Monday, April 19, 2010

THREE Malaysian will attend entrepreneurs summit



THREE Malaysian entrepreneurs will attend a two-day Presidental Summit on Entrepreneurship that will be held in Washington in the US starting April 26.

They are Warisan Global Sdn Bhd chief executive officer Dhakshinamoorty “Dash” Balakrishnan, Nadicorp Holdings Sdn Bhd chairman Datuk Mohd Nadzmi Mohd Salleh and Free Malaysia Today news portal editor-in-chief K. Kabilan.

In a statement released in Kuala Lumpur yesterday, the US Embassy said the summit is hosted by US President Barack Obama together with the US Department of State and the US Department of Commerce.

Meanwhile, Dhakshinamoorty told Business Times yesterday that it is a great opportunity for Malaysia to be selected to attend the summit.
“From my understanding, this is the first summit of its kind and being hosted by a sitting US President,” he said.

He said the summit is expected to give a new paradigm to entrepreneurs worldwide and provide a new platform for global entrepreneurs to interact among each other.

Dhakshinamoorty said upon return from the summit, he plans to conduct roadshows and spread the knowledge gained from the event with other entrepreneurs especially start-ups.

The summit will be used to identify how the US can deepen ties between business leaders, foundations, and entrepreneurs in the US and Muslim communities around the world.

It will also highlight successful entrepreneurs and identify opportunities to build and strengthen economic and social entrepreneurship ecosystems.

Among key issues and challenges to entrepreneurs that will be discussed are technology and innovation, access to capital, unleashing women and youth entrepreneurship, mentoring and networking, and fostering a culture of entrepreneurship.

On the selection of attendees for the summit, Dhakshinamoorty said a portal was set up by the US government in November last year where entrepreneurs around the world nominate themselves. Only 250 people were selected.

Participants from over 50 countries in five continents have been invited to participate in the summit that will highlight the role entrepreneurship can play in addressing common challenges, while building partnerships that will lead to greater opportunity abroad and at home.

Tuesday, April 13, 2010


இயற்கை அழகு .....கவிதை அழகு
என் மீது நீங்கள் கொண்ட அன்பு அழகு ,
அதை விட உங்கள் நட்பு மிக மிக அழகு...
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

Monday, April 5, 2010

நித்தியானந்தாவும் மறைக்கப்பட்ட மாணவர் கொலைகளும்

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகங்களை குறிப்பிடுவர்... அரசு எப்போது எல்லாம் தவறு இழைக்கின்றதோ அப்போது எல்லாம் அதை தட்டிக் கேட்கும் தார்மீக கடமை இந்த ஊடகங்களுக்கு இருக்கின்றது. தமிழகத்தின் இன்றைய ஊடகங்கள் அவ்வாறு இருக்கின்றனவா என கேள்வி எழுப்பினால் மவுனமே நமக்கு பதிலாக கிடைக்கிறது.
அரசு தனது பதவியை தக்க வைத்து கொள்ள எப்போதும் பிரச்சனையின் வேரை பார்க்காமல் அதை எப்படி திசை திருப்புவது என்பதிலே தான் தன் கவனத்தை செலுத்துகிறது... சமீப காலத்தில் தமிழத்தில் சில முக்கியமான பிரச்சனைகள் கொழுந்து விட்டு எரிந்த போது அது சாமர்த்தியமாய் திசை திருப்பப்பட்டன. சோதித்து பார்க்க வேண்டும் என்றால் கடந்த ஓர் ஆண்டின் நாளிதழ்களை கொஞ்சம் புரட்டி பாருங்கள்...இரண்டு நாட்கள் முக்கியமாய் இருக்கும் செய்திகள் பின் காணாமல் போய் இருக்கும்.பெரும்பாலான தமிழக ஊடகங்கள் அப்பட்டமாய் அரசுக்கு துணை போவது தெரிய வரும்..

அண்ணாமலை பல்கலை கழக மாணவர்கள் கலவரம்:

அண்ணாமலை பல்கலை கழகத்தில் பொறியியல் படித்து வந்த ஜர்கண்டை சேர்ந்த கெளதம் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார்... 'தாமதமாய் கொடுக்கப்பட்ட சிகிச்சையால் தான் அவர் உயிரிழந்தார்' என்று கூறி வட இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு வந்த போலீசார் காட்டுமிராண்டித் தனமாக தாக்கியதில் இது வரை பல மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிகின்றன.

