாது

நீங்கள் செந்நீர் சிந்தி வளப்படத்தியிருக்கிற எங்கள் தேசம்
இன்று வரைபடத்தில் இல்லாமல் இருக்கலாம்
ஆனால் மனதேசத்தில் இல்லாமல் இல்லை
அது உங்கள் கனவு நாங்கள் மெய்ப்படுத்தப்போகும் நனவு!

வணங்குகிறோம் இந்நாளில் உங்கள் பாதங்களை!
போற்றுகிறோம் உங்கள் ஆத்ம தியாகத்தை!

தமிழீழத் தாயகம் அது உலகத் தமிழர்களின் தாகம்

Thursday, December 3, 2009


தமிழ் காப்பான் நண்பன்; துணை நிற்கட்டும் தமிழன்

மலேசியக் கல்விச் சான்றிதழ் எனும் எசுபிஎம் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற கல்வியமைச்சின் அறிவிப்பினால் தமிழ்மொழிக்கும் தமிழ் இலக்கியப் பாடத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருகிறது.

நீண்ட காலத்தில் தமிழ்மொழிக்கும் தமிழ்க்கல்விக்கும் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதால் தமிழ்சார்ந்த அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் ஓங்கி குரலெழுப்பி வருகின்றன; கடும் கண்டனத்தைப் புலப்படுத்தி வருகின்றன.

இந்தச் சூழலில், மலேசியவின் நாளிதழ்கள் மூன்றும் இதற்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவர்களுக்குத் நன்றிகூற மலேசிய இந்தியர்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.

தமிழை மீட்டெடுப்பதில் தமிழ் செய்தித்தாள்களுக்கு முக்கியப் பொறுப்பு இருப்பதைப் பற்றி நேற்று ஒரு பதிவிட்டிருந்தேன். இதுவும் அது தொடர்பான பதிவுதான். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ‘மலேசிய நண்பன்’ நாளேடு பற்றிய செய்தி இது.

‘மலேசிய நண்பன்’ நாளேடு தொடர்ந்தாற்போல ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த மொழிப்போராட்டச் செய்திகளை விரிவாக வெளியிட்டு வருகின்றது. அதுவும் ஒவ்வொரு நாளும் முதற்பக்க செய்தியாகப் போடுகிறது.

தொடர்ந்து ஒரே செய்தியைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டால், வாசகர்கள் வெறுப்படைவார்கள் என்ற வணிக நியதியை புறந்தள்ளிவிட்டு, தமிழ்ச் சமுதாயத்தின் நலன் கருதி, இந்தச் சிக்கல் பற்றி செய்திகள் போட்டு வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு நண்பன் நாளேடு முழுமூச்சுடன் எடுத்துக்கொண்டிருக்கும் முனைப்பு பாராட்டுக்கு உரியது.

தமிழ்மொழியையும் தமிழ் இலக்கியப் பாடத்தையும் மீட்கும் தன்னுடைய முயற்சியின் மேலும் ஒரு நடவடிக்கையாக இன்று 2.12.2009 ‘பிரதமருக்கு இந்தியர்கள் கோரிகை’ என்ற படிவத்தை வெளியிட்டிருக்கிறது நண்பன் நாளேடு.

மலேசியப் பிரதமர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்களின் பார்வைக்கு இந்தச் சிக்கலைக் கொண்டு சென்று நல்லதொரு தீர்வைக் காணும் நோக்கத்தில் இந்தப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

எசுபிஎம் தேர்வில் தமிழ், தமிழ் இலக்கியம் ஆகிய இரண்டு பாடங்களையும் எடுப்பதற்குரிய வகையில் அந்தப் பாட எண்ணிக்கையை 10லிருந்து 12ஆக அதிகரித்து உதவுமாறு பிரதமரையும், கல்வியமைச்சராகிய துணைப்பிரதமரையும் கேட்டுக்கொள்கிறது இந்தக் கோரிக்கைப் படிவம்.

மேலும், பிரதமர் வகுத்துள்ள ‘ஒரே மலேசியா’ கோட்பாட்டின் கீழ் அனைவரின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற கருத்தையும் இது மேற்கோள் காட்டியுள்ளது.

இதில், பெயர், முகவரி. அடையாள அட்டை எண் முதலான விவரங்களை எழுதி மலேசிய நண்பன் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இன்றுதொடங்கி இன்னும் 10 நாட்களுக்கு இந்தப் படிவம் மலேசிய நண்பனில் வெளிவரும்.

ஆகவே, மலேசிய நண்பன் வாசகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மலேசியத் இந்தியர்கள் அனைவரும் உடனடியாக இந்தக் கோரிகைப் படிவத்தை நிறைவு செய்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் நமது தாய்மொழியாம் தமிழை இந்த நெருக்கடியிலிருந்து மீட்க வேண்டும்; தமிழ் இலக்கியத்தை காக்க வேண்டும்.

முக்கிய அறிவிப்பு:- இது மலேசிய நண்பனுக்காகச் செய்யப்படும் விளம்பரம் அல்ல. மலேசியாவில் தமிழ்மொழியின் வாழ்வுரிமைக்காக முன்வைக்கப்படும் வேண்டுகை.

Friday, November 13, 2009

உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி!!








இன ஒழிப்பு இன்னமும் நடந்தேறிக் கொண்டிருக்கும் சமாசாரம் என்றே கூற வேண்டும். உண்மையில் ஒரு இனத்தைப் பூண்டோடு அழித்துவிடுவது என்பது சாத்தியமற்றது. மாயாக்கள் விசித்திர குணாதிசயங்கள் கொண்ட மனித இனம். தென் அமேரிக்க பகுதியின் வாழ்ந்த இவ்வினம் இப்போது இல்லை. மாயாக்கள் அழிக்கப்பட்டார்களா, அழிந்து போனார்களா அல்லது மறைந்து போனார்களா?

அவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. ஆரம்ப காலம் முதல் பல முறை ஸ்பெயின் நாட்டினர் அங்கு படையெடுத்து இருக்கிறார்கள். ஸ்பெயின் நாட்டின் படையெடுப்பின் போது அவர்களுக்கு மாயக்களின் நுட்ப ஆய்வுகளை அறியும் ஆவல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மாயாக்களின் வாழ்வியல் முறை அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

மாயாக்களிடம் கட்டிடக் கலை, கணித, சமய நுட்பங்கள் அபரிமிதமாகவே இருந்திருக்கின்றன. ஸ்பெயின் சிப்பாய்களிடம் போர் கருவிகள் அதிகமாக இருந்தன. மாயாக்களிடம் நவீனப் போர் கருவிகள் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் செற்பம். மாயாக்கள் வாழ்ந்த காடு, அவர்களின் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் கைப்பற்றுவதற்காக அவர்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மாயாக்களின் கண்டுபிடிப்புகள் பல. அவற்றில் குறிப்பிடத்தக்கது வான்கணித முறைகள். அவற்றின் அடிப்படையில் உருவானதே மாயக்களின் நாட்காட்டி. மாயாக்களின் நாட்காட்டி இரகசியம் மிகுந்ததா? "இல்லை, அது விளங்காத ஒன்று" என்றே பலரும் சொல்வார்கள்.

புரியாத ஒன்றை வைத்து பல குளறுபடிகள் செய்கிறார்கள், கணிப்புகள் செய்கிறார்கள், இறுதியில் ஏதோ ஒரு முடிவு கட்டி இது தான் அது என சொல்லிவிடுகிறார்கள், எல்லாம் பிசகு, பொய் புரட்டு நிறைந்து கிடக்கிறது, என சிலர் அவற்றை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். சில பழமை நிகழ்வுக்கான காரணங்களைக் கண்டறிவதும் ஒரு சுகம் தான்.

மாயாக்களின் நாள்காட்டியில் ஒரு விசித்திரத்தைக் கண்டார்கள் ஆய்வாளர்கள். அந்த நாள்காட்டி 21 டிசம்பர் 2012-ஆம் ஆண்டு நிறைவடைகிறது. கி.மு 3113-ஆம் ஆண்டு அந்நாள்காட்டி தொடக்க ஆண்டாக அமைகிறது. இது முழுமை பெறாத நாள்காட்டியா? அல்லது மாயாக்களின் மறுபட்ட கணிப்பு முறையில் கண்டறியப்பட்டவையா?

அது என்ன மாயாக்களின் கணக்கு? அவர்களின் கணித முறை இப்படி விரிகிறது.
கின், உனியல், துன், கதுன், பக்துன், பிக்துன், கலப்துன்.

நாள் என்பதை அவர்கள் கின் எனக் குறிக்கிறார்கள்.
19 கின் (19 நாள்)= 1 உனியல்
359 நாள் = 1 துன்
7200 நாள் = 1 கதுன்
144 002 நாள் = 1 பக்துன்
1 872 025 நாள் = 13 பக்துன்
2 880 025 நாள் = 1 பிக்துன்
57 600 025 நாள் = 1 கலப்துன்

இந்த கணக்கியல் முறை இப்படி வியப்பளிப்பதாக இருக்கலாம். மாயாக்களின் நாள்காட்டி இயற்கை மாற்றங்கள் மற்றும் சீற்றங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இவையாவும் இரு முக்கிய புத்தகங்களில் குறிக்கப்பட்டுள்ளது. அப்புத்தகங்கள் 'கொடெக்ஸ்' என அழைக்கப்படுகிறது. கொடெக்ஸ் பூமியை மட்டுமன்றி கோள் மாற்றங்களின் குறிப்புகளும் உள்ளடங்கியது. கோடெக்ஸ் வான் நிபுண மாயாக்களால் எழுதப்பட்டதாக அறியமுடிகிறது.

மாயா வகுப்பை சேர்ந்த வான் நிபுணர்கள் மாய மந்திர வேலைகள் கைதேர்ந்தவர்கள். அப்படியானால் இந்நாள்காட்டியின் நம்பகத்தன்மை எவ்வகையது எனும் கேள்வி நம்முள் எழுவது சாத்தியமாகிறது. ஆரம்ப கால வாழ்க்கையில் மனிதன் ஏதோ ஒரு வகையில் இயற்கையை சார்ந்தே வாழ்ந்திருக்கிறான். ஆதாலால் இயற்கையை போற்றும் வண்ணம் இம்மாதிரியான மாய மந்திர வேலைகள் ஏற்பட்டிருக்கலாம்.

கோடெக்ஸ், கணிதமும் சிறு சிறு சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும் புத்தகம். அச்சிறு சிறு எழுத்து வகைகளை ஹிரோகிலிஃப் எழுத்துகள் என அறிகிறோம். அந்த எழுத்துகள் எப்படி அமைந்திருக்கின்றன? பூமியில் உள்ள மனிதன் ஆகாயத்தில் இருக்கும் உயிரினங்களோடு தொடர்பு கொள்வது போலும், அவர்களுடைய கடவுளர்களோடு பேசுவது போலவும் உள்ளன.

இந்நாள்காட்டி கி.மு 20 செப்டம்பர் 3113-ஆம் திகதியில் தொடங்குகிறது. இக்காலகட்டம் மாயாக்களின் காலமென அழைக்கப்படுகிறது. அவர்களின் நம்பிக்கைப்படி இவ்வுலகம் புதுபிக்கப்படும். அப்படி புதுபிக்கப்படும் நாளானது மனித சரித்திரத்தில் முக்கிய நாளாக அமையும்.

கோள்களின் இட மாற்றமும் பூமியின் கால மாற்றமும் மனித வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு பாதிப்பை விளைவிற்கின்றன என்பது இவர்களின் கருத்தாகும். பூர்வ கால எகிப்திய மக்களிடையேயும் இவ்வகை நம்பிக்கை இருப்பதை நாம் காண முடிகிறது. Asy Syi'ra நட்சத்திரம் நைல் நதியை கடக்கும் வேளையில் தீமைகள் விளையும் எனும் நம்பிக்கையை கொண்டிருந்தார்கள் அவர்கள்.

21 டிசம்பர் 2012 End of Times என ஆய்வாலர்களாலும் அறிஞர்களாலும் குறிப்பிடபடுகிறது. இந்த End of Times எனும் சொல்லுக்காகன விவாதங்கள் இன்னமும் மள்ளுக்கட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. எடுத்த எடுப்பில் அதுதான் பூமியின் இறுதி நாள் என சொல்லிவிடுவோர் பலர் உண்டு. ஆனால் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் பார்வையில் அச்செற்களுக்கான ஆய்வுகள் ஆழமானவை. அவற்றில் வேடிக்கையான சில சேதிகளும் உண்டு.

பூமி சுற்றுவது நின்றுவிடும் ( கால நேர மாற்றம் இருக்காது), காலம் Pisces எனப்படும் மீனத்தில் ஒரு சுற்று முடிந்து Aquarius எனப்படும் மேஷத்தில் ஆரம்பமாகப் போகும் நாள், உலகம் வெள்ளி நூற்றாண்டில் இருந்து தங்க நூற்றாண்டிற்கு மாற்றம் காண்கிறது, அதீதமான இயற்கைச் சீற்றம் ஏற்பட்டு உலகில் மாற்றங்கள் உறுவாகும், உலகைக் காக்க கடவுளர் எழும் நாள், காலம் பின்நோக்கி நகரும், வேற்றுக் கிரக வாசிகளோடு தொடர்பு உண்டாகும் நாள்.

அத்திகதியை பற்றிய மேற்காணும் விடயங்கள் நகைப்புக்குறியவை. தமிழில் செலுத்தப்பட்ட ஆரிய கதைகளைப் போலவே மனிதர்களின் மனதில் மடத்தனத்தை உட்புகுத்துபவை.

இன்று எழுதப்படுபவனவற்றில் சில வேளைகளில் உண்மைகள் கேள்விக்குறியானதாக இருக்கிறது. 1999-ஆம் ஆண்டு முடிந்தவுடன் உலகத்தின் கதி முடிவடையும் என நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டதாக ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார்கள். ஆனால் இன்றோ ஆண்டு 2009 ஆகிவிட்டது. நாஸ்ட்ராடாமஸ் சொன்னது பொய்யா இல்லை புத்தகத்தில் எழுதிய விடயம் பொய்யா?

உலக சரித்திரத்தின் அடிப்படையில் மாயாக்கள் மாய மந்திர வேலைகளில் கைதேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடபடுகிறது. திறமையான சிந்தனை வளத்தினால் அருமையான நாகரிகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதைப் போலவே அவர்களின் நாட்காட்டியும் முழுமையான நிலையில் கணிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

இந்த மாயாக்களின் ஒரு பிரிவினர் தென் மெக்சிக்கோவின் Guetmala, Belize மற்றும் Honduras போன்ற பகுதிகளில் வாழ்ந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வகால கட்டிடங்களும், பிரமீடுகளும், மற்றும் கோவில்களும் இங்கு இருக்கிறது.

1517-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் படையெடுப்பின் போது மாயாக்களின் கலை மற்றும் இதர தொழில்நுட்ப வேலைப்பாடுகள் பலவும் பரவலாக அழிந்து போனது. அவற்றில் முக்கியமாக மாயாக்களின் நூலகமும் அழிந்தது. அவ்வகையில் காண்போம் என்றால் இந்த நாட்காட்டியிலும் பிசகு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

Dr. Jose Argulles ஓர் அமேரிக்கர். அவர் சரித்திர ஆய்வாளர் ஆவார். Zhou Yi எனும் சீனக் குடியினரின் கணக்கியல் முறையும் மாயாக்களின் கணக்கியல் முறையும் ஒத்துப் போகிறது என்பது இவர் கருத்தாகும்.

1973-ஆம் ஆண்டு வெளிவந்த 'The Mayan Factor' எனும் தமது நூலில் பல விடயங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். தற்போதய நிலையில் இப்பிரபஞ்சத்தில் "The Great Cycle' எனும் மாபெரும் சுழற்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிது. அதன் கால அளவு ஏறக்குறைய 5000 ஆண்டுகள் என குறிக்கப்படுகிறது. அதன் அடிப்படியில் மாயாக்களின் கி.மு 3113 முதல் கி.பி 2012 வரையிலான நாள்காட்டி அமைந்திருக்கக் கூடும் என கருத்துரைக்கிறார்.

