Wednesday, May 5, 2010

சோதிடக்கலையும் வானவியலும் ஒன்றா?


தமிழும் சோதிடக்கலையும் பிரிக்க இயலாதது. ஏனெனில் இக்கலையை நமக்கு உருவாக்கியவர் குறுமுனி அகத்தியர்தாம். இவரேயாம் தமிழையும் உருவாக்கியதாக பதிவாகியுள்ளது. இச்சோதிடக்கலையைத்தான் நம்மவர்கள் வானவியலோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால் அதை நிரூபிக்க நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

நமது அடுத்த தலைமுறைதான் இந்த குறையை தீர்த்து வைக்க வேண்டும். எனது இந்த மனக்குறையை ஆதாரங்களோடு விளக்குகிறேன். சோதிடம் தோன்றிய காலம் எது என்று இன்று வரை யாராலும் அறுதியிட்டு கூற இயலவில்லை. ஆனால் வானவியலில் சந்திரன் புவியை சுற்றுவதற்கு எவ்வளவு நாள்கள் எடுத்து கொள்கிறது என்று எப்போது கண்டு பிடித்தார்கள் என்று கூற இயலும்.

இப்போது நாம் இந்த தலைப்பை அலசுவோம்.

வானமண்டலத்தில் இருக்கும் விண்மீண்களை (நட்சத்திரங்களை) 12 தொகுப்புகளாக பிரித்திருக்கிறார்கள். வானமண்டலம் மொத்தம் 360 பாகை என்றால் ஒவ்வொரு தொகுப்பும் 30 பாகை. இப்படி பட்ட ஒவ்வொரு 30 பாகையையும் ஒரு வீடு என்று ஜோதிடத்தில் அழைக்கிறார்கள்

பூமியில் இருந்து பார்க்கும் போது ஒரு கிரகத்தின் பிண்ணனியில் எந்த நட்சத்திர கூட்டம் தெரிகிறதோ அதுவே அந்த கிரகம் இருக்கும் வீடு என்று அழைக்கப்படுகிறது.

சந்திரன்:
சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் சுமார் ஒரு மாதம்.

இன்று பூமியில் இருந்த பார்த்தால் சந்திரனின் பின்னால் ஒரு நட்சத்திர கூட்டம் தெரியும். மூன்று நாட்கள் கழித்து பார்த்தால் அடுத்த நட்சத்திர கூட்டம், அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்தால் அதற்கு அடுத்த நட்சத்திர கூட்டம். சந்திரனுக்கு பின்னால் எந்த நட்சத்திர கூட்டம் தெரிகிறதோ சந்திரன் அந்த வீட்டில் இருப்பதாக கூறுவார்கள்.

இப்போது அறிவியலை பார்க்கலாம். சந்திரன் புவியை சுற்றுவதற்கு 27.3 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. எனவே அது ஒரு நாளைக்கு 13.2 பாகை திரும்புகிறது. இது எவ்வாறெனில் ஒரு முழு வட்டத்தின் அளவு 360 பாகை. சந்திரன் ஒரு வட்டப்பாதையில் நம் புவியை சுற்றி வருகிறது. எனவே 360/27.3=13.2 பாகையாம்.

ஆகவே சந்திரன் புவியை சுற்றி வரும் வட்டத்தின் அளவு 360 பாகை மற்றும் அது ஒரு மாதம் என்று சோதிடத்திலும் 27.3 நாள்கள் என்று அறிவியலிலும் கூறுகிறார்கள். இது ஒரு சிறிய அளவு வித்தியாசமே.

ஒரு நுண்நோக்கியும் இல்லாமல் நம்மவர்கள் இந்த அளவு வானவியலை தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கையில் வியப்பே மேலிடுகிறது. நம் குழந்தைகளாவது வாய் பிளந்து பார்த்துக்கொண்டிராமல் அதை ஆராய்ச்சி செய்து ஏதேனும் கண்டு பிடிக்கும் நிலையில் இருக்க வேண்டுமென என் உளம் நினைக்கிறது.

சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்


எனது துணிவுடைய இளஞர்காள் நீங்கள் அனைவரும், பெருங் காரியங்களைச் செய்ய பிறந்தவர்கள், என்ற நம்பிக்கை கொள்ளுங்கள். குட்டி நாய்களின் குரைத்தலைக் கண்டு அஞ்சாதீர்கள்!

