Tuesday, December 7, 2021

ஜீவ யோகம்

 


....

வாழ்வில் சுவராஷ்யம் எது..?

....

அறுசுவையில் 

ஒரு சுவை கூடுவதும் சுவராஷ்யம்


கூடிய அச் சுவை 

சுமையாகி போவதும் சுவராஷ்யம்


அறுசுவையும் அளவாக இருப்பது 

ஒரு சுவராஷ்யம்


இன்பம் 

துன்பம் 

உழைப்பு

ஓய்வு

அதிக பேச்சு

மௌனம் 


இந்த ஆறும் அறுசுவையே


உழைத்து கலைத்தவனுக்கு

ஓய்வு ஒரு சுவராஷ்யம்


ஓய்விலே ஒயாமல் இருப்பவனுக்கு

உழைக்க வாய்ப்பு வருவதும் சுவராஷ்யம்


இன்பத்தை அனுபவிப்பவனுக்கு

ஒரு சுவராஷ்யம்..

அதன் விளைவாக வரும் 

துன்பமும் ஒரு சுவராஷ்யம்.


அளவுக்கு அதிகமாக பேசுபவனுக்கு

அதிலும் ஒரு சுவராஷ்யம்..


அந்த அதிக பேச்சுக்கு அடுத்து வரும் 

மௌனமும் ஒரு சுவாரஸ்யம் 

...


சுவராஷ்யத்தில் இருக்கும் சுவரஷ்யம்

எது என்றால் 


ஒருவன்  அவனுக்கு பிடித்த

ஒரு வகையான சுவாரஷ்யத்தை

தேடி ஓடுகிறான்


அப்படி ஓடியவனுக்கு

காலம் எதிர்மறையான ஒரு சுவாரஷ்யத்தை பரிசாக கொடுக்கும். 

....

*அன்பு* என்னும் சுவராஷயம் தேடி ஓடுபவனுக்கு

காலம் 

*பகை* என்னும் சுவராஷ்யத்தை

பரிசாக கொடுக்கும். 


*இன்பத்தை* தேடி ஓடுபவனுக்கு

காலம் 

*துன்பத்தை* பரிசாக கொடுக்கும்


வாயை மூடாமல் பேசுபவனுக்கு

காலம் 

மௌனத்தை பரிசாக கொடுக்கும்.


இதில்  செம சுவராஷ்யம் 

எது  என்றால் 

காலம் 

அவனை சமன் பண்ணவே

எதிர்மறையான சுவராஷ்யத்தை

கொடுக்கிறது .

காலத்தின் சமண் செய்யும்

ஒரு அன்பு முயற்சி இது

என்பதை கூட அறியாமல் 

மீண்டும் 

அவன் 

அவன் தேடிய 

அன்பு

இன்பம் 

அதிக பேச்சு 

ஆகிய சுவராஷ்யத்தை நோக்கியே

ஓடி கொண்டு இருப்பதுதான். 


அதன்

விளைவு 

காலம் 

அவனுக்கு 

*சமணன் முத்திரையை*

இறுதியாக அவனுக்கு

வரமாக கொடுத்து

அவனை சரி செய்ய போராடும். 


காலத்தின்

அந்த சமண முத்திரையின்

சுவராஷ்யம் 

*பைத்தியம்* ஆவதே.

....

*உடலும்* 

*காலமும்* 

ஒருவனுடன் தொடர்பிலே இருக்க 

முயல்கிறது 

அவன் உடலில் 

உயிர் இருக்கும் வரை 


*சுடாகி* போன உடலுக்கு 

தாகமாக *தண்ணீர்* கேட்பதும்.. 

*சக்தி* இழந்த செல்கள் 

பசியாக *உணவு* கேட்பதும்..

உழைதுத்து ஓடிய தேகத்திற்கு

தூக்கமாக ஓய்வை கேட்பதும்..

ஆரோக்யம்,நலிவுற்ற உடல் 

பசியாமையால்

உணவை வேண்டாம் என்பதும்..

ஒரு உடல் 

அவனோடு சுவர்ஷயமாக 

உறவாட முன் வருகிறது என்பதே.

...

காலமும் 

இன்பம் அளவுக்கு அதிகமாகும் போது

அதை சமண் செய்ய 

துன்பத்தை கொடுப்பதையும்..

அளவுக்கு அதிகமாக 

மன

உறவு வளரும் போது அதை சமண் செய்ய 

பகையை கொடுப்பதும்.


அதையும் மீறி 

ஒருவன் உடலோடு

காலத்தோடு, ஒத்துவரவில்லை

என்றால் 

காலம் 

தீரா 

பஞ்ச கர்ம நோயை பரிசாக கொடுத்து 

மரணம் மூலம் 

அவனை சமண் செய்வதும்

காலத்தின் சுவராஷ்யமே

....

பிறவியில் 

மிக பெரிய சுவராஷ்யம் எது..?


ஒருவனை 

அவனை 

சமண் செய்ய 

*காலமும் *

*உடலும்* முயற்சி செய்கிறது..

இதுவே 

*சிவ முயற்சி*

...

அந்த 

சிவ முயற்சியை உணர்ந்தவனை

உடலும். காலமும்  ஆசிர்வதிக்கும்.


*ஜீவ யோகம்* என்பது

எவன் ஒருவன் 

தன்னை சமண் செய்ய 

*காலத்திற்கும் *

*உடலுக்கும்* 

ஒரு வாய்ப்பே கொடுக்காமல்

*தன்னை தானே*

*அறுசுவையில்* இருந்தும் 

*அறு அவஷ்தையில்*  இருந்தும்

*சமண்* செய்கிறானோ

அவனை 

காலமும் 

உடலும் வணங்கும் .,

வரமாக 

காய கல்ப சரீரம் கொடுத்து

உலகில் 

சித்து சிவ ரகசியத்தை 

சிரசிலே மலர செய்து 

பேரின்பத்தை 

வரமும் கொடுக்கும். 

....

பேரிண்பம் எது...?

....

எந்த இன்பம் 

எந்தகைய அளவு தாண்டினாலும்

அதன் விளைவாக 

துன்பம் விளையாமல் 

இன்பம் மட்டுமே விளைகிறதோ

அந்த இன்பமே 

சிவ இன்பம் 

ஜீவ இன்பம் 

பேரிண்பம்.


சிவமுயற்சியை ஜீவம் தன்முயலாக கூட 

ஜீவமும் பேரிண்ப சிவமாகுமே

No comments:

Post a Comment