இந்த மாபெரும் சுழற்சி முடியும் தருவாயில் உலகில் மாறுதல்கள் உண்டாகும் சாத்தியங்கள் இருப்பதாக மாயக்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். இக்கணித முறை சிறு கூறுகளாக பிரிக்கப்பட்டு ஓவ்வொரு காலகட்டத்திற்கும் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை இருபது இருபது ஆண்டுகளாக பிறிக்கப்படுகிறது.

அக்கணித முறையின் இறுதி காலகட்டமாக கருதப்படுவது 1992 முதல் 2012 ஆண்டுகளாகும். இது மொத்தம் 20 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது. இதை 'The Earth Regenaration Period எனக் குறிப்பிடுகிறார்கள்.

பதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN

Tuesday, November 3, 2009

ஒரே மலேசியா கோட்பாடு - ஒரு அலசல்!!




மலேசிய பிரதமர் நஜீப் துன் இரசாக் அறிமுகப்படுத்தியிருக்கும், ஒரு புதிய கோட்பாடு ஒரே மலேசியா கோட்பாடு. இந்த ஒரே மலேசியா கோட்பாட்டைப் பற்றிய சந்தேகங்களை பல தரப்பினரும், பல நேரங்களிலும் எழுப்பி வருகையில், உண்மையில் இந்தக் கோட்பாட்டின் அடிப்படை அம்சங்கள் என்னவென்பது இதுவரையிலும் புரியாத புதிராகவே உள்ளது. மலேசியா, மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சபா,சரவா பூர்வக்குடியினர், ஒராங் அஸ்லியினர், என்று பல இனங்களை தன்னகத்தேக் கொண்ட ஒரு நாடு. ஆனால், இங்கு இனவாதத்தின் அடிப்படையிலேயே அனைத்தும் நடக்கின்றன என்றால், அது மிகையாகாது. இந்த ஒரே மலேசியா கோட்பாடு உண்மையில், எதனைக் குறிக்கின்றது? இனவரையறைகளற்ற ஒரு மலேசிய தேசத்தை குறிப்பதாகவே இந்த கோட்பாடு காட்டப்படுகின்றது; உண்மையில் இன வரையறைகளைக் கடந்த ஒரு மலேசிய சமூகத்தை நாம் அடைந்து விட்டோமா என்ற கேள்விக்கு நிச்சயம் இல்லையென்பதுதான் பதிலாக இருக்கும்.

இன வேறுபாடுகளற்ற ஒரு மலேசியா, இந்த நொடி வரை ஒரு கானல் நீரைப் போன்றதாகவே உள்ளது. இந்த ஒரு மலேசியா கோட்பாடானது, புதிய பிரதமரான நஜீப்பீன் ஒரு விளம்பர சுலோகம் என்பதுதான் உண்மை. ஒரே மலேசியா கோட்பாடு, நமது நாட்டிலுள்ள இனங்களை ஒன்றினைக்கும் கோட்பாடு என்பது அரசாங்கத்தின் வாதமாக இருக்கின்றது. சுதந்திரம் பெற்று ஐம்பத்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்ட பொழுதிலும், ஒற்றுமையை வலுப்படுத்துங்கள் என்று மக்களுக்கு அரசாங்கம் வலியுறுத்தத்தான் வேண்டுமா? ஒற்றுமை என்பது அவ்வாறு வலியுறுத்தினால்தான் ஏற்படுமா? பல்வேறு வளர்ச்சிகளை, மாற்றங்களை கண்ட மலேசியர்கள் ஒற்றுமை என்ற ஒரு அம்சத்தில் மட்டும் இறுக்கமாக இருந்ததற்கு காரணம் என்ன? இவ்வாறான பல கேள்விகளுக்கு பதிலை அளித்துவிட்டு, ஒரே மலேசியா கோட்பாட்டை முன்னிறுத்த அரசாங்கம் முயல வேண்டும்.

காலங்காலமாக, மலாய்க்காரர் அல்லாத சமூகத்தை மிரட்டுவதற்கு “மே 13” இனக்கலவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. மலாய்க்காரர்கள் அல்லாதோர் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கூட கேட்கக்கூடாது என்பது வாக்கில், இந்த “மே 13” இனக்கலவரத்தை முன்னிறுத்தி மிரட்டப்பட்டு வந்தனர். “எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்; மே 13 மீண்டும் நிகழும்” என்பது ஒரு குறிப்பிட்ட மலாய் பிரிவினரின் மிரட்டல் வாசகமாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக மலேசியாவை ஆளும் கூட்டணியின் முக்கிய பங்காளிக்கட்சியான அம்னோவினரே இவ்வாறான வாசகங்களை அதிகம் உபயோகித்துள்ளனர் என்பதை கடந்த கால சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன. அம்னோவினர் அவ்வாறு மிரட்டும் பொழுதெல்லாம், அம்னோவின் “கங்காணிகளான” மசீசாவும், மஇகாவும், அம்னோக்காரர்களின் மிரட்டல்கள் உண்மையாகிவிடும் என்பது போலவே தத்தம் சமுதாயங்களை ஏமாற்றியுள்ளனர்.
துங்கு இரசாலியோடு தேசத்தந்தை துங்கு அப்துல் ரஹ்மான்

இதற்கு தக்க உதாரணமாக, 1989இல் “ஒப்பராசி லாலாங்”கின் போது நிகழ்ந்த சம்பவங்களைக் கூறலாம். 1989இல், சீன பள்ளிகளில் அதிகமான மலாய் ஆசிரியர்களை நியமிப்பதைக் கட்டுப்படுத்தக்கோரி சீன சமுதாயம் குரல் எழுப்பியது. மலேசிய சீன சமூகத்தினரிடம் மிகவும் செல்வாக்குப்பெற்ற சீனர் கல்வி இயக்கங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தன. (சீனர்களின் இந்த கல்வி இயக்கங்களானவை, நாட்டில் சீனர்களின் அரசியலையும் முடிவு செய்யும் மிக முக்கிய இயக்கங்கள்; இந்த சீன கல்வி இயக்கங்களின் ஆதரவுப்பெற்ற வேட்பாளர்கள், சீனர் பெரும்பான்மை தொகுதிகளில் நிச்சயம் வென்றுவிடுவார்கள் என்று சூடம் ஏற்றி சத்தியம் கூட செய்யலாம். மலேசியாவில் உள்ள சீன பள்ளிகளும், அதன் அடைவுநிலைகளும் இதற்கு சான்று. சுறுக்கமாக சொன்னால், மலேசிய சீனர்களின் அரசியலைக் கூட நிர்ணயிப்பது கல்விக்குழுக்களாகவே உள்ளன; நமது சமுதாயத்திலோ, கல்வியையும், கோயிலையும் முடிவு செய்வது அரசியலாக உள்ளது). அப்பொழுது பிரதமராக இருந்த மகாதீர் முகமட், அவர்தம் அம்னோ சகாக்களுமாக சேர்ந்து, இதனை மாபெரும் இனப்பிரச்சனையாக உருவாக்கி, அரசியல் இலாபம் தேடினர். சீனர் பள்ளிகளில், சீனர் ஆசிரியர்களை அதிகம் நியமிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை; உடனே, மலாய்க்காரர்களை நியமிப்பதை சீனர்கள் தட்டிக்கேட்டு விட்டார்களெனவும், அதனால் மலாய்க்காரர்களின் சிறப்புரிமையை கேள்விக்கேட்டு விட்டனர் எனவும் அம்னோ கூப்பாடுப்போட்டது. அக்காலத்தில், அம்னோ பல்வேறு பொதுக்கூட்டங்களைக் கூட்டியது; பல்வேறான இன துவேச வாசகங்கள் அள்ளி வீசப்பட்டன; “மலாய்க்காரர்களின் குத்துக்கத்தி (கெரிஸ்), சீனர்களின் இரத்தத்தில் நனையப்போகிறது” என்பது மிக பிரபலமான வாசகமாகும். (இந்த வாசகத்தை தனது திருவாயால் உதிர்த்தவர், இந்நாள் பிரதமர் என்று கூறப்படுகிறது, இருப்பினும் கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், கர்ப்பால் சிங் இது தொடர்பாக எழுப்பிய வினாவிற்கு, நஜீப் அவ்வாறு கூறவில்லை என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டது) இனங்களுக்கிடையான பதற்றத்தை ஏற்படுத்தியது, அம்னோவினரின் இந்த கூட்டங்கள்தான்; ஆனால், ஒப்பராசி லாலாங் நடவடிக்கையில், உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதெல்லாம பெரும்பாலும் எதிர்கட்சி தலைவர்கள். (கர்ப்பால் சிங், லிம் கிட் சியாங், லிம் குவான் எங், மக்கள் தொண்டன் வி.டேவிட், மக்கள் சேவகன் பி.பட்டு, பாஸ் கட்சியின் மாட் சாபு ஆகியோர் ஒப்பராசி லாலாங்கில் கைது செய்யப்பட்டோரில் அடங்குவர்). அதோடு மட்டுமல்லாமல், பல பத்திரிக்கைகளின் உரிமங்கள் உடனுக்குடன் பறிக்கப்பட்டு, அந்த பத்திரிக்கைகள் தடை செய்யப்பட்டன (ஸ்டார் ஆங்கில நாளேடு உட்பட). ஒரு சாதரண பள்ளி சம்பந்தப்பட்ட விசயத்தை கேள்வியெழுப்பப்பட்டதற்காக, ஒரு இன பதற்றம் உருவாக்கப்பட்டது; அந்த பதற்றைச் சுட்டிக்காட்டி, 1990இல், துங்கு இராசாலியின் செமாங்காட் 46 தலைமையிலான பலம்பொருந்திய எதிர்கட்சிக் கூட்டணியை தோற்கடித்தது அம்னோ தலைமையிலான தேசிய
முன்னணி.
பத்திரிக்கைகளின் உரிமங்கள் உடனுக்குடன் பறிக்கப்பட்டு, அந்த பத்திரிக்கைகள் தடை செய்யப்பட்டன (ஸ்டார் ஆங்கில நாளேடு உட்பட). ஒரு சாதரண பள்ளி சம்பந்தப்பட்ட விசயத்தை கேள்வியெழுப்பப்பட்டதற்காக, ஒரு இன பதற்றம் உருவாக்கப்பட்டது; அந்த பதற்றைச் சுட்டிக்காட்டி, 1990இல், துங்கு இராசாலியின் செமாங்காட் 46 தலைமையிலான பலம்பொருந்திய எதிர்கட்சிக் கூட்டணியை தோற்கடித்தது அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி.

"மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள்" group.

Space hotel says it's on schedule to open in 2012


BARCELONA (Reuters) – A company behind plans to open the first hotel in space says it is on target to accept its first paying guests in 2012 despite critics questioning the investment and time frame for the multi-billion dollar project.

The Barcelona-based architects of The Galactic Suite Space Resort say it will cost 3 million euro ($4.4 million) for a three-night stay at the hotel, with this price including an eight-week training course on a tropical island.

During their stay, guests would see the sun rise 15 times a day and travel around the world every 80 minutes. They would wear velcro suits so they can crawl around their pod rooms by sticking themselves to the walls like Spiderman.

Galactic Suite Ltd's CEO Xavier Claramunt, a former aerospace engineer, said the project will put his company (http://www.galacticsuite.com) at the forefront of an infant industry with a huge future ahead of it, and forecast space travel will become common in the future.

"It's very normal to think that your children, possibly within 15 years, could spend a weekend in space," he told Reuters Television.

A nascent space tourism industry is beginning to take shape with construction underway in New Mexico of Spaceport America, the world's first facility built specifically for space-bound commercial customers and fee-paying passengers.

British tycoon Richard Branson's space tours firm, Virgin Galactic, will use the facility to propel tourists into suborbital space at a cost of $200,000 a ride.

Galactic Suite Ltd, set up in 2007, hopes to start its project with a single pod in orbit 450 km (280 miles) above the earth, traveling at 30,000 km per hour, with the capacity to hold four guests and two astronaut-pilots.

It will take a day and a half to reach the pod - which Claramunt compared to a mountain retreat, with no staff to greet the traveler.

"When the passengers arrive in the rocket, they will join it for 3 days, rocket and capsule. With this we create in the tourist a confidence that he hasn't been abandoned. After 3 days the passenger returns to the transport rocket and returns to earth," he said.

More than 200 people have expressed an interest in traveling to the space hotel and at least 43 people have already reserved.

The numbers are similar for Virgin Galactic with 300 people already paid or signed up for the trip but unlike Branson, Galactic Suite say they will use Russian rockets to transport their guests into space from a spaceport to be built on an island in the Caribbean.

But critics have questioned the project, saying the time frame is unreasonable and also where the money is coming from to finance the project.

Claramunt said an anonymous billionaire space enthusiast has granted $3 billion to finance the project.

Wednesday, October 7, 2009

ஒரு மாட்டுத்தலை காதில் சொல்லிப் போன சேதிகள்



புதியதொரு தொடக்கமாகவும் -- புதியதொரு அணுகுமுறை ஆகவும் நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் இருந்தது நமது புதிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களின் பதவியேற்பு.

தனது புதிய தலைமைத்துவ அணுகுமுறையாக அவர் முன் வைத்திருக்கும் தாரக மந்திரம் 1மலேசியா.

அதனை நிரூபிக்க அவர் இறங்கி நடந்து கைகுலுக்கி மகிழ்ந்தது நமது பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா. அதனை ஆனந்தக் கூத்தாடி பிரசுரித்து மகிழ்ந்தன நமது தமிழ் தினசரிகள்.

அதன் நீட்சியாக இன்னுமொரு திருவிழா. இந்த முறை அதன் மையம் நமது பத்து கேவ்ஸ் வளாகம். கோவில் தலைவர் நடராஜா கைங்கர்யம். பிரதமருக்கு ஆளுயர மாலை -- நமது பாரம்பரியமாகிவிட்ட பொன்னாடை - ஆடல் பாடல் என அமர்க்கள ஒற்றுமை விழா.

அந்த நினைவுகள் அதன் பசுமை வாடும் முன்பே கோலாலம்பூர் மாநகர மையத்தில் -- அதனைச் சிதைக்கும் விதமாக ஒரு நிகழ்வு.

50க்கும் குறையாத ஒரு குழு 28.8.09 அன்று வெள்ளிக் கிழமை பிற்பகல் மாநில பள்ளிவாசலிலிருந்து, தொழுகை முடிந்து, 300 மீட்டர் தொலைவுக்குள் இருந்த மாநில அரசாங்க அலுவலகம் நோக்கி ஓர் ஊர்வலம் போனது.

அவர்களின் நோக்கம் -- ஓர் இந்துக் கோவிலின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிப்பது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஷாஆலாம் செக்ஸன் 19ல் உள்ள ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயம். இடமாற்றத்துக்கு தேர்வுற்ற இடம் செக்ஸன் 23 ஷாஆலாம். எதிர்ப்பணியில் பங்குபெற்றோர் செக்ஸன் 23 குடியிருப்புவாசிகள்.

அங்கே, மாநில அரசாங்கக் கட்டிடத்தின் முன்பு -- திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட -- ரத்தம் சொட்டிய நிலையில் ஒரு மாட்டுத்தலை -- தரையில் வீசப்பட்டு உதைத்தலுக்கும் மிதித்தலுக்கும் ஆளானதோடு அதன் மேல் காறி உமிழ்ந்தும் வசைபாடியும் ஆரவாரித்தது அந்தக் கூட்டம். அதனை வேடிக்கை பார்த்து நின்றது காவல்துறை.

இதுவரை சொல்லப்பட்டது நாடகத்தின் தொடக்கக் காட்சிகள். இனி வருவது சுவாரஸ்யமிக்க அதன் தொடர் காட்சிகள்.

ஏறக்குறைய ஒருவார கால அவகாசத்தில் நடந்து முடிந்த இந்த நாடகத்தின் பிரதான கதாநாயகனாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர் -- நமது புதிய உள்துறை அமைச்சரான டத்தோஸ்ரீ ஹிசாமுடின் துன் ஹுசேன். ஒரு கதாநாயகனுக்குரிய சகல வீரப் பிரதாபங்களோடு சேர்த்து -- பல்டி அடிக்கும் ஸ்டன்ட் காட்சிகளிலும் தன்னால் பிரமாதமாக சோபிக்க முடியும் என்பதை தெள்ளத் தெளிவாக நிரூபித்துள்ளார், இந்த மாட்டுத்தலை விவகாரத்தின் வழி.