உமது நாடு வீரர்களை வேண்டி நிந்கின்றது. வீரராகுக. ஒரு கற்பாறையைப்போல் உறுதியாக நிற்பீராக. மெய் எப்பொழுதும் வெல்கிறது.

நண்ப, அழுவதேன்? உமக்குள் எல்லாச் சக்தியும் உள்ளது. பலவானே உனது எல்லாம் வல்ல இயல்பை வரவழை. மூவுலகமும் உன் காலடியில் அமரும். வெல்வது ஆன்மா ஒன்றே. சடமன்று.

பலமே வாழ்வு, பலமின்மையே மரணம். பலமே இன்பமும் நிலையான அழிவற்ற வாழ்வுமாம்.

நமது பலமின்மையே நம்மிடம் பொய்யும், களவும், கொலையும், வேறு பல பாவச்செயல்களும் இருப்பதற்கு காரணமாம்.

நமக்கு வேண்டிய ஒரே பொருள் பலமே. உலகத்தின் நோய்க்கு மருந்தும் பலமே.

எழுந்து நில்லுங்கள். பலமுடையவராகுங்கள், தைரியமாயிருங்கள். வாழ்க்கையை உங்கள் பிரியப்படி அமைத்துக் கொள்ளுங்கள்.

எல்லா விலங்குகளிலும், எல்லாத் தேவ தூதர்களிலும் பார்க்க மனிதனே உயர்ந்தவன்.

நாம் போதிய நெடுங்காலம் அழுதாயிற்று. இனியும் அழ வேண்டாம். எழுந்து நின்று ஆண்மையுடன் போராடுங்கள்.

நாம் பல பொருள்களைப்பற்றிக் கிளியைப்போல் பேசுகின்றோம். ஆனால் செயலளவிலில்லை. இதன் காரணம் யாது? உடற்பலவீனம். இவ்விதப் பலமற்ற மூளையால் ஒன்றையும் செய்யவியலாது.

நீதியாயிரு, தைரியமாயிரு, முழுமனதும் ஊன்றியவனாயிரு, பிறலாத ஒழுக்கமுடையவனாயிரு!

அறிவுக்குத் தொந்தரவு கொடாதெ, கோழைகளே பாவம் புரிவர். தைரியசாலிகள், பாவம் புரியார், ஒவ்வொருவரையும் நேசிக்க முயல்க.
வஞ்சனையால் பெரும்பணி எதனையும் ஆற்ற முடியாது அன்பாலும், சத்தியத்தாலும், பெரும் சக்தியாலுமே பெருங்காரியங்கள் நிறைவேறுகின்றன.

ஆ! நீங்கள் உங்களது இயல்பை மட்டும் உணர்வீரேல் நீங்கள் ஆத்மாக்களே, தெய்வங்களே!

நான் மெய்யைப் பின்பற்றி நிற்பவன், மெய் ஒருக்காலும் பொய்யோடு ஒன்று சேராது, சத்தியமே வெல்லும்!

இவ்வுலகம் கோழைகட்கன்று. ஓட முடியாத வெற்றியையோ, தோல்வியையோ கோராதே!

பழிவாங்குதலைப்பற்றி ஒருக்காலும் நான் யோசிப்பதில்லை, பேசியதுமில்லை. எப்பொழுதும் பலத்தைப்பற்றியே பேசியுள்ளேன்.

எழுந்திருங்கள், உழையுங்கள், இவ்வாழ்வு எத்தனை நாள்? இவ்வுலகில் தோன்றிய நீங்கள் ஏதாகிலும் விட்டுச் செல்லுங்கள். அப்படிச் செய்யாவிடில் மிருகங்களுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

கடலைப்பார். அலையைப்பாராதே. எறும்பிற்கும் தேவ தூதனுக்கும், எவ்வித வேற்றுமையையும் பாராதே. ஒவ்வொரு புழுவும் இயேசுவின் சகோதரனாகும்.

சிவ பெருமானுக்குப் பணி செய்ய விரும்புவோன், அப்பெருமானின் மக்கட்குப் பணி செய்ய வேண்டும்!

நம் வாழ்நாட்களில் பெரும் பாகம் துக்கம் நிறைந்ததாகும். என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த விடயம். அதைத்தடுக்க எப்படி முயன்றாலும், அது வந்தே தீரும் என்பதையும் நன்கு அறிவோம்.