பிரபல சாமியார் நித்தியானந்தாவின் லீலைகள்

தனது ஆன்மீக சொற்பொழிவின் மூலம் பெரும் புகழையும், பணத்தையும் சம்பாதித்தவர் சுவாமி நித்தியானந்தா. ஒரு நடிகையோடு நெருக்கமாக அவர் இருக்கும் வீடியோ காட்சிகளை திரும்ப திரும்ப ஒளிபரப்பியது ஆளும் கட்சியின் ஆதரவை பெற்ற தொலைக்காட்சி ஒன்று.
இரண்டு சம்பவங்களும் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவம் போல் தோன்றும், உண்மையும் அது தான்... ஆனால் வெகு லாகவமாக ஊடகங்களால் அடுத்தடுத்து கோர்க்கப்பட்டு ஒன்றை மற்றொன்று மறக்கடிக்கச் செய்து விட்டது என்பது தான் நாம் யாவரும் அறியாத நிஜம்.
சரி செய்தி 2 ல் இருந்து துவங்குவோம். சாமியார்கள் தான் இன்றைய தமிழகத்தின் சாபம்... ஆண்டவனின் அருளுரைகளை வழங்குகிறேன் பேர்வழி என மக்கள் மனங்களை கரைத்து இவர்கள் அடிக்கும் கூத்துகள் கொஞ்ச நஞ்சமல்ல... பிரேமானந்தா துவக்கி வைத்த பட்டியல் இன்று நித்தியானந்தா வரை நீள்கிறது...
இந்தியாவில் தமிழகத்தில் உருவான பகுத்தறிவு சிந்தனையாளர்களை போல் வேறு எங்கும் உருவானதும் இல்லை, உருவாக போவதும் இல்லை.. இருப்பினும் இங்கே தான் மதத்தின் பெயரால் போலிகளும், பித்தலாட்டக்காரர்களும் குவிந்து கிடக்கின்றனர்..அந்த குவியலில் ஒருவர் தான் நித்தியானந்தா..
சரி பொது வாழ்வில் வந்து, ஆன்மீக வேடமிட்டு இது போன்று தவறு செய்யும் சாமியார்களை என்ன செய்யலாம்??? வேறு வழியே இல்லை, அரபு நாடுகளை போல் நடு ரோட்டில் நிக்க வைத்து 'நறுக்'
சரி செய்தி 1க்கு வருவோம்.... விபத்துகளில் அடிபட்டவர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் சரிவர கவனிக்கப்படாமல் உயிரிழப்பு ஏற்படுவது தமிழகத்தில் தொடர்கதையாகவே இருக்கிறது. சக மாணவன் ஒருவன் தவறான சிகிட்சையாலோ இல்லையேல் சரியான சிகிச்சை கிடைக்காமலோ உயிர் இழக்க நேரிடும் போது மாணவர்களுக்கு ஏற்படும் துயரமும், பெரும்கோபமும் இயல்பானதே. உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும் மாணவர்களை சரியாக கையாள தெரியாத ஆளும் வர்க்கம் தனது அரசு ரவுடிகளை வைத்து அடித்து துரத்தியதில் பல மாணவர்கள் கொல்லப்பட்டனர்... இதை விட ஒரு அரசின் கையாலாகாத தன்மைக்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்.. ஜனநாயகம் நாம் வாழும் சமூகத்தில் எத்தனை வன்மையாக நசுக்கபடுகிறது என்பதை பாருங்கள்.
ஆறு இந்தியர்கள் தலிபான்களால் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி கேட்ட உடனையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனன் ஆப்கானுக்கு சென்று உள்ளார். சொந்த நாட்டுக்குள் ஒரு மாநிலத்தில் அதுவும் ஒரே பல்கலைகழகத்தில் பல வட இந்திய மாணவர்கள் அரசு ஊழியர்களால் அடித்து கொல்லப்பட்டிருகின்றனர். என்னவென்று கேட்க வேண்டிய மத்திய அரசோ மவுனம் சாதிக்கிறது...உலகுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டிய ஊடகங்கள்???
உண்மையாக நடந்த செய்திகளை வெளி கொண்டு வராமல் இருப்பது கூட பத்திரிகை தர்மத்திற்கு எதிரானதே.
ஒரு உண்மையை மறைக்கவே முன்பே தமக்கு கிடைத்த வீடியோ ஆதாரங்களை தற்போது வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறது தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியும், ஒரு புலனாய்வு பத்திரிக்கையும்..
நடந்த இரு பிரச்சனைகளும் மிக முக்கியமானவை...நம்மை ஆளும் அரசும், ஊடகங்களும் உண்மையையை திரிக்க பார்க்கும் போது ஒரு தேசத்தின் நேர்மையான குடிமகனாய் நாம் சந்திக்கும் சவால்கள் என்ன??? இந்த சூழ்நிலையில் நம் கடமைகள் என்ன??? சிந்திப்போம் !!!