இதற்கான ஆதாரங்கள் நமது தினசரிகளில் நிறையவே வந்துவிட்டன. உதாரணத்திற்கு அவர் திருவாய் மலர்ந்தருளிய பொன்னான வாசகங்களில் ஒன்று மட்டும் -- அந்த பேரணியில் ஐம்பதுக்கும் குறைவானவர்களே கலந்துகொண்டுள்ளனர். அது அமைதியான முறையிலேயே நடந்துள்ளது. அவர்களிடம் ஏதோ மனக்குறை இருந்துள்ளது. அவர்களில் எவரும் மாநில சுல்தானை இழிவுப்படுத்தவில்லை. அந்த மாட்டுத் தலை யாரோ பேரணிக்கு சம்பந்தமில்லாத ஒருவரால் அங்கே கொண்டுவரப்பட்டுள்ளது....

பல்லின சமுதாயத்தில் -- ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் நம்பிக்கைகளை மிகவும் கொச்சையாக நடுத்தெருவில் எள்ளிநகையாடிய ஒரு சிறு கும்பலின் அவதூறான நடவடிக்கைகளை -- பூசி மெழுகி மறைக்க முயற்சிக்கும் ஒருதலை ராகமான பேச்சே அன்றி -- பொறுப்புள்ள ஒரு உள்துறை அமைச்சரின் சார்புநிலை அற்ற, நடுநிலை காக்கும் பேச்சாக அவை இல்லை என்பது -- இந்த மாட்டுத் தலை விவகாரத்தை -- முதன்முதலில் மக்கள் பார்வைக்கு துணிந்து கொண்டு சென்ற -- மலேசியாகினி (www.malaysiakini.com) போன்ற இணையச் செய்தி ஊடகங்களில் மிக மிக கடுமையாக -- சில சமயம் அதிர்ச்சியூட்டும் வரிகளுடன் [அவற்றை நிச்சயம் இங்கே பதிவு செய்ய இயலாது] அமைச்சரின் செயல்பாடு விமர்சிக்கப்பட்ட விதம் உணர்த்தியது.

அதுமட்டுமல்லாமல், இந்த இழி செயலில் ஈடுபட்ட அந்தக் குடியிருப்புவாசிகளை தன் அலுவலகத்திற்கு வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்து வந்து -- அவர்களோடு சரிசமமாக உட்கார்ந்து குசலம் விசாரித்து வழியனுப்பி வைத்தபோது -- அவர்களின் குறைபாடுகளை கேட்டறிய அவர் மேற்கொண்ட முயற்சியாக முன்னிறுத்தப்பட்ட சந்திப்பு -- பல்வேறு தரப்பினரிடமிருந்தும் -- குறிப்பாக இணையத் தளங்களின், கடுமையான எதிர்ப்பையும் -- அந்தச் சந்திப்புக்கு பல்வேறு அரசியல் உள்நோக்கங்களையும் கற்பிக்க வழி வகுத்தது.

இந்தப் பிரச்னைகளைக் கண்டறியும் நோக்கத்தோடு நடந்ததாக கூறப்பட்ட அந்த குடியிருப்புவாசிகளுடனான சந்திப்பில் நிலவிய அந்த நல்லிணக்கத்தோடு -- இதற்கு அடுத்து மாநில மந்திரிபுசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமுடன் நடந்த சந்திப்பில் -- அதே ஊர்வலக்காரர்கள் நடந்து கொண்ட விதமும் ஏற்படுத்திய அமளியும் வெளிப்படுத்திய ஆக்ரோசமும் -- பல எளிதில் பிடிபடாத பல ரகசியங்களை நமக்குச் சொல்லிய வண்ணம் உள்ளது.

நடு ரோட்டில், ஓர் இனத்தின் கலாச்சார வெளியில் புனிதச் சின்னமாக கருதி வணங்கப்படும் ஒரு பிராணியின் துண்டிக்கப்பட்ட தலை மேல் ஏறி மிதித்து -- காறி உமிழ்ந்து வசைபாடி -- அசிங்கப்படுத்திய சிலரோடு கைகுலுக்குவது எத்தகைய புண்படுத்தும் செயல் என்பதை எண்ணிப் பார்க்க இயலாத ஒருவர் -- உள்துறை அமைச்சராக இருப்பதற்கே லாயக்கற்றவர் -- அவர் ராஜினாமா செய்வதே இதற்கான தீர்வு என்கிற குரல்களும் உரக்க தொடர்ந்து ஒலிக்கத் தொடங்கின.

இந்த விவகாரத்தின் விபரீத திசை மாற்றத்தை கடைசி நேரத்திலேனும் புரிந்துகொள்ளத் தொடங்கிய அரசு -- தன்னை சுதாரித்துக் கொண்டு சூழலை சாந்தப்படுத்தும் முயற்சியாக -- மாட்டுப் பேரணியில் கலந்து கொண்ட ஐம்பது பேரில் ஒரு 12 பேரை சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளது.

அதே வேளையில், இந்த அவமதிப்பு பேரணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்தோடு -- ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேரணியை நமது காவல்துறை வழியிலேயே இடைமறித்து 16 பேரை உடனடியாக கைது செய்த விவகாரம் -- காவல்துறையின் பாரபட்ச சட்ட அமுலாக்கத்தை உறுதிப்படுத்தியதோடு -- கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

அவமதிப்பு பேரணியை தள்ளி நின்று வேடிக்கை பார்த்தவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் -- அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பேரணியை வலிந்து தடுத்து நிறுத்தியதாடு -- கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டது -- சட்ட ஒழுங்கு அமுலாக்கத்தில் அவர்கள் தேர்வு செய்யும் வழிமுறையில் உள்ள சார்பு நிலையை தெள்ளத் தெளிவாக்கியது.

மேலும், இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்த வேளையில் -- அதில் பலரின் கவனத்தை ஈர்த்த ஒன்றாக விளங்கியது -- அந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் தரப்பில் முன்னிறுத்தப்பட்ட -- மலாய்க்கார பெரும்பான்மை -- என்கிற சொல்லாடல்.

அண்மைய காலமாகவே அது புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்றாலும் அதன் வீரியம் இந்த விவகாரத்தின் வழி பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பதுதான் அதன் கொடுமை. மலாய்க்கார பெரும்பான்மை -- என்கிற இந்தச் சொல்லாக்கம் பல்வேறு சூழல்களிலும் இனி இனங்களுக்கடையிலான பொதுவான பிரச்னைகளை அணுகும் நடைமுறைகளிலும் -- வரும் காலங்களில் தலைதூக்கலாம் என்கிற அச்சம் பரவலாக ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தின பின்புலத்தில் இந்தப் பதச் சேர்க்கையின் பிரயோகம் நமக்கு வழங்கும் அர்த்தப்பாடுகள் மிகுந்த வேதனைக்குரியது. தூரநோக்கில் இதன் நீட்சியும் விளைவுகளும் அபாயகரமானவை.

ஒரு பல்லின சமூகத்தில், இது போன்ற -- எண்ணிக்கை பலத்தில் -- தீர்வுகள் நிர்ணயம் செய்யப்படுவது -- இனங்களுக்கு இடையிலான விரிசலை அதிகரிக்கவே செய்யும். அதிலும் ஓர் இனத்தின் இறை நம்பிக்கை வழிபாட்டு ஸ்தலங்கள் போன்ற மிகவும் உணர்ச்சிகரமான (சென்சிடிவ்) ஒரு பரப்பில் இதன் தாக்கம் -- மிக கடும் அதிர்வுகளை உண்டாக்கலாம்.

இந்த நாடகத்தின் இன்னுமொரு காட்சியும் அதிர்ச்சியளிப்பதுதான்.

மாட்டுத்தலை பேரணி குறித்த சர்ச்சை நமது இணையத் தளங்களில் பொறி பறக்க இன்னொரு பக்கம் அதனை அணைக்கும் தீவிர முயற்சியில் அதிகாரவர்க்கத்தின் கருவிகள் இயங்கத் தொடங்கின. தங்களது எஜமான விசுவாசத்தைக் காட்டும் வழக்கமான முனைப்புடன் -- குறிப்பறிந்து -- செயலில் இறங்கின.

இந்த முறை கிடைத்த வாய்ப்பை சரியாகவே பயன்படுத்த முற்பட்டது -- எம்.சி.எம்.சி. எனப்படும் மலேசிய இணையதள ஊடகத்தின் கண்காணிப்புப் பிரிவு. அதன் விளைவு -- ஆகக் கடைசி நிலவரப்படி (12.09.09), ம.சீ.ச தகவல் தொழிற்நுட்ப பிரிவின் பேச்சாளர் லீ வெய் கியாட் அளித்துள்ள தகவல்படி -- இதுவரை அமலாக்க அதிகாரிகள் மூன்றுமுறை மலேசியாகினி அலுவலகம் சென்று -- அதன் 12 ஊழியர்களை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

இதனை ஒரு அச்சுறுத்தும் நடவடிக்கை என்றும் உண்மையை பகிரங்கப்படுத்தும் அவர்களின் மனோதைரியத்தை ஊனமாக்கவும் -- அதிகார வர்க்கம் திட்டமிட்டு மேற்கொண்ட ஒரு தவறான நடவடிக்கை ஆகும் எனவும் பரவலாகப் பேசப்பட்டது. இதில் உள்துறை அமைச்சருக்கு நேரடி தொடர்புண்டு என்கிற குற்றச்சாட்டு எழ அவர் அதனை மறுத்து வழக்கம்போல் அறிக்கையும் விட்டார்.

இன்றைய நிலவரப்படி -- செக்ஸன் 23 ஷாஆலாமில் நிர்மாணிக்கப்பட இருந்த மாரியம்மன் கோயில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நிச்சயம் இது அந்தப் பேரணியை திட்டமிட்டு முன்னின்று நடத்தியவர்களுக்கு கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகமில்லை. எல்லோருக்கும் ஏற்புடைய ஒரு புதிய இடத்தை கண்டடையும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதே நடைமுறை, அனைத்து மதங்களின் வழிபாட்டு ஸ்தலங்களுக்கும் இனி நீட்டிக்கப்படுமா அல்லது குறிப்பிட்ட மதத்தவரின் -- சிறுபான்மை என்று வாசித்துக்கொள்க -- வழிபாட்டு ஸ்தலங்களுக்கு மட்டுமே இம்முறை நடைமுறைப்படுத்தப்படுமா என்கிற கேள்வி எழுவது நியாயமே. நியாயமான கேள்விதான். பதில் நியாயமானதாக இருக்குமா என்பதைக் காலந்தான் சொல்ல வேண்டும்.

மலேசியா போன்ற ஒரு பல்லின, பல சமய, பன்முக பண்பாடு கலாச்சார, பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட நாட்டில் -- நல்லிணக்கம் என்பது -- சுதந்திரம் பெற்று ஐம்பதாண்டுகள் கடந்த நிலையிலும் -- சகிப்புத்தன்மை -- என்கிற ஒரு சிறு கூட்டுக்குள்ளேயே -- அடைக்கப்பட்டு மூச்சுத் திணறிக் கிடக்கிறது என்பது கவலைக்குரிய நிலையே. அரசியல்வாதிகளும் தங்களின் சுயநல வேட்கைக்கு ஏதுவாக -- வெற்று ஸ்லோகங்களை மட்டுமே அதற்கு அவ்வப்போது உணவாக அளித்து -- அதை அங்கேயே தக்கவைத்து பராமரிப்பதில் கண்ணுங்கருத்துமாக செயல்படுகின்றனர்.

சகிப்புத்தன்மை என்பதே ஒருவித வலிந்து திணிக்கப்பட்ட -- சமூக ஒழுங்கு -- என்கிற பெயரில் கட்டமைக்கப்பட்ட -- எதிர்மறை மனித உணர்வின் -- மறுவடிவமே. நீ செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், சகித்துக்கொள்கிறேன். வேறு வழியில்லை? -- என்பதிலிருந்து, எங்கனம் பல்லினங்களிடையே, சகலவித மனத் தடைகளையும் உடைத்தெறிந்த -- ஒரு பரஸ்பர நிஜமான புரிந்துணர்வும், மரியாதையும், அன்பும், நேசமும் கொண்ட உறவு மலரக் கூடும்?

மிக சமீபத்திய நிகழ்வொன்று -- நேரடியாக அல்லாமல் மறை பொருளாக -- நமது கவனத்திற்குட்பட்டுள்ள இந்த விவகாரத்தோடு சம்பந்தப்படுவதால் -- அதனையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கிறேன். மாண்புமிகு சாமிவேலு அவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடும் தனது சொந்த கோயில் தேர்(தல்) திருவிழாவுக்கு வீட்டிலேயே மொட்டை போட்டுக் கொண்டு கோலாலம்பூர் வந்திருந்தனர் அன்னாரது பக்தகோடிகள் பலர்.

அதில், ஒரு பக்தர், 'சாமி' மேல் கொண்ட அதீத பக்தியில் அருள் வந்து ஆடி -- அருள் வாக்கு வழங்கிய தருணம் -- எசகு பிசகாக ஆளுயர ரோஜா மாலைக்குப் பதிலாக 'செருப்பு மாலையை' -- நமது முன்னாள் தெய்வத்துக்கு போடச் சொல்லிவிட்டு -- மலையேறிவிட்டது.

இது சனிப் பெயர்ச்சியின் தொடக்க அறிகுறி -- அதிலும் மிக மோசமான ஏழரைநாட்டுச் சனி -- என்பது திருவிழா குஷியில் இருந்த கோயில் தலைவருக்கோ அல்லது அவரது சீடர்களுக்கோ அப்போது தெரியவில்லை. ஆனாலும், கடந்த சில நாட்களில் -- அன்று அந்த சுகுமார ஸ்வாமிகள் என்கிற பக்தரின் தலையில் ஏறி உட்கார்ந்து அருள்வாக்கு சொன்னது சாட்சாத் அந்த சனீஸ்வரன்தான் என்பதை கோயில் தலைவரே இப்போது புரிந்துகொண்டிருப்பார்.

இங்கே நான் பேச வந்தது அதுவல்ல. அதன் தொடர்ச்சியான -- அந்த அவமதிப்புக்கு உள்ளான நமது முன்னாள் பிரதமரின் ஒரு எதிர்வினை குறித்த எனது அவதானிப்பு. உண்மையில், மிக மோசமான அவமதிப்பு அந்த அதீத பக்தரின் அருள்வாக்கு. கோயில் தலைவர் விழா தந்த வெற்றி போதையில் அதனைக் கண்டுகொள்ளாமல் போனதும் பெருந்தவறு. பிறகு தொடுக்கப்பட்ட நெருக்குதலில், அவர் இறங்கி வந்து தானே அவரை (துன் மகாதீர்) நேரடியாகச் சந்தித்து மன்னிப்புக் கேட்க இருப்பதாகவும் -- அருள் வாக்கு தந்த சுகுமார பக்தரும் ஹரிராயா பெருநாள் அன்று முன்னாள் பிரதமரின் திறந்த இல்ல விருந்து உபசரிப்பில் கலந்து கொண்டு -- மன்னிப்புக் கேட்க இருப்பதாகவும் அறிக்கைகள் விடப்பட்டுள்ளன.

இதுவரை சரி. அடுத்து, இந்த மன்னிப்பு விவகாரம் குறித்து நமது முன்னாள் பிரதமரிடம் கருத்து கேட்கப்படுகிறது. அதற்கு அவரது பதில் இப்படி அமைகிறது -- மன்னிப்பு கேட்டால் ஓகே. கேட்காவிட்டாலும் எனக்கு அது ஒரு பொருட்டல்ல. எனது இன மக்கள் என்னை அவமதிக்கும் போதுதான் நான் புண்படுகிறேன்..

ஒரு மாபெரும் உலகத் தலைவர். இந்நாட்டை 22 ஆண்டுகள் வழிநடத்தி வளப்பம் சேர்த்தவர். மலாய்க்காரர்களின் சிந்தனையைச் செதுக்கி புத்தாக்கம் செய்த நிஜமான சமுதாயச்சிற்பி. அனைத்து இன மக்களையும் ஒரு குடையின் கீழ் வைத்து சமமாக பார்க்க வேண்டிய முதியவர். ஆனால், அவரே ஒரு சாதாரண பாமர குடிமகனைப் போல -- சாதாரண ஒரு மன்னிப்பு விவகாரத்தில் கூட -- என் இனம், உன் இனம் -- என வேற்றுமைப்படுத்திப் பேசுகிறார். மனம் புண்படுகிறது.

புண் வெகு ஆழத்தில் புரையோடிக் கிடக்கிறது. சந்தேகமில்லை. 1மலேசியா என்கிற புதிய ஸ்லோகம் நனவாக வெகுதூரம் நாம் கடக்க வேண்டி இருக்கும். இன்னமும், அந்தப் பயணத்திற்கான சரியான தெளிவான திசையை நாம் கண்டடையவில்லையோ என்கிற அச்சத்தை -- மாட்டுத் தலையோடு வாழ்ந்த இந்த ஒருவார கால நடப்புகள் -- அதிலும் அதைக் கையாண்ட அதிகார வர்க்கம் வெளிப்படுத்திய -- இரட்டைநிலை -- ஏற்படுத்துகிறது.

எனவே, யாரோ சொன்னது போல -- இது 1மலேசியா அல்ல. இன்னமும், இது 2 மலேசியாதான். ஒன்று சிறுபான்மை இன்னொன்று பெரும்பான்மை.

அதனை போதிய ஆதாரங்களுடன், மீண்டும் நிரூபித்துள்ளது -- இந்த ஒரு வார கால மாட்டுத் தலை விவகாரம்.

Sunday, October 4, 2009

Reasons He Dumped You

I was flipping through a Women's Health recently (I admit it), and I noticed an interesting poll. Women cited the following as the most common breakup reasons:

He changed
We weren't compatible
He cheated on me
When I was little, it drove me crazy when my parents supported "no" with "because I said so." I always wanted a reason. I'm not sure if knowing why always helps, but perhaps if you know common reasons guys break up with girls, you'll at least be able to see it coming. So, here are mine:

I Got Bored: I've read many different hypotheses on attention span, but my favorite is (Wikipedia):

"Continuous attention span, or the amount of time a human can focus on an object without any lapse at all, is very brief and may be as short as 8 seconds. After this amount of time, it is likely that an individual's eyes will shift focus, or that a stray thought will briefly enter consciousness."

My attention span (unless it's a football game or a song) may be worse. I know a relationship is not supposed to be exciting all the time, so getting through those flatline moments between the sparks is critical. If I start having more fun with other activities, the relationship is doomed.

One of Us Was Too Serious: This could be as simple as she wanted to see me three times a week, and I only wanted to see her once a week. If she's flirting with other guys, flighty, or not as into it as I am, then I'm too serious for her.

Burnout: I'm a big believer in pacing and rhythm in dating. A relationship can suffer burnout if certain milestones occur too fast: Being exclusive, sex, meeting parents. When that happens, I get that feeling the colonists must have gotten after they won the Revolutionary War: "Ok, we did it...so now what?"

I Was Tempted To Cheat: I do my best not to cheat, so when I have recurring urges to cheat on my girlfriend, I figure it's time to break up with her. I don't need to go through with cheating; the constant urge is enough for me to end things.

All My Friends Broke Up With Their Girlfriends: This is by far the most immature reason on this list. While my girlfriend and I are curled up on the couch watching "The Devil Wears Prada," my newly single guy friends are out shredding the karaoke waves with Journey's "Don't Stop Believin" and tearing up the town. That conflict gives me wanderlust. It's much easier when we are all in for a quiet Saturday night with the significant others.

Divergent Lives: If someone moves to another town, or work is taking over, or other life changes are driving you apart, sometimes it's best to end it.

Feeling Selfish: Dating is selfless because you're giving your time and yourself up to a relationship. "Me time" is necessary at some point to work on career/living situation, travel, or whatever. When I'm in a "selfish period," it's tough to participate in a relationship.

I "Misread" My Feelings: This is the most unfair of all the reasons. Both genders make this mistake—you get into a relationship and everything seems so great. Then, a few weeks later, you realize you got wrapped up in something for the wrong reason, dated for the sake of dating, or whatever, and you need to get out.

My Friends Or Family Didn't Like Her: I pay close attention to friend/family opinions because they know me best, and they've earned the right to have their say. Also, friends and family may be able to see things inside the relationship that I'm too blinded to see.

I Took Her For Granted: Great relationships should be easy, but there has to be some tension too—especially in the beginning. If it's too easy, there's a lack of challenge. If I feel like I could have her heart any time any place, sometimes I'll let her go. This almost always ends up coming back to haunt me later, though. I never learn.

She Was Too Negative: All too often, I end up with the brooding, depressed, uptight type who is constantly complaining. I don't expect someone to be happy all the time, but if she makes me unhappy every time I see her, why stay with her?

What reasons have guys used to break up with you, and which make you most angry? What reasons have caused you to break up with guys? Which reasons do you think are the most common cause of breakups- do they differ for guys and women?

Thursday, September 24, 2009

கருணாநிதியின் உலகத் தமிழ் மாநாட்டை உலகத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை

கருணாநிதியின் உலகத் தமிழ் மாநாட்டை உலகத் தமிழர்கள் புறக்கணிக்க
வேண்டும்: ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை
[ திங்கட்கிழமை, 21 செப்ரெம்பர் 2009, 03:11.07 AM GMT +05:30 ]
இலங்கையில் தமிழர்கள் வதை முகாம்களுக்குள் வைத்து சிறுகச் சிறுகக்
கொல்லப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால்
நடாத்தப்படவுள்ள 'உலகத் தமிழ் மாநாடு' என்ற கலைஞர் விழாவைப் புறக்கணிக்க
வேண்டும் என பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு இதழ் உலகத் தமிழர்களிடம்
வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஈழநாடு (பாரிஸ்) வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 9-வது உலகத் தமிழ் மாநாடு
எதிர்வரும் ஜனவரி 21 முதல் 24 வரை கோவையில் நடாத்தப்படும் எனத்
தெரிவித்துள்ளார்.

முதலாவது 'உலகத் தமிழாராய்ச்சி மாநாடு' 1966 ஏப்ரல் மாதத்தில் ஈழத்துத்
தமிழரான வணக்கத்திற்குரிய தனிநாயகம் அடிகளாரால் மலேசிய தலைநகரான
கோலாலம்பூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் இரண்டாவது மாநாடு 1968-ம்
வருடத்தில் அன்றைய தமிழக முதல்வரான அண்ணா அவர்களால் நடாத்தப்பட்டது.
மூன்றாவது 'உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1970-ம் ஆணடு பாரிஸ் நகரில்
நடாத்தப்பட்டது.

அதன் பின்னர் 1974-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத்
தமிழாராய்ச்சி ஈழத் தமிழினத்தின் மாநாடு பெரும் சோகமாக நிறைவுற்றது.

தமிழ் மக்களால் கோலாகலமாக நடாத்தப்பட்ட இந்த மாநாட்டில் அன்றை சிங்கள
ஆட்சியாளர்களால் திட்டமிட்டு கலகத்தை விளைவித்தனர். இலட்சக்கணக்கான
மக்கள் கூடியிருந்த அந்த இறுதிநாள் நிகழ்வில் திட்டம்போட்டு உள் நுழைந்த
பொலிஸார் கணணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலகம்
விளைவித்ததால் ஏற்பட்ட நெரிசலிலும், மின்சாரக் கம்பிகள் அறுந்து
வீழ்ந்ததாலும் 9 தமிழர்கள் பலியானார்கள். அந்த அரச பயங்கரவாதமே தமிழ்
இளைஞர்களை ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நோக்கி நகர்த்தியது.

அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்த வேளை, 1981-ம்
ஆண்டு 5-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மதுரையில் சிறப்பாக நடைபெற்றது.
ஆறாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1987 இல் கோலாலம்பூரிலும், ஏழாவது
மாநாடு 1989 இல் மொரிசியசிலும் நடைபெற்றது.

அதன் பின்னர் ஆறு வருடங்கள் கடந்த நிலையில், 1995-ம் ஆண்டில் அப்போது
தமிழக முதல்வராகப் பதவி வகித்த செல்வி ஜெயலலிதா அவர்களால் தஞ்சாவூரில்
நடாத்தப்பட்டது. அதில் கலந்து கொள்ளச் சென்ற தமிழீழ அறிஞர்கள், செல்வி
ஜெயலலிதா அவர்களால் அவமானப்படுத்தப்பட்டு, அனுமதி மறுக்கப்பட்டது.

அதன் பின்னர் 14 வருடங்கள் கடந்த நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி
அவர்களால் 'உலகத் தமிழாராய்ச்சி மாநாடு' என்ற பதம் மாற்றம் செய்யப்பட்டு,
'உலகத் தமிழ் மாநாடு' என்ற நாமத்துடன் அரங்கேற்றப்படவுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கூட்டப்பட்டிருக்க வேண்டிய இந்த மாநாடு
கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகத்தை ஆண்ட 14 வருட காலத்தில் முதல்
தடவையாக உலகத் தமிழர் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. கலைஞர் அவர்களது
தமிழ்ப் பற்றுக்கு இதுவும் ஒரு மைல் கல்லாகப் பதிவு செய்யப்படவுள்ளது.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழுக்குச் செய்ததை விட
அதிகமாகவே தமிழ் அவருக்குச் செய்துள்ளது. வெறும் தகரப் பெட்டியுடன்
திருக்குவளையிலிருந்து சென்னை வந்த கருணாநிதி அவர்களுக்கு தமிழ் சோறு
போட்டது. தமிழ் அரசியலைக் கற்றுக் கொடுத்தது. தமிழ் அவரைக் கோடீஸ்வரனாக
உயர்த்தியது. தமிழ் அவரை தமிழக முதல்வராக 14 வருடங்கள் பதவியில்
அமர்த்தியுள்ளது. தமிழ் வேறொருவருக்கும் இந்த அளவுக்கு வாரி வழங்கியதும்
இல்லை வாரி வழங்கப் போவதும் இல்லை.

'வீழ்வது தமிழாக இருந்தாலும், வாழ்வது நானாக இருக்கவேண்டும்' என்ற
அர்த்தத்தில் தமிழக முதல்வர் அடிக்கடி சொல்லும் வார்த்தையை
எடுத்துக்கொள்ளும் அளவிற்கு தமிழ் தாழ்ந்த அளவிற்கு கலைஞர்
உயர்ந்துவிட்டார். 'தமிழா! தமிழா!! என்னைக் கட்டிக் கடலில் போட்டாலும்,
நான் கட்டுமரமாக மிதப்பேன். அதில் ஏறி நீ பயணம் செய்யலாம்' என்று கலைஞர்
தொலைக்காட்சியில் தமிழ் விற்கப்படுகின்றது. தமிழர்கள் ஏமாளிகளாக
ஆக்கப்படுகின்றார்கள்.

சிங்களக் கொடும்பாவிகள் தமிழீழ மக்கள்மீது தமிழின அழிப்பு யுத்தத்தை
மேற்கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த
காலத்தில், அந்த வேதனை தெரியாத வகையில் 'மானாட மயிலாட' வழங்கி மகத்தான
தமிழ்ப் பணி ஆற்றியவரல்லாவா எங்கள் கலைஞர்.

ஈழத் தமிழர்களின் வேதனைகளால் தமிழக மக்கள் துன்பப்பட்டு விடக்கூடாது என்ற
அவாவினால், இன்றுவரை சண் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும்
அத்தனை செய்திகளையும் இருட்டடிப்புச் செய்து தமிழ்ப் பணியாற்றியதை
தமிழகத் தமிழர்கள் உணர்ந்திருப்பார்களோ தெரியாது, ஆனால், ஈழத் தமிழர்கள்
உட்பட உலகத் தமிழர்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்கள்.

சினிமா மோகத்திலும், அரசியல் சகதிக்குள்ளும் சிக்காத தமிழ் உணர்வாளர்கள்
பொங்கி எழுந்தபோது, சோனியாவிற்கும் மன்மோகன் சிங்கிற்கும் எழுதிய
கடிதங்கள் எவ்வளவு அற்புதமானவை. அவையும் நாளை நெஞ்சுக்கு நீதியாகி,
கருணாநிதியின் கல்லாப் பெட்டியை நிறைக்கத்தான் போகின்றது.

மூன்று வேளையும் உண்டு வசதியாக வாழ்ந்த மக்கள், சிங்கள தேசத்திடம்
அடிபணிய மறுத்து முள்ளிவாய்க்கால் வரை இடம் பெயர்ந்து, அதற்கும் அப்பால்
செய்வது எதுவென்று தெரியாமல், ஒரு மிடறு தண்ணீருக்கும் வழியில்லாமல்
ஏங்கித் தவித்தபோது, அப்போதும் தத்துவம் பேசத் தமிழ்தான் கலைஞரின் நாவில்
நின்றது. தலைமாட்டில் மனைவியும், கால்மாட்டில் துணைவியுமாக அண்ணா
சிலையருகே அரைநாள் உண்ணாவிரதம் இருந்தபோது, அதையும் மந்தைகள் போல் தமிழக
மக்களைத் தலையாட்ட வைத்ததும் அதே தமிழ்தான்.

தமிழகத்திலேயே மிகப் பெரிய செல்வந்தக் குடும்பமாக கலைஞரை உருவாக்கி,
அரசியலில் அந்தக் குடும்பமே உச்ச நிலைக்குச் செல்ல, இன்னமும் மேலே செல்ல
உறுதுணையாக இருக்கும் தமிழுக்கு கலைஞர் விழா எடுப்பது மிகப்
பொருத்தமானதே.

ஆனால், உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்தது முதல், அதன்
நிமித்தம் உயிர்களையும் பலி கொடுத்த ஈழத் தமிழினம் இத்தனை கொடுமைகளை
அனுபவிக்கும் இன்னைய காலத்தில், ஆயிரம் ஆயிரமாகக் கொல்லப்பட்டு,
எஞ்சியவர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டவர்களாக சிறை முகாம்களில் சிக்கித்
தவிக்கும்போது போலியாக ஆவது கலைஞர் கவலை கொண்டிருந்தால் உலகத் தமிழினம்
தமது சினத்தைக் குறைத்திருக்கும்.

ஈழத் தமிழர்களது இத்தனை அழிவுக்கும், அவர்களது அவலங்களிற்கும் கலைஞர்
கருணாநிதி அவர்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை உலகத் தமிழினம் நன்றாகவே
புரிந்து வைத்துள்ளது.

ஈழத் தமிழர்களின் அவலங்கள் தொடர்வதால் உலகம் இலங்கை மீது கோபப் பார்வை
பார்க்க ஆரம்பித்துள்ள நிலையில், அந்த அக்கினித் தீ தமிழகத்தையும் தொட்டு
விடுமோ என்ற பயத்தின் காரணமாக, தமிழக மக்களை மந்தைகளாக்கி மலிவு விலையில்
கொள்முதல் செய்யவே கலைஞர் 'உலகத் தமிழ் மாநாடு' ஏற்பாட்டைச் செய்கிறார்
என்பது நன்றாகவே புரிகின்றது.

இப்போது கலைஞரது தலைக்குப் பின்னால் பிரகாசித்த ஒளி வட்டம் மங்கி வருவது
நன்றாகவே தெரிகின்றது. அதை மீண்டும் துலக்குவதற்கு கலைஞர்
முயற்சிக்கிறார்.

தமிழகத்து முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள், தமிழாலும், பணத்தாலும்,
சினிமாவாலும், தொலைக்காட்சியாலும் அப்பாவிப் பாமர தமிழகத்து மக்களுக்குத்
தன்னை பரமாத்மாவாகக் காட்டிக் கொள்ளலாம். ஆனால் நடந்து முடிந்த,
நடக்கின்ற அத்தனையையும் பகுத்தறிவோடு பார்த்துக்கொண்டிருக்கும் உலகத்
தமிழினம் அவரின் மகுடிக்கு மயங்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

சிங்கள தேசத்தின் இன அழிப்பு யுத்தத்தில் ஈழத் தமிழர்கள்
பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டு, எஞ்சிய தமிழர்கள் வதை
முகாம்களுக்குள் வைத்து சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டு வரும் நிலையில்
தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் நடாத்தப்பட உள்ள 'உலகத் தமிழ்
மாநாடு' மிகக் கொடுமையான ஈனச் செயல் என உலகத் தமிழர்கள் எண்ணுகிறார்கள்.
சினம் கொள்கிறார்கள்.

தமிழுக்கு அரியாசனம் பெற்றுக் கொடுக்கவும், உலகத் தமிழினத்திற்கு ஒரு
நாடு உருவாக்கவும் களத்தில் நின்று போராடி பல்லாயிரக்கணக்கான விடுதலைப்
புலிகள் தமது இன்னுயிரை ஈகம் செய்துள்ளார்கள். விடுதலைப் புலிகளின்
இலட்சியத்திற்குப் பக்கபலமாக நின்று, இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள்
தங்கள் உயிரை அர்ப்பணித்துள்ளார்கள்.

இந்த விடுதலைத் தீ அணைந்து போகாமல் தடுக்கவும், விடுதலை அவா கொண்ட அந்த
மக்களைக் காப்பாற்றவும் முத்துக்குமார் தொடக்கம் பல தமிழர்கள் தம்மைத்
தீக்கு இரையாக்கித் தீபங்களாக மாறியுள்ளார்கள்.

அத்தனை நடந்தும் எதையும் கண்டு கொள்ளாமல் பச்சைத் துரோகம் செய்த தமிழக
முதல்வர் அவர்கள் ஈழத் தமிழரால் உருவாக்கப்பட்ட 'உலகத் தமிழாராய்ச்சி
மாநாடு' என்ற உயரிய சிந்தனைக்கு விளக்கு ஏற்றுவதும் விழா எடுப்பதும்
பொருத்தமற்ற காலத்தில் செய்யப்படும் வெட்கக்கேடான செயலாகவே
கணிக்கப்படுகின்றது.

இந்த அரசியல் சித்து விளையாட்டில் கலந்து கொண்டு, வரலாற்றுத் தவறை
மேற்கொள்ள உலகத் தமிழர்கள் தயாராவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

தமிழ் மீதான அளவற்ற பற்றுக் காரணமாக, இதனைக் கவனத்தில் கொள்ளத் தவறிய
அனைத்துத் தமிழ்ப் பெரு மக்களும், அறிஞர்களும் இந்த 'உலகத் தமிழர்
மாநாடு' என்ற கலைஞர் விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என்பதே, தமிழுக்காக
வீழ்ந்த, வாழ்விழந்த ஈழத் தமிழர்களின் அவாவாகும்

Tuesday, September 8, 2009

MACC Monitors Campaigns By Candidates For MIC Election

KUALA LUMPUR, Sept 5 (Bernama) -- The Malaysian Anti-Corruption Commission (MACC) will monitor campaigns carried out by candidates and the MIC party election process to be held on Sept 12 and 13 to curb political corruption.

The MACC said in a statement on Saturday that the move was being taken following a front-page report in a Tamil newspaper, Malaysian Nanban, today headlined "RM300 for MIC delegates in Melaka", that claimed that MIC delegates from the state were given the money as well as a compact disc by a candidate contesting in the party election.

"The MACC takes a serious view with regard to the matter and has directed the Melaka MACC to carry out initial investigation into it," it said.

The Commission also urged any delegate who had been offered cash to vote for the candidate concerned to lodge a report with the MACC so that further action could be taken.

"Any offer and acceptance of a bribe to vote for a candidate is illegal under the provisions of the Malaysian Anti-Corruption Commission Act 2009," it said.

-- BERNAMA

MIC election campaigns will be monitored: MACC

THE Malaysian Anti-Corruption Commission (MACC) will monitor campaigns carried out by candidates and the MIC party election process to be held on September 12 and 13 to curb political corruption.

The MACC said in a statement today that the move was being taken following a front-page report in a Tamil newspaper, Malaysian Nanban, today headlined
"RM300 for MIC delegates in Melaka", that claimed that MIC delegates from the state were given the money as well as a compact disc by a candidate contesting in the party election.

"The MACC takes a serious view with regard to the matter and has directed the Melaka MACC to carry out initial investigation into it," it said.

The Commission also urged any delegate who had been offered cash to vote for the candidate concerned to lodge a report with the MACC so that further action could be taken.


"Any offer and acceptance of a bribe to vote for a candidate is illegal under the provisions of the Malaysian Anti-Corruption Commission Act 2009," it said.
- Bernama

நாட்டுக் கோட்டைச் செட்டியாரும் மலாக்கா செட்டி சமூகமும்

மலாக்கா மாநிலத்தில் வாழ்ந்துகொண்டே என்னைப் பற்றியும் என் வாழ்வைப் பற்றியுமே சிந்தித்த சராசரியிலும் கீழான மனிதன் நான். என்கூடவே முப்பாட்டன் காலந்தொட்டு வாழ்வை நகர்த்தி வந்த தமிழர் மரபில் வந்த ஒரு சமூகத்தைப் பற்றி கடுகளவாவது தெரிந்து வைத்திருந்தேனா? என்ன வகை மனிதன் நான்! அதனால், மோட்டார் சைக்கிளை முடுக்கி நாற்பது நிமிடங்களில் மலாக்கா பட்டினத்தை அடைந்தேன். அந்தச் சமூகம் வசிக்கின்ற பகுதி ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், அது குறித்த முன்னறிவோடு செல்லலாம் என்று தீர்மானித்திருந்து,அதற்காக வணிகப் பெருமகனார் டத்தோ S.K.R.M துரைராஜ் அவர்களை முதலில் சந்திக்கலாம் என்று எண்ணியிருந்தேன். இதற்குச் சிறப்புக் காரணமும் உண்டு. பொதுவாகவே டத்தோ S.K.R.M. துரைராஜ் அவர்கள் நிறைகுட மாயினும், எல்லாப் பொது இலக்கிய நிகழ்வுகளிலும் தன்னடக்கமாய்ப் பின்னிருக்கையில் அமர்ந்திருப்பதையே விரும்பும் பண்பினர். அதனால், அவரில் ஓர் ஈடுபாடு இருந்தது. அவர் அச்சமயம் வேறொரு காரியம் பொருட்டு வெளியில் சென்று திரும்பும் வரை, அவர் மகன்தான் சிறு விளக்கம் கொடுத்தார். பிற்பாடு அவர் வந்து சேர்ந்ததும், பல பயனான விவரங்கள் எனக்குக் கிடைத்தன. வேறு யாராவது இது பற்றிப் பேசுவார்களா என வினவினேன். லோரோங் ஹங் ஜெபாட்டுக்குச் சென்றால் அங்கு வழக்கறிஞர் அருணைச் சந்திக்கலாம் என்றார். இந்த நகைக்கடையிலிருந்து பொடிநடையொக நடந்து சென்றால் ஐந்தே நிமிடங்களில் அடைந்துவிடலாம் என்றார். அவரது பேச்சைக் கேட்டபின்பு மோட்டார் சைக்கிளை நன்கு பூட்டிவிட்டு நடந்தேன்.( ஏற்கெனவே PCY 1074 காணாமல் போயிருந்த பட்டறிவு)

அது லோரோக் ஹங் ஜெபாட் என்பதாகப் பெயர். 64 ஆம் எண் கொண்ட கடைவீதியில்தான் வழக்கறிஞர் அருணின் அலுவலகம் உள்ளது. அதனை அடைவதற்கு முன் மலாக்கா நதியைப் பாலத்தின் மூலம் கடந்து செட்டியார் இருப்பிடங்களைத் தாண்டிச் சென்றாக வேண்டும். அது நாம் வழக்கமாக வசிக்கின்ற வீட்டின் அமைப்பைப் போல் தெரியாது என்பதைத் திறந்து கிடந்த ஒரு கடை வீட்டைப் பார்த்ததும் அறிந்து கொண்டேன். வாசலில் நின்று தெரு நாய் ஒன்று எட்டிப்பார்ப்பது போல தலையை உள்ளிட்டு " வணக்கம் ஐயா'' என்றேன். கல்லாப் பெட்டியைப் போல அமைந்த நீண்ட வாங்கிற்கு அருகில் வெள்ளையும் சள்ளையுமாய் வேட்டி சட்டையுடன் அறுபது வயதைத் தாண்டிய முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். வேறு யாரையுமே காணேன். வணக்கம் என்பது மரியாதைக் குறைவான வார்த்தையா என்று யோசிப்பதற்குள் " யாருமில்ல... வெளிய போ!" என்று சூடான வார்த்தைப் பிரயோகம் என் ஆர்வத்தைத் தடுமாறச் செய்தது. " நான் திருடன் இல்லை ஐயா!" என்றேன். அவர் திரும்பத் திரும்ப மனனம் செய்ததைப் போல ஒப்புவித்தார். உள்ளே அனுமதிக்காவிட்டால் என்ன, பேசக்கூடவா முடியாது? எனக்குள் கோபம் பிரவாகமெடுத்தது. நான் சராசரி மனிதன் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன் அல்லவா?" கதவை நல்லா பூட்டிக்குங்க. நான் ரொம்ப மோசமானவன்!" என்று சொல்லிவிட்டு அதே வரிசையில் இன்னொரு கடைக்குத் தாவ அங்கு வெகு நேரமாய் என்னையே பார்த்துக் கொண்டிருந்த அறுபது வயதைத் தாண்டிய அம்மா சிரித்தபடி அமர்ந்திருந்ததார். " என்ன தம்பி செய்றது? எங்கே பார்த்தாலும் திருடு அது இதுன்னு நடக்குது. இன்னிக்கு நேத்திக்கு இல்ல...!ஒங்களப் பாத்தாலும் அப்படித்தான் இருக்கு! அதனாலதான் பயம்" என்றார். நானும் அப்படித்தான் வழிப்போக்கன் மாதிரி தெரிந்தேன். அப்பாடா! இவராவது பேசினாரே என்று ஆசுவாசப்பட்டேன். இவரது பெயர் வைரத்ததாயம்மாள் @ வள்ளிக்கண்ணு-வயது 68. இந்தத் தெரு 100 ஆண்டுகளுக்கு முன்பு செட்டித் தெரு என்ற பெயர்தான் இருந்ததாம். டச்சுக்காரர் ஆண்ட காலத்தில் ( 1641-1824 ) மூங்கில் காடுகளாக இருந்த இப்பகுதியை அழித்துப் பலகையாலும் அத்தாப்பு ஓலைகளாலும் தமிழர்கள்தான் வீடுகளைக் கட்டினார்களாம். இத்தெருவைச் சுற்றியுள்ள கிராமத்துக்குக் கம்போங் கிலீங் @ மலாக்கா செட்டி கிராமம் என்ற பெயர், அப்பொழுது வழக்கில் இருந்ததை இன்னமும் வாழ்ந்து வருகிற வயதானவர்களுக்கு மட் டுமே தெரியும் என்றார். அந்த அம்மா சிறிய அளவிலான குளிர்பானக் கடையைப் பராமரித்து வருகிறார். ஐந்து நிமிடங்கள் பேசினாலும் அன்போடு பேசியதால் இரண்டு வெள்ளி கொடுத்துச் சில்லென்று குடித்துவிட்டு வழக்கறிஞர் அருணின் அலுவலகத்திற்குச் சென்றேன். பக்கம்தான். அசப்பில் பார்த்தால் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் போல தோற்றமளித்தார். காரைக்குடியி லிருந்து வந்து குடியேறி இருபது ஆண்டுகள் ஆகிவிட்ட தாகவும் தற்போது தந்தையின் நிர்வாகத்தைக் கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டார். அமர்ந்து பேசுவதற்குச் செந்தணப்பு வசதி கொண்ட அறையை எனக்காக ஒதுக் கித் தந்த பொழுது அங்குப் பேழைப் பேழையாக நிரம்பிக் கிடந்த நீதிசார் புத்தகங்களைக் கண்டு துணுக்குற்றேன். சின்ன பையன் போலிராமல் மரியாதையாகப் பேசி முறையாகத் தகவல்களைத் திரட்டலாம் என்று முற்பட்ட போது முற்பகல் பன்னிரண்டை நெருங்கிக் கொண்டி ருந்தது. நான் மலாக்கா செட்டி சமூகத்தைக் குறித்துத் தெரிந்து கொள்ளத்தான் வந்தேன் என்றாலும் நாட்டுக்கோட்டை செட்டியாரைப் பற்றியும் தெரிந்து கொள்வதும் நலம் என்றேன். மலாக்கா செட்டியைப் பற்றி தனக்கு முழுமையாகத் தெரியாதெனவும் நாட்டுக் கோட்டைச் செட்டியாரைப் பற்றி வேண்டுமானால் சொல்கிறேன் என்றார். இரண்டு வகை ' செட்டிகளைத்' தெரிந்துவைத்திருத்தல் நன்மையென்று கருதி காது களைக் கூர்மையாக்கிக் கொண்டேன். அப்போது அவர் கூறிய விவரங்கள் பின்வருமாறு:

ஃ நாட்டுக்கோட்டைச் செட்டியாரும் (நகரத்தார் ) மலாக்கா செட்டி சமூகமும் ஒன்றல்ல.
ஃ நாட்டுக்கோட்டைச் செட்டியாரின் தாய்மொழி/ பேச்சு மொழி தமிழே.
ஃ நாட்டுக்கோட்டைச் செட்டியார் இங்குக் குடியேறி தோராயமாக 100-150 ஆண்டுகள் இருக்கும்.
ஃ இவர்கள் பூம்புகா'ர் வணிகர் மரபைச் சேர்ந்தவரென்றும், பூம்புகார் பெரும்பாலும் கடற்கோளுக்கு இரையாகி வந்தமையால் அவர்கள் இடம் பெயர்ந்து இராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, செட்டி நாடு போன்ற பகுதிகளில் வாழ்ந்து வந்த சமூகமாகும்.
ஃ சந்யாசி ஆண்டவர் ஜீவசமாதி அடைந்த மலாக்கா சந்யாசி மலை கோயில் நாட்டுக்கோட்டையாரு டையது. இது போல பல கோயில்கள் முழுக்க முழுக்கச் சுய முதலீட்டைக் கொண்டு நிறுவப்பட்டவை.
ஃ ஐதீ க வழிபாட்டில் முழு நம்பிக்கையு டையவர்கள்.
ஃ நாட்டுக்கோட்டையர் என்பது வணிகத் தொடர்பு சார்ந்த தமிழ் மக்களின் ஒரு வகைப் பிரிவு (குலம்).
ஃ முன்னொரு காலத்தில் மலாக்கா பட்டினத்தில் மட்டும் 100 க்கும் குறையாத வணிகக் கடைகளை வைத்திருந்தவர்கள்; பெருஞ்செல்வந்தர்கள்.
ஃ மலாக்காவைத் தவிர்த்துத் தென்கிழக்காசிய நாடுகளிலும் மலாயாவின் பல மாநிலங்களிலும் அழுத்தமாகக் கால் பதித்தவர்கள்.
ஃ யாரிடமும் கையேந்தாத சுய உழைப்பை மட்டும் நம்பியவர்கள்.
ஃ மலாக்கா மாநிலத்தில் மட்டும் 40,000 ஏக்கர் நிலபரப்பைப் பெற்றிருந்தவர்கள்.
ஃ ஏராளமான தோட்டங்களுக்கு உரிமையாளர்கள்.
ஃ பர்மா, கம்போடியா, ( மலாயா உட்பட- மே 1969 இனக் கலவரம்) போன்ற தேசங்களில் குடியுரிமைப் பிரச்சனையை எதிர்நோக்கி சொத்து களைச் சீனரிடமும் அந்தந்தத் தேசத்தின் செல்வரிடமும் விற்றுவிட்டுத் திரும்பவும் தமிழகத்திற்குத் திரும்பியவர்.
ஃ கம்யூனிஸ்ட் மற்றும் சீனர்களின் அச்சுறுத்தல் / மிரட்டலால் உயிருக்குப் பாது காப்பின்றிப் பரித வித்தவர்கள்.
ஃ விசா பெறுவதில் சிக்கலை எதிர்நோக் கியவர்கள்.
ஃ 1920 களில் தொடங்கி பதினைந்து வருடங்களாக அச்சகத்தின் மூலம் 'தமிழ்க் கொடி' என்ற வாரப் பத்திரிகையை ஒ.எ.ஆர். அருணாச்சலம் செட்டியார் என்பாரைக் கொண்டு தமிழ்ப்பணி செய்தவர்கள்.( தமிழ் நேசன் பத்திரிகையும் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் ஆரம்பித்ததே)
ஃ நேதாஜியின் தீவிர ஆதரவாளர்கள்.
ஃ 15 ஆண்டுகளுக்கு முன் கம்பன் விழாவை மலாக்காவில் பிரமாண்டமாய் நடத்தி அடிப்பொடி சா.கணேசன், தமிழ்க் கடல் இராய. சொக்கலிங்கம், மு.பா. இரத்தினச் செட்டியார் போன்ற தமிழக அறிஞர் பெருமக்களின் இலக்கியப் பேருரையை நிகழ்த்தி தமிழ்ப் பணியைச் செய்தவர்கள்.
ஃ இந்தத் தெருவுக்கு 'நாட்டுக்கோட்டையர் தெரு' என்ற பெயரைக் கொண்டு வந்ததோடு பல நகரங் களில் அவர்கள் கட்டிய கட்டிடங்கள் பழைமை இன்றளவும் உள்ளன . (இப்பெயர் தற்போது வழக்கில் இல்லை)
ஃ தற்போது புதிய தலைமுறையின் மனமாற்ற மும், நவீன கல்வியின் வாயிலாகக் குலத்தொழில் மாற்றத்தையும் எதிர்நோக்கி பழைய மிடுக்கைப் பையப் பைய இழந்து வருபவர்கள்.
ஃ இன்று வங்கிக்கடன் பெறுவதில் பிற சமூகத்தைவிட சவாலை எதிர்நோக்குகிறவர்கள்.

வழக்கறிஞர் அருண், மலாக்கா செட்டி சமூகத் தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒருவரை முன் மொழிந்தார். அவர்தான் டத்தோ S.K.அருணாலம் பிள்ளை. அவரை அணுகினால் மலாக்கா செட்டி சமூகத்தவர் பற்றி நிறைய தகவல்கள் தருவார் என்று சகோதர உணர்வுடன் கூறி வழி காட்டினார். தொடக்கத்தில் கண்ட கல்லாப்பெட்டிக்காரருக்கும் இவருக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள். முன்னவர் பயந்துவாழ்ந்த சமூகத்தின் எச்சம்! அதற்குக் காரணம் நிச்சயம் அவரல்ல.

மற்றொரு குறுக்குத் தெரு வான ஜாலான் துக்காங் பெசியில் டத்தோ S.K.அருணாலம் என்பவர் செலவுக் கடை வைத்திருப்பதை அறிந்தேன். அந்தக் கடையை ஒட்டி யபடி மலாக்கா செட்டி சமூகத்தவர் 1781- இல் எழுப்பிய சிறீ பொய்யாத விநாயகமூர்த்தி கோவில் தென் பட்டது. தென்கிழக்காசியாவின் பழைமையான இந்துக் கோவில் இதுவாகும். பிற்காலத்தில் அக் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை நாட்டுக் கோட்டைச் செட்டியாரிடம் வழங்கப்பட்டுவிட்டதாக அறிந்தேன். ஆயினும், அக்கோயிலில் இன்னமும் மலாக்கா செட்டி சமூகத்தவரின் பெயர்களே கோயிலின் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ளன.

டத்தோ S.K.அருணாலம் என்பவர் நெற்றியில் குங்குமத்தோடு தமிழரைப் போலவே காணப்பட்டார். தொடக்கத்தில் தமிழிலேயே உரையாடினேன். மொழி புரியாத காரணத்தால் 'apa' (என்ன?) என்று என்னிடமே மலாயிலும் ஆங்கிலத்திலும் உரையாடத் தொடங்கினார். பின்பு, நான் வந்த நோக்கத்தை ஆங்கிலத்தில் சொன்னபோது கடுகடுப்புடனும் வேண்டா வெறுப்புடனுமே சந்திப்புக்குச் சம்மதித்தார். (Kamu mencari duit dengan membuat liputan tentang masyarakat kami, ya?) எங்களைப் பற்றிய தகவலைத் திரட்டி பணம் தேடுகிறீர்களா? என்று சொன்னபோது பதிலுக்கு நானும், "இது என் தொழிலல்ல, பல்கலைக்கழகத்தின் ஆய்வேட்டுக்காகவும் சுயநலத்துக்காகவும் உங்கள் காலடியில் வந்து விழுபவனல்லன், இதற்காக மழையை யும் பொருட்படுத்தாது வீதியில் அலைய வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. ஒரு புனிதமான பதிவு நிமித்தம் வந்துள்ளேன்" என்று தீர்க்கமாகச் சொன்னேன். எனது இருத்தலை நிலைப்படுத்த அவரது கடை வாயிலிலேயே நின்று பேசலாம் என்றேன். இப்படித்தான் பலர் வந்து போனதாகவும் மற்ற இனத்தவரைத் தவிர்த்துத் தமிழ் மாணவர்கள் எவரும் ஆய்வுகளைக் கொண்டு வந்து மருந்துக்கும் காண்பிக்கவில்லை என்றார். "என்னைத் தாராளமாக நம்பலாம். அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனல்லன் என்றேன்". பிப்ரவரி 2009இல் 'வல்லினத்தோடு' திரும்பவும் சந்திக்கிறேன் என்று சொன்னபோது அவரது முகத்தில் புன்னகை ரேகை படர்ந்தது.

தமிழ் விளங்குமா என்பதைத் தெரிந்துகொள்ள பிரத்தியேகமான கேள்வியைத் தொடுக்காமல், என் பேச்சிலேயே மும்மொழியையும் கலந்துதான் பேசினேன். தமிழில் அவருக்கு ஆர்வம் இருந்ததை அவ்வப் பொழுது அவர் உதிர்த்த சொற்களில் செவிமடுக்க முடிந்தது. தமிழ் உச்சரிப்பு என்னவோ பிற இனத்தவர் பேசுவது போல் மழலைத்தனம் மிகுந்திருந்தது. ஆனாலும், ஆகம ஐதீக பதங்களைத் தமிழரைவிடச் சரியாகவே உச்சரித்தார்!

செட்டி என்ற சொல்லை எழுதுவதில் மிகத் தெளிவாகவே இருந்தார். எங்கள் சமூகத்தைப் பலர் ' CETI ' என்றே தவறாக எழுதி வரு கின்றனர்; அதன் பொருள் வேறு என்று கூறிவிட்டு ஒரு வெற்றுத் தாளில் 'CHETTI' என்று பெரிதாய் எழுதி இப்படித்தான் எழுத வேண்டும் என என்னிடம் காண்பித்தார். முதலில் கூறப்பட்ட சொல் முழுக்க முழுக்க தமிழ்ச் சமுதாயப் பிரிவினரையும் வட்டித் தொழில் புரிபவரையும், பின்னது கலிங்கப்பட்டணத்தின் தொன்ம உறவையும், 14 ம் நூற்றாண்டில் மலாக்கா துறைமுகக் காலத்திலிருந்து உருவான புதுவணிகை சமுதாயம் எனவும், கடல் வழி வாணிபம் செய்த தந்தைக் குல பாரம்பரியம் என்பதையும் வலியுறுத்தினார். செட்டி, பிள்ளை, நாயக்கர், இராஜா, படையாச்சி, முதலியார், பத்தர், பண்டாரம் கலியன் என்ற பிரிவினர் இவர் களிடத்தில் வேரூன்றியிருப்பினும் ஒற்றுமையாகவே உள்ளனர்!

15 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, மலாக்காவும் அதன் சுற்று வட்டார பிராந்தியங்களும் இந்து சமயக் கோட்பாட்டில் வேரூன்றியும், ஆட்சி செய்த மன்னர் களை 'Raja' என்றும் 'Sri' என்றும் அழைத்து வந்த தாகவும் மேலும் விளக்கினார். எங்களது உரையாடல் சூடு பிடிக்கத் தொடங்கியபோது குறுக்கிட்ட தமிழக அன்பர் ஒருவர் தமிழேலேயே பேசி பொருளை வாங்கிச் சென்றதைக் கவனித்தேன். இவரும் நறுக் நறுக்கென்று இரத்தினச் சுருக்கமாகத் தமிழில்தான் பதிலளித்தார்; அது வாக்கியமாக இல்லாவிட்டாலும் அந்த மிடுக்கை ஒற்றைக் கண்ணால் இரசித்தேன்; சிரித்தார்.

மலாக்கா செட்டி சமூகத்தைப் பற்றி இன்னொரு கருத் தும் நிலவுகிறது. அதாவது, அந்தமான் தீவிலும் இன்ன பிற தீவிலும் வெள்ளையர்களால் நாடு கடத்தப்பட்டுக் கைதிகளாக நடத்தப்பட்ட தமிழர்கள் தான் (கட்டபொம்மன் உடன்பிறப்புகள் உட்பட) பின்னாளில் மலாக்காவில் குடியேறி வெள்ளையர்களுக்கு அடிமையாய்க் கூலி வேலை செய்து, அதன்பின் காலவ ரையறை முடிந்தபின் உள்நாட்டுப் பெண்களை மண முடித்துச் செட்டிச் சமூகமானார்கள் என்று கூறப் படுவதும் உண்டு. இதைத் தவிர்த்து முன்பு தமிழக காஞ்சி புரத்தில் ஏற்பட்ட கலவரத்தால் தப்பியோடி வந்தவர் கள்தான் இந்தச் செட்டிகள் என்றும் கூறப்படுவதுமுண்டு. இவ்விரு கருத்து களையும் முதற்கருத்தோடு ஒப்பு நோக்கும்போது முரண்படுவதைக் காணலாம். போர்த்துக்கீசியர், தாங்கள் மலாக்காவைக் கைப்பற்றித் தங்கள் வசமாக்கிக் கொண்டபோது (1511-1641) அவர்கள் வரைந்த மலாக்கா வரைபடத்தில், மலாக்கா கடற்கரையோரம் அமைந்த 'கம்போங் கிலீங்' என்ற கிராமத்தையும் குறிப்பிட்டு வரைந்து காட்டியுள்ளனர். அதோடு,அங்கு வாழ்ந்த செட்டி சமூகத்துக்குத் தங்களுக்கே உரிய தனித்த கட்டமைப்பும் ( செயலவைக் குழுமம்)அதற்குரிய பொறுப்பாளர்களும் தங்கள் சமூக நலனை மலாக்கா இந்து மன்னர்களிடம் எடுத்துக் கூறி உறவைப் பேணியவர்கள் என்ற தகவலும் உண்டு. மேலும், போர்த்துக்கீசியர் மலாக்காவைக் கைப்பற்றிய போது தங்கள் பாது காப்பைக் கருத்திற்கொண்ட இச்சமூகம், எதிராளிக்குக் கணிசமான பங்களிப்புச் செய்ததும் இங்குக் கவனிக்கத்தக்கது. போர்த்துக்கீசியரின் தலைமைக் கடற்படைத் தளபதி அல்போன்சோ டி அல்புகர்க் எழுதிய குறிப்பில் இச்செய்தி காணக் கிடைக்கிறது. போர்த்துக்கீசியர் மலாக்காவை வென்றதன் வாயிலாக அதற்குக் கைம்மாறாய் மலாக்கா செட்டிக்கு உயர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்புகளும் உள்ளன. போர்த்துக்கீசியருக்குப் புரிந்த அளப்பரிய உதவியால் மலாக்கா செட்டிகள் தங்கள் வணிகத்தை இடையூறுமின்றி நடத்தவும் முடிந்தது. ஒரு கதவு திறக்க மறு கதவு அடைக்கப்படும் என்பதுபோல டச்சுக்காரர்கள் வந்த பின்பு (1641-1824) இவர்களின் தலைவிதி மாற்றியமைக்கப்பட்டுப் பழைய செல்வாக்குச் சரிந்தது. மேற்கத்தையவர்களின் இராட்சச கப்பல்களுக்கு முன் இவர்களின் சிறு வணிகக் கப்பல் தொய்விழந்தது. இதன் காரணமாக விவசாயம் உட்பட வேறு பல தொழில்களை நாடிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டது. இது காறும் இவர்கள் வசித்து வந்த கம்போங் கிலீங் என்ற கிராமத்தையும் டச்சுக்காரர்கள் பறிமுதல் செய்து அதற்கு டச்சுக் கிராமம் என்று பெயர் சூட்டிக் கொண்டாலும் செட்டிமார்களில் சிலருக்கு அங்கு வசிக்க வாய்ப்பும் கிடைத்தது. டச்சுக் கவர்னர் போர்ட் (Gabenor Bort) இவர்களுக்கு ஒரு காணி நிலத்தையும் நிலப் பட்டாவையும் கொடுத்து அங்குச் சிறீ பொய்யாத விநாய கர் கோயிலையும் எழுப்ப வகை செய்தது. இக்கோயி லில்தான் மலாக்கா செட்டிகளின் விலைமிகு உடைமை களும் சொத்துகளும் பழம்பொருட்களும் வைக்கப்பட் டுள்ளன. அதே காலக்கட்டத்தில் இவர்களுக்கு மற்றப் பகுதிகளில் குடியிருப்பையும் உருவாக்கிக் கொடுத்தனர். கவர்னர் போர்ட் அறிக்கையின்படி, 1678 ஆம் ஆண்டில் மட்டும் 761 மலாக்கா செட்டிகள் இங்கு வசித்துள்ள தாகக் குறிப்பிட்டுள்ளார். இசுலாத்தில் ஐக்கியப்பட்ட செட்டிகளுக்கு இக்கோயிலுக்குப் பக்கத்தில் மசூதியை நிறுவுவதற்கும் வாய்ப்பளித்துள்ளனர். அம்மசூதி இன்றளவும் உள்ளது.அதன் பெயர் 'மஸ்ஜிட் கிலிங்'.

இதற்கிடையே, 19 ஆம் நூற்றாண்டில் ஒப்பந்தக் கூலிகளாய் இழுத்துவரப்பட்டவர்களுக்கும் மலாக்கா செட்டி சமூகத்தவருக்கும் எவ்வித உறவுமில்லை. இவர்கள் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்பதைப் போலிராமல் மலாக் காவையே தங்கள் பிறந்த மண்ணாகக் கருதுகின்றனர். நெல் விவசாயம் செய்தபோது இந்துக்களைப்போல் சிறு தெய்வ வழிபாட்டைத் தீவிரமாக நடத்தி வந்தனர். இவ்விடந்தான் இப்போது காஜா பெராங் என்றழைக் கப்படுகிறது. மலாக்கா செட்டிகள் நிறுவிய கோயில்கள் பின்வருமாறு:

பெரிய ஆலயங்கள் :
ஃ சிறீ பொய்யாத விநாயகர் கோவில் (1781)
ஃ சிறீ முத்து மாரியம்மன் (1822)
ஃ கைலாசநாதர் சிவன் ஆலயம் (1887)
ஃ சிறீ அங்காளம்மன் பரமேசுவரி ஆலயம் ( 1888 )
ஃ சிறீ காளியம்மன் ஆலயம் ( 1804 )

சிறிய ஆலயங்கள் :
ஃ லிங்காதரியம்மன்
ஃ அம்மன் ஆலயம்
ஃ தர்மராஜா ஆலயம்
ஃ கட்டையம்மன் ஆலயம்
ஃ ஐயனார் ஆலயம்

இந்த ஆலயங்களை நிர்வகிப்பதற்கு மலாக்கா செட்டிகளிடம் பொருளாதார வலு இல்லாமையால் திரௌபதியம்மன் ஆலயம் சிலோன் தமிழரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பொய்யாத விநாயகர் கோவிலைச் செல்வச் செழிப்புப் பொருந்திய நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் தாங்கள் நிர்வகிக்க அனுமதி பெற, அதன் பின்னர் நாட்டுக் கோட்டைச் செட்டியார் கள் அக்கோயிலைப் பராமரித்து வருகின்றனர். ஆனாலும், ஒப்பந்த அடிப்படையில் நோக்குங்கால் இக்கோயில் இன்னமும் மலாக்கா செட்டிகளினுடையதே.

ஆங்கிலேயர்களின் காலத்தில் (1824-1941) செட்டி சமூகத்துக்குத் தனிச் செல்வாக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. மறைந்த தேவநாயகம் செட்டி, லைனா அண்ணாமலை செட்டி, எல்.கனகசபை செட்டி, எம்.டி.பிள்ளை, தி.சொக்கநாதன் பிள்ளை போன்றோர் ஆங்கிலேயரால் கௌரவிக்கப்பட்டவர்களாவர்.

தற்பொழுது வசித்துவரும் மலாக்கா செட்டிமார்கள் ஐந்தாவது தலை முறையைச் சேர்ந்தவர்களாவர். ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த பதின்ம வயதினரின் சமூகம் குறித்த சிந்தனையைப் பிறகு விளக்குகிறேன். என்னுடன் உரையாடிக்கொண்டிருந்த இந்த நான்காவது தலைமுறைக்கு எப்படியும் ஐம்பது வயதைத் தாண்டியி ருக்கும். கம்போங் கிலீங்கில்தான் இவரின் முன்னோர் வாழ்ந்து வந்தனர். ' கிலீங்' என்ற சொல்லுக்குப் பல்வேறு வியாக்கியானங்கள் இருந்தபோதும், தற்போது அது தமிழர்களைப் பழிக்கும் பொருட்டுக்காகவே பிற இனத்தவரால் பிரயோகப்படுத்தப்படுகின்றது. அதில் பிரபலமான ஒன்று ' பாம்பையும் கிலீங்கையும் கண்டால் முதலில் கிலீங்கைத் தன் அடித்துக் கொல்ல வேண்டும்!' இந்த வாசகத்தின் பின்னணியில் தமிழர் சமூகத்தின் வளர்ச்சியும், பிறருக்கு அவர்கள் மீதிருந்த காழ்ப் புணர்ச்சியும் பொறாமையும் தெரிய வரும். கால்களில் சலங்கைகளை அணிந்து வணிகம் செய்தமையாலும் ( கிலீங் !கிலீங்! என்ற ஓசை), 'கலிங்'கப்பட்டணத்திலிருந்து வந்தமையாலும் இச்சமூகத்துக்கு இப்பெயர் தோன்றியதை இந்நாட்டின் வரலாறு கமுக்கமாய் மறைத்துவைத்திருக்கிறது. Kain Pelekat எனப்படும் மலாய் சமூகத்தவரின் பாரம்பரிய உடைகூட இவர்களின் வாயிலாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. மலாய் மொழி அகரமுதலியில் கிலீங் என்ற சொல்லுக்கு இவ்வகை உடையணிந்த இசுலாமியர்கள் என்றே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் இக்கிராமம் மலாக்கா துறைமுகத்தையொட்டி அமைந் திருந்தமையால் இவர்கள் வணிகத்தில் முழு வீச்சுடன் ஈடுபட்டிருக்கலாம் என்பதைத் தாராளமாக நம்பலாம். மதிநுட்பம், உழைப்பு, செல்வம் ஆகிய மூன்றும் இருந்த மையால் உள்ளூர்ப் பெண்கள் துணிந்து இவர்களைத் தங்கள் வாழ்க்கைத் துணைகளாக ஏற்றுக் கொண்டனர். இந்த ஆண்மக்கள் தென்மேற்குப் பருவக் காற்று (மே- செப்டம்பர்) வீசும் வரை மலாக்காவில் தங்கள் மனைவிய ரோடு தங்கிவிட்டு, காற்று ஓய்ந்தபின் மீண்டும் கடல் வாணிபம் செய்யப் புறப்பட்டனர். நமது மரபின்படி, ஆண்கள்தான் பொருளீட்டச் செல்ல வேண்டும். இந்தப் பிரிவால் அவர்களுக்கு வாய்த்த குறுகிய காலத்தில் தமிழைத் தங்கள் குடும்பத்தாருக்குக் கற்றுத் தர வாய்ப்பின்றிப் போனது. ஐதீ க மற்றும் கலாச்சாரக் கூறுகளை மட்டும் விட்டுச் செல்ல அவை கொடிபோல் வழிவழியாய்ப் படர்ந்தன; மொழியோ மறக்கப்பட்டது. அப்படிச் சென்றவர்களுள் பலர் திரும்பி வரமுடியாமல் போயிருக்கலாம் அல்லது கடல் சீற்றத்துக்குப் பலியாகியு மிருக்கலாம். மலாக்கா நீரிணையிலும் இவர்களின் கப்பல்கள் சில மூழ்கியுள்ளன. 1990 களின் பிற்பகுதியில், நகர விரிவாக்கத்திற்காக மலாக்கா கடற்கரையைத் தூர்த்தபோது மண்வாரி இயந்திரங்கள் தோண்டிய மணலில் இந்தியத் துணைக் கண்டத்தின் குறிப்பாகத் தமிழகத்துப் புராதன பொருட்களும் சில சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில இப்பொழுது காஜா பெராங்கில் (காஞ்சிபுரம்) உள்ள மலாக்கா செட்டி தொல்பொருட்காட்சிச் சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

14 ஆம் நூற்றாண்டில் மலாக்காவுக்குப் பரமேசு வரா என்ற இந்து மன்னன் பெயர் சூட்டியது உண் மையாயினும், இதைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக மாற்றிய பெருமை மலாக்கா செட்டி மார்களையே சாரும். மலாக்கா அரண்மனையில் 'Dato Bendahara' போன்ற பெரும்பதவிகளில் இடம் பெற்றதோடு, மீனவ கிராமமாக இருந்த மலாக்காவை வணிக விருத்தி செய்து அளப்பரிய பங்கை யாற்றியுள்ளனர். மலாய் இலக்கிய நூலான 'Sejarah Melayu' வில் இவர்கள் வசித்த கம்போங் கிலீங் என்ற கிராமம் பரபரப்பான வணிகத்தில் இயங்கியதைக் குறிப்பிட்டுள்ளது.1424 ஆம் ஆண்டு பரமேசுவரா மன்னன் , பாசாய் (வட சுமத்திரா ) இசுலாமிய இளவரசியை மணமுடித்த பின்பு 'Sultan Iskandar Shah' எனும் பெயரையேற்க, மலாக்கா வாழ்மக்களும் இசுலாத்திற்கு மாறியபோது மலாக்கா செட்டிமார்களில் சிலரும் மதம் மாறினர் என்பதை மறுப்பதற்கில்லை. எஞ்சிய சிலரே இந்து பண்பாட்டில் உறுதிப்பாட்டுடன் இருந்தனர். அவர்களின் வழித்தோன்றல்கள்தான் இன்றிருக்கும் மலாக்கா செட்டிகள்! கூடக் குறைவாகத் தற்போது 50 குடும்பங்கள்தான் இருக்கின்றன.

இதே இனக்கலப்புச் சூழல்தான் (assimilation) அதே காலக்கட்டத்தில் மலேசியாவில் குடியேறிய சீன சமூகத்துக்கும் நேர்ந்தது. பண்பாட்டில் சீனத்தையும் மொழிப் பயன்பாட்டில் செட்டிகள் போல் மலாய் மொழியையும் தொடர்பு மொழியாகவே புழக்கத்தில் கொண்டுவந்துள்ளனர் சீன வழித்தோன்றல்கள். இச்சமூகத்தவரை ஆண்களை 'Baba' என்றும் பெண் களை 'Nyonya' என்றும் அழைக்கப்பட்டு வருகின்ற னர்.இதேபோல, 15 ஆம் நூற்றாண்டில் மலாக்காவை ஆண்ட போர்த்துக்கீசிய சமூகத்தவரும்கூட உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் புரிந்து கொண்டு 'Serani' எனும் அடையாளத்தை நிறுவியுள்ளனர். தற்போது இவர்கள் வாழ்ந்து வருகின்ற குடியிருப்புப் பகுதி 'Portugis Settlement' என்றழைக்கப்பட்டு வருகிறது. தனித்துவமிக்க இம்மூன்று சமூகங்களும் மலாக்காவைத் தவிர மலேசியாவின் பிற மாநிலங்களில் காணவே முடியாது. மலேசியாவின் பழைய சமூகம் என்று அங்கீகரிக்கப்பட்டிருப்பினும், இவர்களுக்குப் பூமி புத்ரா (மண்ணின் மைந்தர்) என்ற தகுதி இன்னமும் வழங்கப் படாமல் இரண்டாந்தர குடிகளாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். (ஆனால், 'Serani' சமூகத்துக்கு இந்தத் தகுதி வழங்கப்பட்டுவிட்டதாக அறிகிறோம்). இசுலாம் சமயம் கீழை நாடுகளுக்கு வருவதற்கு முன்பே இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து மண்ணை மேம்படுத்தியி ருப்பினும் இவ்விரு சமூகங்களும் இன்னும் மண்ணின் மைந்தர்களாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதற் காகவே பல காலமாக அரசியல் ரீதியாகவும் அமைதி வழியிலும் போராடி வருகின்றனர். மிகக் குறைந்த எண் ணிக்கையிலான இவர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதில்லை. அண்மைய காலத்தில் சிறு அளவிலான மாற்றம் அடைந்துள்ளதையும் மறுக்க முடியாது. மலாக்கா செட்டிகளைப் பொறுத்தமட்டில் மொழியைத் தவிர அவர்களின் பெயர்களும் சமய சடங்குகளும் விழாக்களும் இந்து முறைப்படியும் தமிழ்ப் பெயர்களையும் கொண் டிருப்பதால் இந்தியர்களாகவே சுட்டப்படுகின்றனர். இந்துக்கள் கொண்டாடும் அனைத்துப் பண்டிகைகளை யும் நம்மைக் காட்டிலும் விமரிசையாக் கொண்டாடி வருகின்றனர். கோயில் திருவிழாக்களில் இந்த விழுமியத் தைக் காணலாம். தாய்மொழி மலாய் மொழிதா னென்றாலும் இந்து சமயத்தவர் என்ற ஒரே காரணத் துக்காக இவர்கள் கவனத்திற்கப்பாலாகிவிட்டார்களோ என்னவோ? எனவே, இவர்களுக்குச் சிறப்புச் சலுகை வழங்கப்படுவது முறையல்ல என்பது அரசின் வாதம். தொடக்கக் காலத்தில் மலாக்காவை வளப்படுத்திய வணிகர்களாகத் திகழ்ந்திருந்தாலும், காலவெள்ளத்தில் அச்சிறப்பையெல்லாம் இழந்து சராசரி தொழிலிலும் குறைந்த வருமானத்திலுமே இவர்களின் இன்றைய வாழ்க்கைப் படகு நகர்கிறது. நன்கு படித்தவர்கள் தொழில் காரணமாக நாட்டின் பெருநகரங்களில் இடம்பெயர வேண்டிய கட்டாயத்திற்கு இலக்காகியுள் ளனர். ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றைப் பெற முடியும் என்பதால் சுயத்தை அடைமானம் வைக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். மத்தளத்தின் இரு பக்க அடி போல்தான் ஐந்து நூற்றாண்டுகளாக இவர்களின் இருத்தல் இந்நாட்டில்.

இச்செட்டிச் சமூகத்தின் பெரும்பாலோர் வெளிப்பார்வைக்கு ( தோலின் நிறம் ) மலாய்க்கார, சீன கலப்பைக் கொண்டவர்கள் போல் தோற்றமளிப்பர். முதியவர்கள் மலாய்க்காரர் சார்ந்த உடைகளைத்தான் அணிகின்றனர். இவர்களின் முதல் தலைமுறையைப் பார்ப்பதற்கு அசல் மலாய்க்காரர்களைப் போலவே அனைத்திலும் தோற்றமளித்தனர். இன்றுள்ள இளவயது பெண்கள் அவ்வப்பொழுது சேலை அணிவதையும் பார்க்கமுடிகிறது. மலாய் மொழியைத் தங்கள் தாய்மொழியாகவும் இந்து சமயத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாகவும் இரு கண்களாய்க் கொண்டுள்ளனர். இந்த இரண்டு கூறுகளையும் விட்டுக் கொடுக்க இவர்கள் தயாராயில்லை. இந்த மரபை உடைக்கும் திருமணத்தையும் மதமாற்றுச் சூழலையும் எதுவாயினும் ஒரு போதும் இவர்கள் அனுமதிப்பதில்லை. இதுதான் இந்தச் சமூகத்தின் அழுத்தந்திருத்தமான அடையாளம்.

பதினாறு வயது மதிக்கத்தக்க ஜீவனேசுவரன் மற்றும் பிரவீன் ஆகிய இருவரையும் காஜா பெராங்கில் உள்ள செட்டி கிராமத்தில் அவர்களின் இல்லத்திலேயே சந்திக்க நேர்ந்தது. வீட்டின் அமைப்பு முறை மலாய்க் காரர்களின் வீட்டை நினைவுபடுத்தியது. வாயிலில் தெய்வப் படமும் தோரணங்களும் காட்சி தந்தன. மலாயிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே உரையாடியபோதும் அவர்களின் கைப்பேசியில் தமிழிசையும் தமிழ்ப்பாடல்கள் மட்டுமே ஒலிக்கின்றன. அவற்றின் பொருள் கொஞ்சம் தெரியும் என்றனர். இருவருமே மலாய்க்கார சமூகம் பேசுகின்ற ஒலி உச்சரிப்பு, பொழிப்பு முறைகளையே கையாளுகின்றனர். பெற்றோரிடமும் அப்படித்தான் அளவளாவுகின்றனர். சமையல் வகையறாக்களில் இந்திய-மலாய் சமூகத்தவரின் ஆதிக்கமிருப்பினும் நம்மைப்போல சில வகை புலாலை முற்றிலும் மறுக்கின்றனர். தலையில் அணிகின்ற 'Kopiah" கூட மலாய்க்காரர்களைப் போலிருந்தாலும், இந்திய முப்பாட்டன் பயன்படுத்திய தனித்துவமிக்க அடையாளம் அதில் பளிச்சிடுகிறது. முன்னொரு காலத்தில் வணிகராய் இங்கு வந்திறங்கியபோது தலையில் பெரியதொரு துவாலைத் துண்டை முக்கோண வடிவைப்பில் மடித்து அணிந்து கொண்டு வேலை செய்வார்களாம். அதுவே காலப்போக்கில் அவர்களின் அடையாளமாய் நிலைத்துவிட்டது. இந்து சமய நெறி ஆழமாக வந்தடை யவும், தேவாரத் திருவாசகத்தைத் தடுமாற்றமின்றி உச்சரிக்கவும் வார இறுதியில் இங்குள்ள Dato Cha Char எனும் அம்மன் ஆலயத்தில் தமிழாசிரியரைக் கொண்டு தமிழ் கற்பிக்கப்படுகிறது. இந்து சமயத்தை ஆழமாகக் கற்க வேண்டியே அவர்கள் தமிழைக் கற்று வருகின்றனர். வீட்டில் தமிழ் மொழி புழக்கமின்றி மொழியின் சரளம் எவ்வாறு கைக்கூடும் என்பது எனக்குள் கேள்வி எழுந்தது. இதற்குப் பதிலுரைக்க யத்தனமடைந்தனர். "இதுதான் எங்களின் அடையாளம். மற்றவர்கள் எண்ணுவதுபோல் நாங்கள் முழுக்க முழுக்கத் தமிழர்கள் அல்லர். எங்களைத் தமிழராகப் பார்க்காதீர்கள். அப்பாவின் வழி எங்கள் முதல் தாத்தா, தமிழர்தான். ஆனால், எங்கள் கொள்ளுப் பாட்டி முதல், இன்றைய அம்மா வரை யாரும் தமிழரல்லரே! அவர்கள் தமிழையே பேசியதில்லை! இம்மண்ணைச் சேர்ந்த பெண்கள்! மேலும்,அவர்கள் இசுலாத்திற்கு முந்தைய மலாய்க்காரப் பெண்கள், ஜாவானியப் பெண்கள், சீனப் பெண்கள், பாத்தாக் பெண்கள்தானே? இப்படியிருக்க எங்ஙனம் தமிழ் எங்களுக்குத் தாய்மொழியாக இருக்க முடியும்? தமிழகத்திலும் எங்களுக்கு இரத்த உறவுடையோர் இருப்பதை எப்படி அடையாளம் காண்பது? ஆனாலும்,பிற மொழிகளைவிட தமிழை அதிகமாகவே நேசிக்கிறோம். ஆனால், தலைவர்கள் சிலர் எங்களுக்குத் தமிழ் மொழிப் பற்றில்லை என்று கோடி காட்டியபடி வரலாறு தெரியாமல் பேசி வருவது வேதனையளிக்கிறது. நாங்கள் தனித்து நின்று வாழ்வை அடையாளப்படுத்துவது தவறா?" எனக் கேட்கின்றனர் இந்த மூன்றாம் படிவ இளைஞர்கள் இருவரும். எதிர்காலத்தில் காஜா பெராங் கிராமத்தை விரிவாக்கம் செய்து தமது செட்டி சமூகத்தின் இருத்தலை உறுதிபடுத்த அரசிடம் முறையாகக் கோரிக்கை வைத்து அதை எப்படியும் நிறைவேற்றப் போவதாகத் தீர்க்கமுடன் கூறினார் இத்தலைமுறையைச் சேர்ந்த ஜீவனேசுவரன். எந்தவொரு சமூகமும் தாம் குறுகிப் போவதையுணரும் பொழுதுதான், பெரிய பெரிய இலட்சியங்கள் கிளர்ந்தெழும். இன்று மலாக்கா செட்டிக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிற அச்சம், நாளை...?

ஜீவனேசுவரனின் அப்பா திரு S.K.பிள்ளை ,அம்மாவோ 'Nyonya' சமூகத்தைச் சார்ந்தவர். நமக்குக் காணக் கிடைக்காத பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய அரிய கலைப் பொருட்களைக் கண்ணாடிப் பேழையில் கண்போல பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். இவை தங்கள் மூதாதையருடையவை என்று பெருமிதம் பொங்கக் கூறினார். நம்மவர் வழக்கில் இருந்த வெற்றிலை பாக்கு இடிக்கும் கருவி போன்ற சில கருவிகள் இன்று மலாய்க்காரச் சமூகத்தில் புழக்கத்தில் உள்ளன என்பது வேறு விஷயம்.

இவர்களின் சுவடுகள் குறித்த சேகரிப்புகள் காஜா பெராங் சாலையில் அமைந்துள்ள 'மலாக்கா செட்டி தொல்பொருட்காட்சிச் சாலையில்' காணலாம். அங்குக் காசி சிவ மகாராணி என்பவர் என்னை வரவேற்றுத் தமிழில் உரையாற்றினார். இவரது அப்பா தமிழர் என்றும் அம்மா மலாக்கா செட்டி சமூகத்தவரைச் சேர்ந்தவரென்றும், இங்குள்ள குபு தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றதாகவும் கூறினார். இப்பொருட்காட்சிச் சாலையில் இவர்களின் வரலாற்றை விட, கலை, கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் பழைமை வாய்ந்த படங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. இவர்களைப் பிரதிநிதித்த தலைவர்களின் உருவத் தோற்றங்கள் கொண்ட படங்களைப் பார்த்தால் இவர்கள் புறப்பட்ட புள்ளிக்கும் தமிழர்களுக்கும் ஒட்டு உறவே இல்லையோ என்பதை உணர்த்தும். அப்படியொரு வேறுபாடு உருவத்திலும் உடையிலும்.

நான் அவ்விடத்தைவிட்டு அகன்றபோது எனக் குள் சித்தப்பிரம்மை பிடித்தது மாதிரி இனம்புரியாத மையமொன்று அவர்களின்பால் ஒட்டிக்கொண்டேயிருந்தது. இந்த நிமிடம் வரை என் நாளங்களில் வழிந் தோடும் அணுக்களில் ஒன்று துள்ளிக் குதித்துக் கொண்டேயிருக்கிறது. வேறுபாடு என் கண்களுக்குத் தெரியவில்லை. ஏன்?!

Wednesday, September 2, 2009

Why we stay here, even when we love home-Malaysikini Merdeka Special Report-By K.kabilan





Kampung Chulaborn 12, or Ban Chulaborn Patana 12, in Thailand is no ordinary village. It is located deep in a jungle with the nearest town Shukirin about an hour's drive.

The distance to this village from the border town of Golok is some 70 kilometres but the rugged terrain and poor road conditions mean a travel time of almost two hours.

The residents of this village are also a group of 'special visitors of the Thai government' for they are all members of the 10th Regiment of the Communist Party of Malaya (CPM).

This village used to be their base camp and after the 1989 peace agreement between the CPM, the Thai government and the Malaysian government, these former members of the party were permitted to remain living there.

When it started, the village had about 260 people, most of whom were CPM members and their families, who had agreed to lay down their weapons. They were led by their revered leader Abdullah CD and his wife, Suriani Abdullah.

Today their number stands at about 460 – including extended families and outsiders, and they are still under the watchful eye of their 'protectors', Abdullah and his wife.

“This is beautiful, peaceful village. We have what we want here. The crime rate is almost non-existent. We are a close community,” said 52-year-old village head and ex-communist Dome Za, a Malay-speaking Thai.

“Although I'm the village head, we still seek advice from Abdullah and Suriani on the running of the village,” he added.

About 20 veteran communist leaders, all peers of Abdullah, are still living in this village. Almost all of them were from Malaya originally.

They had joined the 10th Regiment in May 1949 and then moved to the Thai-Malaya border in 1953, to remain in the jungles until the peace deal was signed in 1989.

But why didn't these former guerrilla fighters return to their homeland?

'Guiding lights' of the regiment

Abdullah and Suriani, who had visited Malaysia a several times, including a visit to the Perak Sultan, were adamant in remaining in the village.

“We have our home here... our family is here, our friends are here,” Abdullah told Malaysiakini.

“Also I'm against the Internal Security Act as well as a host of other laws in Malaysia. I don't want them to catch me using any small excuse,” he said with his trademark laughter and slap on the thigh.

The influence of this couple is visible in the village but that is understandable as they were the guiding lights of the regiment during their war years in the jungle.

“We realise that it is time for the younger generation to take up the leadership role. We also realise that both Abdullah and Suriani are getting older and are not as healthy as they once were,” said Dome.

“We will surely miss them when they are no longer with us but I think we can manage somehow.”

For others, such as veteran guerrilla fighter Asi (left in photo), Abdullah and Suriani are like his parents.

“I joined the movement at the age of 11 and I have known them since I was 13,” said the 70-year-old Sungai Siput-born man of Indian parentage.

He is also the only remaining Indian communist left. (His story will be published tomorrow).

“I can't imagine my life out of this village,” said Asi, who is married to a Thai communist and has a daughter.

After the peace agreement, each communist member who wanted to return to Malaysia was given RM300 per month for three years by the Malaysian government.

Those who elected to stay put at the village got a Thai government financial assistance of 540 baht (about RM54) per month for three years, a house and six acres of land.

First batch of university graduates

“The Thai government has helped us a lot and continues to support us,” said the village head.

He added that the Thai princess Chulaborn Mahidol adopted the village in 1993 until 2004 and during that period, the village was supplied with electricity and water supply.

Today almost all houses have a television set with their distinctive long antennas to get better access. One or two houses even have Internet access using a satellite receiver.

There is a government clinic for the villagers with a hospital attendant on stand-by on all working days.

A museum to highlight the historical moments of 10th Regiment is a must-see at this village but it is in need of financial aid to continue running.

They also have a primary school attended by children from the village and other neighbouring villages. This year's intake stands at 88 pupils.

“We also have six of our young ones studying in universities in Thailand. They are our first batch of university students. We also have about 100 of our children studying in secondary schools outside of this village, either in Narathiwat or elsewhere in southern Thailand,” said Dome, whose son is one of the pioneer batch of undergraduates from the communist village.

'We don't want to return home'

Most of the villagers tend their plot of land with rubber or fruit trees but complain of a low return due to over-supply of fruits and low yield of rubber due to the climate.

“But I guess we will still call this place home. Back in Malaysia, we have nothing... only bad name perpetuated by the government's lies against our contributions although we had fought so hard for the sake of Malaya in the first place,” said veteran guerrilla fighter Shukor Ismail, 80.

“Even though I have no blood relations here... these are all my comrades, my friends and I want to be with them until the end. Not with some strangers, though relatives, in Malaysia,” he added, with a touch of irony.

“Malaya is still my country. I still have feelings for it. I love Malaysia, or I would not have struggled and sacrificed my life for it. However it just makes better sense to live in Thailand now.

“Not just because they have taken better care of us but also because of the fear of how we will be looked at if we return home,” added Shukor.

“For that reason, we don't want to return to Malaysia, our beloved homeland,” he said with a tinge of sadness and regret in his voice.

And this sums up the sentiment of almost all communist veterans in this village although some of them are in regular contact with their families in Malaysia.

Deleted from victors' history: The other freedom fighters




At midnight on Aug 30, 1957, millions of Malayans rejoiced the momentous occasion of the nation's father Tunku Abdul Rahman replacing the Union Jack with the Malayan flag.

About 450 kilometres away, deep in a thick jungle at the border of Malaya and Thailand, a smaller band of brothers (read: armed comrades) was huddled in front of a fire, pondering what would that act of lowering the Union Jack mean to them.

Fifty-two years on, they are all bitter that the truth about their role in gaining independence for the country remains unrecognised, and are worried that it would die with them.

This group of men and women – all members of the fearsome 10th Regiment of the Communist Party of Malaya led by Abdullah CD – have been based in this border area since the end of 1953 following a continuous onslaught against them by the British forces.

Numbering about 550 people, these guerrilla fighters had waged a war to get rid of the British since the formation of their regiment on May 21, 1949. They were part of a larger CPM war unit under its Malaya National Liberation Army which had about 8,000 fighters at its peak.

However, with the declaration of Emergency in 1948, the party was banned and for the next 12 years, they were in constant battle with the authorities (first the British, then the Malayans with the help of the British) who were adamant about getting rid of the communist guerrillas.

The resulting offensive drove many communist guerrillas into the Thai-Malaysian border, where the subsequent Malaysian government continued their attacks until a peace deal was struck in 1989.

By 1989, the strength of the CPM had dwindled and following the peace agreement, they settled in four 'peace villages' in southern Thailand.

What remains now is a history in the perspective of the victors where these CPM guerrilla's are demonised as terrorists.

In view of the nation's 52nd Merdeka, Malaysiakini recently visited one such communist 'peace village' in Sukhirin, southern Thailand, to talk to some of these battle-hardened “communist insurgents” on their role in gaining independence.

The village – Kampung Chulaborn 12 – is home to about 460 people, made of the families and extended family members of the original Regiment 10 members.

It had about 260 people – mostly ex-communist members – when it was established in 1989. Today, the remaining war veterans include Abdullah CD, his wife Suriani Abdullah and about 20 of his comrades.

People were suffering under the British

The 10th Regiment was established in Temerloh by Abdullah CD and as such most of its members had come from Temerloh and other parts of Pahang.

One of them is Shukor Ismail, now 80, who was taken in by the communist ideology in 1948 and was a pioneer member of Regiment 10.

“At that time the people suffered under the British rule. We had just come out of the Japanese occupation, which was also a painful period. Many had already started feeling that we did not need the British to rule us,” he recounted outside his attap house in the peace village.

“The farmers were feeling the economic pinch as they were not getting enough. It seemed as though all our hard work and money was being shipped off to London for the empire.

“I started my war against them because of this – they took what's mine to enrich themselves,” said Shukor, whose body was clearly showing the evidence of hardship it had undergone.

He added that the people of Temerloh had an early start in nationalism as a result of the anti-British war initiated by Dato Bahaman in 1891 to 1895.

“His failure was the key to our struggle. The descendants of Dato Bahaman in Temerloh always knew that we had to get rid of the British and we managed to do that with CPM and our regiment.”

Shukor also had no doubt over the role played by his comrades in freeing this nation from the occupiers.

“This was our revolution and we were successful, despite what the rulers of Malaysia say today.

“It was our campaign which brought about the change in the mindset of the people that they could self-rule and that they could chart their own future without any outside interference.

“What had the others done actually? They were colluding with the British. And now they are denying us of our role,” he said with a tinge of anger in his voice.

'We drove them away'

Shukor went on to say that it was a falsehood to state that Malayan independence was gained without shedding a drop of blood.

“That makes no logic at all for the politicians to say we gained our independence peacefully. For me, the price of independence came with our blood being shed.

“We drove the British away. They left because they couldn't outwit us in jungle warfare and they were defeated as they knew they could never stop us from attacking them. They did not want to continue with that burden so they handed the country to Umno, knowing that the armed struggle would be between Malayans after that.

“And even when they gave the country to Umno, the British were still holding much influence, be it in security matters or in financial matters. They were also reaping the benefits of our economy,” he added.

He said that it was never the intention of the communist to fight among Malayans. The enemy was the British and “their stooges”, he added.

“I'm sad that the people in Malaysia today are unaware of this truth. They only believe in what has been told to them by the present rulers, who find it suitable to give prominence to whatever role they played in getting the independence.

“The present government is still living in that lie. It's in the history books, it's in their national monument... look at Tugu Negara. What do you see? You see British soldiers kicking local fighters. That does not reflect the correct historical fact,” said the former guerrilla who spent 40 years in jungle.

He also added that he felt independence was not fully attained by the people of Malaysia as “the residues of British rule are still prevalent in our system”.

“When it comes to political power in the nation, it is still a leftover of the British concept of race-based rule. Are the people fully empowered to do what they want for the nation? Is everyone equal in Malaysia today?

“What is different from the British divide-and-rule policy? Economically, is everyone well-to-do? Who is controlling the economy? Just like the British period, it is still in the hands of a group of people, not with the rakyat,” he noted.

The victor's version is skewed

This was a point which was agreed to by his colleague Awang Yaakob, a former team leader of the 10th Regiment.

The 75-year-old born in Temerloh, who goes by the name Hatta, joined the movement at the age of 15 in 1949.

He lamented that the youth of today had no inkling of the role played by his comrades in gaining independence.

“Our revolution was a success and it brought about independence for the nation but sadly our role is being kept in the dark by the politicians who ultimately benefited from our struggles,” said the pint-sized but valiant-hearted man with plenty of battle scars in his body.

“The younger generation today have no way to find out about the respective roles played by CPM, Umno and other nationalists in gaining independence because what we have now is only the version of one party - Umno.”

However, he said that he was glad that his family back in Temerloh and other friends knew the truth.

“My family back in Temerloh applaud me for that. Forget the politicians, for the rest, we have done a service for the nation,” he said.

Like his comrade Shukor, Hatta too spent almost 40 years in the jungle for which he bears many scars from gun-shot wounds on his body as evidence of his part in getting the British out.

“Of course we killed them (the British), but they also killed us. Don't just blame us for the all the atrocities. It was a war, you had to kill to stay alive and to keep up your struggle,” he said without a hint of regret.

“We were clear in what we wanted and we had achieved that,” he said while insisting that it was time for the Malaysian government to reveal the truth about the roles played by his communist comrades.

“The government is just fearful that its influence will wane if the people know the truth,” he said.

Women fought just as fearlessly

Another former communist guerrilla, Siti Mariam Idris, 83, meanwhile said it was the independence movement mooted by the Malay nationalists, who later joined the CPM, that paved the way for women participation in politics.

“In CPM we had so many women leaders, people such as Shamsiah Faker, Zainab Baginda and Suriani to name just a few.

“They played a big role in emancipating the kampung women on issues of being independent and free.

“Are these facts reflected in the history today? Are these heroines mentioned anywhere by the government?” she asked.

Siti Mariam, known as Atom among her comrades, joined the revolution in May 1949.

She hails from a little waterhole called Lubuk Kawah, the hotbed of nationalism in Temerloh at that time.

Atom was a section leader and was involved in major fights “with the enemy”, especially in Bukit Tuel and Bukit Rambutan in 1968/69.

Her ever-smiling face and down-to-earth persona clearly masks the fortitude she had in carrying firearms for the sake of her nation.

“I took up arms to free my nation, for my race and religion. I have no regrets for doing that.

“Women fought just as fearlessly for our ideologies as we had an equal role to play and were accorded the same level of support and respect.

"My only regret is that our fight for independence is being sidelined by the others,” she said.

Nowadays Atom is much more interested in mundane matters such as getting a new broom instead of tackling enemies.

But never for a moment can one dismiss this as a mark of people like Atom having forgotten their cause and revolution. That spirit of loving their nation is still pretty much burning bright in their hearts.